சொல்லும் சொல்லில் ஆளுமை கண்டோர்,
இல்லாரிடத்திலும், இருப்பார் இல்லிலும்,
இயேசு செல்வதும் நாம் கண்டோம்.
பொல்லா நோய்களும், புரியா வலிகளும்,
புறப்பட்டோடுதல் நாம் கண்டோம்.
எல்லோர் நோக்கும் இறையை நோக்கும்,
இருப்பிடம் இயேசுயெனக் கண்டோம்!
(மத்தேயு 8:1-17).
The Truth Will Make You Free
வாழ்த்துகள்!
இந்திய விடுதலை நாள்
வாழ்த்துகள்!
பஞ்சம் பசி பிணி, பாழாக்குகிற ,
பாரதம் என்று கிடக்காமல்,
கொஞ்சம் கூட குறைவில்லாமல்,
கொழிக்கும் நாடாய் எழுக.
வஞ்சம் வைத்து, பிறரையழிக்கும்,
வல்லமை தேடி நடக்காமல்,
நெஞ்சம் நிரப்பி, வாழ வைக்கும்,
நேரிய நாட்டைத் தொழுக!
-கெர்சோம் செல்லையா.
எந்த மலையென யானும் அறியேன்;
இயேசு அமர்ந்து பொழிகிறார்.
தந்தை இறையின் அரசிற்கழைத்து,
தாழ்மை நாடி மொழிகிறார்.
இந்த நாளிலும் இதுபோற் செய்தி,
இல்லை என்றே சொல்கிறார்.
நைந்த நெஞ்சும் செம்மையாகும்,
நேர்வழி வந்தோர் வெல்கிறார்!
(மத்தேயு: 5-7)