அறிவா? அறிவீனமா?

இந்தியனாக எழுதுகிறேன்!

இதை வாசிக்கவே பலர் மறுக்கலாம்; சிலர் வெறுக்கவும் செய்யலாம். எனினும் உங்கள் எண்ணத்தை, எழுத்தை நான் மதித்து வாசிப்பதுபோல இதையும் வாசிக்க வேண்டுகிறேன்.

இந்தியன் ஒருவன், இயேசு கிறித்துவே தனக்கு எல்லாம் என்று நம்பிக்கொண்டு, அவரது அன்பையே வாழும் வழி முறையாகக் கொண்டு, இந்தியாவில் வாழ முடிவெடுத்தால், இந்தியாவிற்கு அதனால் கேடுகள் வருமா? பிற இந்தியருக்கு அவனால் பாடுகள் வருமா?

வரும் என்று எண்ணி, பலர் எழுதுவதும், எச்சரிப்பதும், இடர்கள் கொடுப்பதும், சிலருக்கு ‘அறிவு’ என்றும், ‘ஆன்மிகம்’ என்றும், இன்னும் ஒருபடி மேலேறி, ‘இந்திய நாட்டுப் பற்று’ என்றும் தெரிகிறதே!, இது அறிவா? இல்லை, அறியாமையா?

கடவுளிடம் அன்புகொள்; காணும் மனிதரிடமும் (அயலாரிடமும்) அன்புகொள்! இதுதானே இயேசுவின் திருவாக்கு.

துன்புறுத்தும் நிலையிலும் வன்முறையை நாடாது, அன்புகொள்வதுதானே அவர் வாழ்ந்து காட்டிய வழிமுறை.

இதைச் சொல்ல உரிமையும், இதன்படி வாழ உரிமையும் கொடுத்த நாடு, என் இந்திய நாடு. இந் நாட்டைப் போற்றுவதும், இந்நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பதும் இந்நாட்டில் பிறந்த எனது கடமையல்லவா?

நாடு என்பது, பலருக்கு மண்ணாகத் தெரியலாம். அதை விரும்பி, நாட்டுப் பற்று என்று சொல்லலாம். மண்ணும், நிலமும், மாபெரும் மலையும், தண்ணீர் ஆறும், தருகிற வளமும், மட்டுமா நாடு? அவற்றை மட்டும் போற்றுவதுவா நாட்டுப் பற்று?

நாட்டின் மண்ணை விரும்புவோரே, நாட்டில் வாழும் அல்லது வாடும் மனிதரைப் பாருங்கள். அவர்கள் உங்கள் இனம், மொழி, இடம், சாராதவர்களாய் இருக்கலாம்; அல்லது சமயம், பண்பாடு, கொள்கைகளைச் சேராதவர்களாய் இருக்கலாம். அல்லது செல்வங்கள், சொத்துக்கள் பாராதவர்களாய் இருக்கலாம். ஆயினும் அவர்களும் இந்தியர்களே. அவர்களை வெறுத்து, அவர்கள் வாழும் மண்ணை மட்டும் விரும்பினால் அது நாட்டுப் பற்றாகுமா?

இவர்கள் மீது அன்புகொள் என்கிற கிறித்துவின் வாக்கு, எப்படி இந்திய நாட்டுப் பற்றிற்கு எதிராகும்? இதைப் பின்பற்றும் கிறித்தவர் எப்படி இந்திய எதிரியாக இருக்க முடியும்? அன்பும், நன்மையையுமே அறவழியாகும். அவற்றை எதிர்ப்பது அறியாமையேயன்றி வேறு எதுவாகும்?

இந்த அறியாமையை அறிவு என்றும், இதுவே நாட்டுப் பற்று என்றும் தொடர்ந்து பேசுகிற, எழுதுகிற, ‘அறிஞர்’ பெருமக்களே, உங்கள் எண்ணங்களில் அன்பு பிறவாதவரை, உங்கள் பேச்சு வீண், உங்கள் எழுத்து வீண், உங்கள் செயல்கள் வீண்; உங்கள் வாழ்க்கையுமே வீண்.

வீணாய் வாழ்ந்து வீணாய்ப் போவதைவிட, அறிவை நாடுங்கள்; அன்பில் பிறக்கும் இறையறிவைத் தேடுங்கள்.

அன்பிலா வாழ்வில் அறிவுமில்லை!

அயலார் வெறுத்தல் நெறியுமில்லை.

வன்முறை வாழ்க்கை வழியுமில்லை;

வாழ உதவுவோம், பழியுமில்லை!

-கெர்சோம் செல்லையா.

ஒருவனுக்கு ஒருத்தி!

ஒருவனுக்கு ஒருத்தி!


கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:18

18  தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான், புருஷனாலே தள்ளப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறான்.  

கிறித்துவில் வாழ்வு:

ஒருவனுகொருத்தி, ஒருத்திக்கொருவன்,

உலகில் எவர்க்கும் போதுமய்யா.

அருள்கிற இறைக்கு அடங்கா மனிதன்,

அவனது வீட்டினில் தீது அய்யா.

திருத்தம் வேண்டும், திறன்போல் வாழ்வேன்,

தெரிவித்தால், அது வாது அய்யா.

வருத்தம் வராத வாழ்வில் மகிழ்வீர்;

வழிமுறை இறையின் தூது அய்யா!

ஆமென்.

ஒழியாத வாக்கு!

ஒழியாத வாக்கு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:17.

17  வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்.  

ஒழியாத வாக்கு!கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:17.

17  வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்.  

கிறித்துவில் வாழ்வு:

அழியாத செல்வம் எதுவெனக் கேட்டேன்,

அழிந்து மாளும் உலகத்திலே.

தெளியாத நாளில் சேர்த்தவை இழந்தேன்.

தேடிய எதுவும் நிலைக்கலையே.

விழியாலே எட்டா விண்ணைக் கேட்டேன்,

வெந்து நொந்து இருக்கையிலே;

ஒழியாத வாக்கை இறையிடம் பெற்றேன்.

உணர்ந்தோர் எவரும் தொலைக்கலையே!

ஆமென்.

இறையரசு!

இறையரசு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா  16:16.
16  நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் வழங்கிவந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள்.  

இறையரசு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா  16:16.
16  நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் வழங்கிவந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:
திருச் சட்டமும், தீர்க்கருரையும்,
தெரிவிக்கும் இறை வாக்கு,
இருட் கூட்டமும் இயலாமையும்,
இணைந்தோருக்கு இடி தாக்கு.
உருவடிவிலும் உயிரளிப்பிலும்,
உரைக்கிற இயேசு வாக்கு,
அருட்பொழிவிலும், அன்பமைப்பிலும்,
ஆள்வதால் அதை நோக்கு!
ஆமென்.

தன்னை உயர்வாய் எண்ணும் தன்மை!

தன்னை மேலோன் என்னும் எண்ணம்!கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:15.
15  அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது. 
கிறித்துவில் வாழ்வு:
தன்னை உயர்வாய் எண்ணும் தன்மை,

தவறு என்று உணர்ந்தவர் யார்?
என்னைப் போலப் பிறரைப் படைத்த,
இறையின் வாக்கைக் கேட்பவர் யார்?
முன்னர் நிற்கும் மனிதர் முகத்தில்,
மும்மை தெய்வச் சாயலைப் பார்.
இன்னாள் இதனை ஏற்கா மனிதர்,
இகழ்வடையும் காட்சியும் பார்!
ஆமென்.

நீடிக்கும் ஊரடங்கு!

தொடரும் ஊரடங்கு!
நாற்பது நாட்கள் நோன்பிருக்கும்,
நம் திரு நாட்டின் உறவுகளே,
தோற்பது தொற்று நோயாயிருக்கும்.
தொடர்ந்து வீட்டில் வேண்டுங்களே.
ஏற்படுந் துன்பம் என்று போகும்,
என்றறியா நம் அரசுகளே,
பார்ப்பது யாரை? பாரும் ஏழை;
பரிவில் உதவி, தாண்டுங்களே!
கெர்சோம் செல்லையா. 

வாய்ப்பூட்டு!

வளர்ச்சியும் வாய்ப்பூட்டும்!

வளர்ச்சி என்ற வாக்கை வைத்து,
வந்தார் ஒருவர் ஆட்சிக்கு.
சுழற்சியாக உலகம் சுற்றிச்
சொன்னார் கதைகள் கட்சிக்கு.
தளர்ச்சியுற்ற நாட்டோருக்கோ,
தந்தார் சில அதிர் வேட்டு.
கிளர்ச்சி என்று எவரும் பேசார்;

கொரோனாகூட  வாய்ப்பூட்டு!

-கெர்சோம் செல்லையா.

இரண்டு பேர்க்கு ஊழியமா?

இரண்டு பேர்க்கு ஊழியமா?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:13-14.

13  எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.

14  இவைகளையெல்லாம் பொருளாசைக்காரராகிய பரிசேயரும் கேட்டு, அவரைப் பரியாசம் பண்ணினார்கள்.

கிறித்துவில் வாழ்வு:

இருவர் அமர்ந்து என்மேல் ஆண்டால்,

யார் சொல் கேட்டுப் பிழைத்திடுவேன்?

ஒருவர் பேச்சும் இரண்டாய் இருந்தால்,

உண்மையில் எப்படி உழைத்திடுவேன்?

அருமை வாழ்க்கை ஒருமுறை என்றால்,

அதனை எப்படி வாழ்ந்திடுவேன்?

விருப்பம் ஓன்று இறையென்றானால்,

விண்ணின் வாக்கில் ஆழ்ந்திடுவேன்!

ஆமென்.

உயிர்ப்பு நாள் வாழ்த்து!

உயிர்ப்பு நாள் வாழ்த்துகள்!

இறப்பின் பின்பு வாழ்வு உண்டோ?
என்று கேள்வி கேட்பவரே,
சிறப்பின் தெய்வ மகன் எழும்பும்,
செய்தியை ஆய்ந்து பார்ப்பீரே.
பிறப்பின் நோக்கம் ஓன்று உண்டோ?
பெரிய கேள்வி கேட்பவரே,
திறப்பின் வாயில் தீமை ஒழியும்;
தொண்டின் உயிர்ப்பில் பார்ப்பீரே!
-கெர்சோம் செல்லையா.

நல்வெள்ளி!

நல் வெள்ளி!
நல்வெள்ளி என்னும் நாளில்,
நாங்கள் செல்வோம் கோயில்.
சொல்லேழும் தருகிற போதில்,
சுமைகள் இறங்குமே அதில்.
பல்லாண்டாய் வந்த பேறு,
பாதித்ததை எண்ணிப் பாரு.
இல்லங்களில் வேண்டல் கூறு.
இறையருளே இனிச் சோறு!
-கெர்சோம் செல்லையா.