இறைவனின் ஆவி பெறவேண்டும்.

இறைவாக்கு கேட்போமா?
இறையருள் பெறுவோமா?

இறை வாக்கு: மத்தேயு 26:62-64.
“அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவரிடம், ‘ இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி கூறமாட்டாயா? ‘ என்று கேட்டார். ஆனால் இயேசு பேசாதிருந்தார். மேலும் தலைமைக் குரு அவரிடம், ‘ நீ கடவுளின் மகனாகிய மெசியாவா? வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன் ‘ என்றார். அதற்கு இயேசு, ‘ நீரே சொல்லுகிறீர்; மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்றார்.”

இறைவாழ்வு:
இந்தக் கேள்வியின் பதிலை அறிய,
இறைவனின் ஆவி பெறவேண்டும்.
மைந்த னிறையை யார் என்றறிய,
மனதை நாமும் தரவேண்டும்.

சொந்த இனமே சிலுவையில் கொல்ல,
சொல்வதை இன்று கேட்பவர் யார்?
அந்த நாளில் அவர் வரும்போது
அழாதிருக்க, இயேசுவைப் பார்!
ஆமென்.

இறைவாக்கு கேட்போமா? 
இறையருள் பெறுவோமா?

இறை வாக்கு: மத்தேயு 26:62-64.
"அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவரிடம், ' இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி கூறமாட்டாயா? ' என்று கேட்டார். ஆனால் இயேசு பேசாதிருந்தார். மேலும் தலைமைக் குரு அவரிடம், ' நீ கடவுளின் மகனாகிய மெசியாவா? வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன் ' என்றார். அதற்கு இயேசு, ' நீரே சொல்லுகிறீர்; மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்."

இறைவாழ்வு:
இந்தக் கேள்வியின் பதிலை அறிய, 
இறைவனின் ஆவி பெறவேண்டும்.
மைந்த னிறையை யார் என்றறிய,
மனதை நாமும் தரவேண்டும்.

சொந்த இனமே சிலுவையில் கொல்ல,
சொல்வதை இன்று கேட்பவர் யார்?
அந்த நாளில் அவர் வரும்போது 
அழாதிருக்க, இயேசுவைப் பார்!
ஆமென்.
 

தவற்றை நினைப்பீரா?

நல்வாழ்த்து:
மேன்மேலும் உம்மைப் புகழ்வேன்;
மேன்மை தங்கிய என் அரசே.
நான் பாடத் தகுதியற்றேன்;
எனினும் புகழ்வேன், உம் அரசே!

நல்வாக்கு:
மத்தேயு 26:59-61.
“தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடினர். பல பொய்ச் சாட்சிகள் முன்வந்தும் ஏற்ற சாட்சி கிடைக்கவில்லை. இறுதியாக இருவர் முன்வந்தனர். அவர்கள், ‘ இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான் ‘ என்று கூறினார்கள்.”

நல்வாழ்வு:
புனிதரின் பணியைச் செய்பவர்கூட
பொய்ச் சான்றுரைக்க நாடுகிறார்.
இனிமை என்கிற இறைப்பணி இதனால்
இழப்பு அடையவே வாடுகிறார்.
மனிதனை மனிதன் என மதிக்காத
மடமையில் கடவுளைக் காண்பீரா?
தனிமையில் அமர்ந்து தவற்றை நினைத்து,
தந்தையின் அருளைக் கேட்பீரா?
ஆமென்.

நல்வாழ்த்து:
மேன்மேலும் உம்மைப் புகழ்வேன்;
மேன்மை தங்கிய என் அரசே.
நான் பாடத் தகுதியற்றேன்;
எனினும் புகழ்வேன், உம் அரசே!

நல்வாக்கு:
மத்தேயு 26:59-61.
"தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடினர். பல பொய்ச் சாட்சிகள் முன்வந்தும் ஏற்ற சாட்சி கிடைக்கவில்லை. இறுதியாக இருவர் முன்வந்தனர். அவர்கள், ' இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான் ' என்று கூறினார்கள்."

நல்வாழ்வு:
புனிதரின் பணியைச் செய்பவர்கூட 
பொய்ச் சான்றுரைக்க நாடுகிறார்.
இனிமை என்கிற இறைப்பணி இதனால் 
இழப்பு அடையவே வாடுகிறார்.
மனிதனை மனிதன் என மதிக்காத  
மடமையில் கடவுளைக் காண்பீரா? 
தனிமையில் அமர்ந்து தவற்றை நினைத்து,
தந்தையின் அருளைக் கேட்பீரா?
ஆமென்.
 

வாழ்வின் பொருள்

நல்வாழ்த்து:
வாழ்வின் பொருள் என்னவென்று,
வழி தெரியாது கேட்பவரே,
தாழ்வில் நம்மை நினைத்துயர்த்தும்,
தந்தை இறையைப் புகழுவதே!

நல்வாக்கு:
மத்தேயு 26:57-58.
தலைமைச் சங்கத்தின் முன்னிலையில் இயேசு:
“இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச்சென்றார்கள். அங்கே மறைநூல் அறிஞரும், மூப்பர்களும் கூடி வந்தார்கள். பேதுரு தொலைவில் அவரைப் பின்தொடர்ந்து தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து வழக்கின் முடிவைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காக உள்ளே நுழைந்து காவலரோடு உட்கார்ந்திருந்தார்.”

நல்வாழ்வு:
கற்றவர் என்று காட்டுகிறார்;
கயமைத்தனத்தையே கூட்டுகிறார்.
மற்றவர் தன்மையை மதியாது,
மடையர் என்று ஆட்டுகிறார்!
பெற்றது அறிவாய் இருக்குமெனில்,
பெருந் தன்மையைக் கொண்டிருப்பார்.
கொற்றவர் இறைவன் கூற்றறிந்து,
கொடுமையை நீக்கி ஆண்டிடுவார்!
ஆமென்.

நல்வாழ்த்து:
வாழ்வின் பொருள் என்னவென்று,
வழி தெரியாது கேட்பவரே,
தாழ்வில் நம்மை நினைத்துயர்த்தும்,
தந்தை இறையைப் புகழுவதே!

நல்வாக்கு: 
மத்தேயு 26:57-58.
தலைமைச் சங்கத்தின் முன்னிலையில் இயேசு:
"இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச்சென்றார்கள். அங்கே மறைநூல் அறிஞரும், மூப்பர்களும் கூடி வந்தார்கள். பேதுரு தொலைவில் அவரைப் பின்தொடர்ந்து தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து வழக்கின் முடிவைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காக உள்ளே நுழைந்து காவலரோடு உட்கார்ந்திருந்தார்."
நல்வாழ்வு:
கற்றவர் என்று காட்டுகிறார்;
கயமைத்தனத்தையே கூட்டுகிறார்.
மற்றவர் தன்மையை மதியாது,
மடையர் என்று ஆட்டுகிறார்!
பெற்றது அறிவாய் இருக்குமெனில், 
பெருந் தன்மையைக் கொண்டிருப்பார்.
கொற்றவர் இறைவன் கூற்றறிந்து,
கொடுமையை நீக்கி ஆண்டிடுவார்!
ஆமென்.
 

இறைவன் நம்முடனே.

நல்வாழ்த்து:
கண்டு நம்பும் மாந்தர் உண்டு;
காணா இறையை நம்பிடுவோம்.
உண்டு ருசிக்கும் விருப்பு கொண்டு,
ஊட்டும் இறையைக் கும்பிடுவோம்!

நல்வாக்கு:
மத்தேயு 26:55-56.
“அவ்வேளையில் இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, ‘ கள்வனைப் பிடிக்க வருவதுபோல் வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைதுசெய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் அமர்ந்து கற்பித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; இறைவாக்கினர் எழுதியவை நிறைவேறவே இவையனைத்தும் நிகழ்கின்றன ‘ என்றார்.அப்பொழுது சீடர்களெல்லாரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினார்கள்.”

நல்வாழ்வு:
இக்கட்டு, துன்ப வேளையிலே,
எத்தனைபேர் நம் உடனிருந்தார்?
பக்கத்தில் வந்து பார்த்தவரே,
பாய்ந்து அம்பாய்ப் பறந்துவிட்டார்!
திக்கற்று நாம் நிற்கையிலே,
தெய்வம் மட்டும் துணை வந்தார்.
எக்காலத்தும் நினைப்பீரே;
இறைவன் நம்முடன் இருக்கின்றார்!
ஆமென்.

நல்வாழ்த்து:
கண்டு நம்பும் மாந்தர் உண்டு;
காணா இறையை நம்பிடுவோம்.
உண்டு ருசிக்கும் விருப்பு கொண்டு,
ஊட்டும் இறையைக் கும்பிடுவோம்!

நல்வாக்கு:
மத்தேயு 26:55-56.
"அவ்வேளையில் இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, ' கள்வனைப் பிடிக்க வருவதுபோல் வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைதுசெய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் அமர்ந்து கற்பித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; இறைவாக்கினர் எழுதியவை நிறைவேறவே இவையனைத்தும் நிகழ்கின்றன ' என்றார்.அப்பொழுது சீடர்களெல்லாரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினார்கள்."

நல்வாழ்வு:
இக்கட்டு, துன்ப வேளையிலே,
எத்தனைபேர் நம் உடனிருந்தார்?
பக்கத்தில் வந்து பார்த்தவரே,
பாய்ந்து அம்பாய்ப் பறந்துவிட்டார்!
திக்கற்று நாம் நிற்கையிலே,
தெய்வம் மட்டும் துணை வந்தார்.
எக்காலத்தும் நினைப்பீரே;
இறைவன் நம்முடன் இருக்கின்றார்!
ஆமென்.
 

மறைவாக்கின் வெளிச்சத்தில்

நல்வாழ்த்து:
நம் செயல் கண்டு மகிழும் தெய்வம்
நம்மை மட்டுமா வாழ்த்துகிறார்?
இம்மை மறுமை நன்மையும் தந்து
இனிய வீட்டையும் வாழ்த்துகிறார்!

நல்வாக்கு:
மத்தேயு 26:53-54.
“நான் என் தந்தையின் துணையை வேண்ட முடியாதென்றா நினைத்தாய்? நான் வேண்டினால் அவர் பன்னிரு பெரும் படைப் பிரிவுகளுக்கு மேற்பட்ட வானதூதரை எனக்கு அனுப்பி வைப்பாரே. அப்படியானால் இவ்வாறு நிகழவேண்டும் என்ற மறைநூல் வாக்குகள் எவ்வாறு நிறைவேறும்? ‘ என்றார்.”

நல்வாழ்வு:
இறைவாக்கு நிறைவேற
இறைமகனே வந்தார்;
நிறைவாழ்வு நாமடைய
நேர்வழியைத் தந்தார்.
குறை நீங்க விரும்பிடுவோர்
கிறித்துவுக்குள் வருவார்.
மறைவாக்கின் வெளிச்சத்தில்
மகிழ்ந்தன்பு தருவார்!
ஆமென்.

மறை வாக்கின் வெளிச்சத்தில் .....
நல்வாழ்த்து:
நம் செயல் கண்டு மகிழும் தெய்வம் 
நம்மை மட்டுமா வாழ்த்துகிறார்?
இம்மை மறுமை நன்மையும் தந்து  
இனிய வீட்டையும் வாழ்த்துகிறார்!

நல்வாக்கு:
மத்தேயு 26:53-54.
"நான் என் தந்தையின் துணையை வேண்ட முடியாதென்றா நினைத்தாய்? நான் வேண்டினால் அவர் பன்னிரு பெரும் படைப் பிரிவுகளுக்கு மேற்பட்ட வானதூதரை எனக்கு அனுப்பி வைப்பாரே. அப்படியானால் இவ்வாறு நிகழவேண்டும் என்ற மறைநூல் வாக்குகள் எவ்வாறு நிறைவேறும்? ' என்றார்."

நல்வாழ்வு:
இறைவாக்கு நிறைவேற 
இறைமகனே வந்தார்;
நிறைவாழ்வு நாமடைய 
நேர்வழியைத் தந்தார்.
குறை நீங்க விரும்பிடுவோர்
கிறித்துவுக்குள் வருவார்.
மறைவாக்கின் வெளிச்சத்தில் 
மகிழ்ந்தன்பு தருவார்!
ஆமென்.
LikeLike · 

ஏழையை நினைப்பீரே!

என்னிறக் கட்சிகள் வந்தாலும்,
இந்தியர் இவரென எண்ணவில்லை.
அன்னியர் என்று ஒதுக்காத
ஆண்டவா, இவரை மீட்பீரே!

சென்னிறக் குருதி சிந்துமிவர்,
சீக்கிரம் உயிர் வாழ்வடைவதற்கு,
பொன்னிற நெஞ்சு கொண்டோரே,
புவியில் ஏழையை நினைப்பீரே!
-கெர்சோம் செல்லையா.

இடுப்புக்கு கோவணம் இல்லை ;
கையிலே கொடி  -  இதுதான் 
' சு ' தந்திரம் !

 

விடுதலை நாள் வாழ்த்து

இந்திய விடுதலை நாள் வாழ்த்து:

வீடும் குடும்பமும் போதுமென்று
விரும்பிப் பதுங்கும் இந்தியரே,
நாடும் இனமும் வாழ்ந்தால்தானே,
நமக்கு உயர்வு அறிவீரே!
ஓடும் வாழ்வின் உண்மையறிந்து
ஒருவரையொருவர் மதிப்பீரே.
கேடும் துன்பும் கிட்டவராது;
கிறித்து அருளில் மகிழ்வீரே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.

இந்திய விடுதலை நாள் வாழ்த்து:

வீடும் குடும்பமும் போதுமென்று 
விரும்பிப் பதுங்கும் இந்தியரே,
நாடும் இனமும் வாழ்ந்தால்தானே,
நமக்கு உயர்வு அறிவீரே!
ஓடும் வாழ்வின் உண்மையறிந்து 
ஒருவரையொருவர் மதிப்பீரே.
கேடும் துன்பும் கிட்டவராது;
கிறித்து அருளில் மகிழ்வீரே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
 

இரங்குவோம்!

ஏங்கும் நெஞ்சம் இருக்குமிடத்தில்
இரக்கம் பொழிவோம், என் நண்பா.
வாங்கும் நன்மை வழங்குமிடத்தில்
வறுமை ஒழியும், இது என் பா!
-கெர்சோம் செல்லையா.

வாளா, இல்லை வாழ்வா?

 

நல்வாழ்த்து:
எதிர்ப்பவர் எவராய் இருந்தாலும்
இறைவன் இருக்கக் கவலையில்லை!
மதிப்பவர் சிலராய் இருந்தாலும்
மகிழ்ந்துரைப்போம் அவர் சொல்லை!

நல்வாக்கு:
மத்தேயு 26:51-52.
“உடனே இயேசுவோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார். அப்பொழுது இயேசு அவரிடம், ‘ உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்.”

நல்வாழ்வு:
வாள் எடுத்துக் கொன்றவர்கள்
வாளால்தான் வீழ்ந்தார்கள்.
தோள் கொடுத்து நின்றவர்கள்
துன்பத்திலும் உயர்ந்தார்கள்.

நாள் முழுதும் கேட்பவர்கள்
நம்புகையில் வாழ்வார்கள்.
தாள் பணிந்து வேண்டுகிறேன்;
தமிழர்களே உணருங்கள்!
ஆமென்.

வாளா, இல்லை வாழ்வா? 

நல்வாழ்த்து:
எதிர்ப்பவர் எவராய் இருந்தாலும்
இறைவன் இருக்கக் கவலையில்லை! 
மதிப்பவர் சிலராய் இருந்தாலும் 
மகிழ்ந்துரைப்போம் அவர் சொல்லை!

நல்வாக்கு:
மத்தேயு 26:51-52.
"உடனே இயேசுவோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார். அப்பொழுது இயேசு அவரிடம், ' உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்."

நல்வாழ்வு:
வாள் எடுத்துக் கொன்றவர்கள்  
வாளால்தான் வீழ்ந்தார்கள்.
தோள் கொடுத்து நின்றவர்கள் 
துன்பத்திலும் உயர்ந்தார்கள்.

நாள் முழுதும் கேட்பவர்கள் 
நம்புகையில் வாழ்வார்கள்.
தாள் பணிந்து வேண்டுகிறேன்;
தமிழர்களே உணருங்கள்!
ஆமென்.
LikeLike · 

இன்றைய இராக்

இப்படிக் கொல்ல எவர் சொன்னாலும்,
அப்படிச் சொல்லும் இறை வேண்டாம்.
எப்படி அன்பை எவர் கொடுத்தாலும்,
தப்பாதவருள் இறை உண்டாம்!
-கெர்சோம் செல்லையா.
 We need to pray for all those who are facing religious persecution in Iraq.
Ravikumar Stephen Ph D's photo.
Ravikumar Stephen Ph D's photo.
Ravikumar Stephen Ph D's photo.
Ravikumar Stephen Ph D's photo.
Ravikumar Stephen Ph D's photo.