விளம்பரம் செய்யாதீர்!
நற்செய்தி மாலை : மாற்கு 1: 42-44.
“உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார். பிறகு அவரிடம், ‘ இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும் ‘ என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார்.”
நற்செய்தி மலர்:
எங்கு பார்த்தாலும் விளம்பரங்கள்;
இயேசுவின் ஊழியர் புகைப்படங்கள்.
இங்கு இதனால் அவப்பெயர்கள்;
எரிச்சல், போட்டி, பொறாமைகள்.
சங்கு முழக்கும் திருப்பணிக்குச்
சாவின் மணியடி தேவையில்லை.
பொங்கு தவற்றைப் புதைக்காது,
பொய்மை போற்றின், பயனில்லை!
ஆமென்.
Category: நற்செய்தி
கிறித்து பிறந்த நாள் வாழ்த்து:
கிறித்து பிறப்பும், புத்தாண்டும்,
உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும்,
மகிழ்வைத் தர வேண்டுகிறோம்; வாழ்த்துகிறோம்.
– கெர்சோம் செல்லையா & குடும்பம்.
“அழிப்பதற்கென்று உருவெடுத்து,
அவனியில் வந்தவர் பலருண்டு.
வழித்தடம் தவறிய மாந்தர்களை,
வந்து மீட்பவர் யாருண்டு?
பழித்திடக்கூட விரும்பாது,
பாவம் போக்கும் ஒருவருண்டு.
விழித்திடு கண்ணே, விழித்திடுவாய்;
விண்மகன் இயேசுவை நீ கண்டு!”
ஆமென்.
கிறித்து பிறக்க விடுவீரா?
கிறித்து பிறக்க விடுவீரா?
“நெஞ்சில் கிறித்து கருவுற்றால்,
நேர்மை செயலில் பிறந்திருக்கும்.
வஞ்சம் நிறைந்த உலகோர் முன்
வாய்மை அன்பால் சிறந்திருக்கும்.
கொஞ்சமும் இதனை எண்ணாது,
கொண்டாடும் நாம் கிறித்தவரா?
கெஞ்சிக் கேட்பேன் இன்னாளில்;
கிறித்து பிறக்க விடுவீரா?”
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
தொழு நோயாளரையும் தொட்டுச் சேர்க்கும் அன்பு!
தொழு நோயாளரையும் தொட்டுச் சேர்க்கும் அன்பு!
நற்செய்தி மாலை: மாற்கு 1:40-41.
“ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, ‘ நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் ‘ என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், ‘ நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக! ‘ என்றார்.”
நற்செய்தி மாலை:
தொற்றும் நோயில் கொடிய,
தொழுநோய் கொண்டு மடிய,
சற்றும் விரும்பா ஒருவர்,
சட்டம் மீறி வந்தார்.
முற்றும் வெறுக்கும் நிலையே;
மும்மை இறையில் இலையே.
பற்றின் உறுதி கண்டார்;
பரிவில் சேர்த்துக் கொண்டார்!
ஆமென்.
எங்கும் சொல்வோமா?
எங்கும் சொல்வோமா?
நற்செய்தி மாலை: மாற்கு 1:38-39.
“அதற்கு அவர், ‘ நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன் ‘ என்று சொன்னார். பின்பு அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி பேய்களை ஓட்டி வந்தார்.”
நற்செய்தி மலர்:
எங்கே, எப்படி, யாருக்கு,
எடுத்துச் சொல்ல அழைப்பீரோ,
அங்கே, அவரது மீட்பிற்கு,
அருளைத் தராது இருப்பீரோ?
இங்கே காணும் இருளிற்கு,
என்னை விளக்காய் மாற்றீரோ?
மங்கா ஒளியைக் கொடுப்பதற்கு,
மெழுகாய் உருக்க மாட்டீரோ?
ஆமென்.
கொல்லச் சொல்பவன் கடவுளா?
கொல்லச் சொன்னாரா இறைவன்?
கொல்லச் சொல்பவன் கடவுளல்ல;
கொலைகாரன் என அறிவோமே.
நல்லதைச் செய்பவர்தான் கடவுள்;
நன்மை செய்து வாழ்வோமே!
கல்லா மனிதர் இதை உணர,
கடவுளின் செய்தி கொடுப்போமே.
எல்லாத் தீமையும் தீர்ப்பில் வரும்;
இறைவனின் அன்பில் மகிழ்வோமே!
– கெர்சோம் செல்லையா.


யாரைத் தேடுகிறோம்? என்ன தேடுகிறோம்?
யாரைத் தேடுகிறோம்? என்ன தேடுகிறோம்?

கருக்கலில் எழுந்து கடவுளை நோக்கும்…
நற்செய்தி மாலை: மாற்கு 1: 35.
“இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.”
நற்செய்தி மலர்:
கருக்கலில் எழுந்து கடவுளை நோக்கும்
கண்கள் வேண்டும், கேட்டிடுவோம்.
இருக்கும் துன்பம் எங்கோ பறக்கும்,
இறையுள் இணையும், ஓட்டிடுவோம்.
பெருக்கும் செல்வம் பகிர்ந்து கொடுக்கும்,
பேரூற்றினை நாம் தோண்டிடுவோம்!
தெருக்கல் போன்று போகாதுரைக்கும்
திறமை ஒழியும், தாண்டிடுவோம்.
ஆமென்.

நலம் தரும் இயேசு!
நலம் தரும் இயேசு!

சேயினைப் போன்று பற்றிடுவோம்!
“பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.”
