பத்தாம் துன்பம் பழி தீர்த்திடவே
பார்வோன் உள்ளம் தளர்ந்தது.
கத்தியும் கல்லும் தொடாமலேயே,
காணா விடுதலை மலர்ந்தது.
இத்தனை அடிமைகள் விடுதலையாக,
புத்தியுள்ளவர் அறிந்து கொள்வார்
பொய் பேசாயிறை சொன்னதாம்!
(விடுதலைப் பயணம்: 12).

The Truth Will Make You Free
இருபது முப்பது இலகாரத்தில்,
இறையின் மக்கள் வளரவே,
அருவருப்பாக எகிப்தியர் கண்டு,
ஒருவரும் எவ்வித பயன் பெறாமல்,
ஊழியம் செய்து தளரவே,
தருகிற பொருளியல் பேறு கொண்டு,
தம்மினத்தையும் தூக்கினர்!
பிறரை வதைத்து, பெரு மேடெழுப்பி,
பிரமிட் என்பதாய் விளிக்கிறார்.
குறை காணாத பல பேர் எழும்பி,
கோபுர அழகிலும் களிக்கிறார்.
பறை அறிவிக்கும் பற்பல நூலை,
பண்பாடென்றும் தொகுக்கிறார்.
இறையோ பெரு மூச்சை நினைத்து,
ஏழைக்கு வழி வகுக்கிறார்!

இப்படி எகிப்து வந்தவர் தொகையோ,
எழுபது என்று சொல்கிறார்.
அப்படி வந்தவர் தான் பெருத்து,
அடிமை நிலைக்குச் செல்கிறார்.
ஒப்பிட இயலாத் துயரின் வகையோ,
எப்படி இவரை மீட்க இயலும்?
இறையே என்று தாழ்கிறார்!
இப்படி எகிப்து வந்தவர் தொகையோ,
எழுபது என்று சொல்கிறார்.
அப்படி வந்தவர் தான் பெருத்து,
அடிமை நிலைக்குச் செல்கிறார்.
ஒப்பிட இயலாத் துயரின் வகையோ,
எப்படி இவரை மீட்க இயலும்?
இறையே என்று தாழ்கிறா
