திருந்தத் தேவை இல்லை

மாலை:மாற்கு 1:14-15.
இயேசு கலிலேயாவில் பணி தொடங்குதல்:
“யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். ‘ காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் ‘ என்று அவர் கூறினார்.”

மலர்:
திருந்தத் தேவை இல்லை என்று,
துணிவாய்ச் சொல்வோர் யாரிங்கே?
தூய்மை தவிர, மற்றது செய்யா
தெய்வம் மட்டும் தானிங்கே!
வருந்தத் தேவை இல்லை என்று,
வழி திரும்பார் நிலை எங்கே?
வாழ்வின் முடிவு கண்ணீராகி
வதங்கும் காட்சி பாரிங்கே!
ஆமென்.

மாலை:மாற்கு 1:14-15.
இயேசு கலிலேயாவில் பணி தொடங்குதல்:
"யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். ' காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் ' என்று அவர் கூறினார்."

மலர்:
திருந்தத் தேவை இல்லை என்று, 
துணிவாய்ச் சொல்வோர் யாரிங்கே?
தூய்மை தவிர, மற்றது செய்யா
தெய்வம் மட்டும் தானிங்கே!
வருந்தத் தேவை இல்லை என்று,
வழி திரும்பார் நிலை எங்கே?
வாழ்வின் முடிவு கண்ணீராகி 
வதங்கும் காட்சி பாரிங்கே!
ஆமென்.
LikeLike ·  · Share

சோதனைப் பாடும் வருவதுண்டு.

நற்செய்தி மாலை: மாற்கு 1:12-13.
இயேசு சோதிக்கப்படுதல்:
“உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.”
நற்செய்தி மலர்:
எவ்வழி நடத்தல் ஏற்றதென்று
எண்ணும் பண்பு நம்மிலுண்டு.
செவ்வழி நடக்க முடிவெடுப்பின்,
சோதனைப் பாடும் வருவதுண்டு.
இவ்வழி வந்து நமை மீட்கும்
இறைமகன் துணையும் இன்றுண்டு.
கவ்விடும் சூது ஒழிந்துவிடும்;
கடவுளின் வாக்கை நம்பிவிடு!
ஆமென்.

இறைவன் மகிழ்ந்தார்.

நற்செய்தி மாலை: மாற்கு 1:11.
“அப்பொழுது, ‘ என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ‘ என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.”

நற்செய்தி மலர்:
எதை முடிக்க இறைமகன் வந்தார்?
எண்ணிப் பார்த்து ஏற்றிடுவோம்?
அதைக் கண்டு இறைவன் மகிழ்ந்தார்.
அவருள் இணைந்து போற்றிடுவோம்.

இதைக் கேட்கும் நம்பணி என்ன?
இந்த வாழ்வின் பொருளறிவோம்.
உதை பந்தாய்த் துள்ளுதல் அல்ல;
உண்மை மகனாய் அருள்பெறுவோம்!
ஆமென்.

நற்செய்தி மாலை: மாற்கு 1:11.<br />
"அப்பொழுது, ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது."</p>
<p>நற்செய்தி மலர்:<br />
எதை முடிக்க இறைமகன் வந்தார்?<br />
எண்ணிப் பார்த்து ஏற்றிடுவோம்?<br />
அதைக் கண்டு இறைவன் மகிழ்ந்தார்.<br />
அவருள் இணைந்து போற்றிடுவோம்.</p>
<p>இதைக் கேட்கும் நம்பணி என்ன?<br />
இந்த வாழ்வின் பொருளறிவோம்.<br />
உதை பந்தாய்த் துள்ளுதல் அல்ல;<br />
உண்மை ஒளிர அருள்பெறுவோம்!<br />
ஆமென்.
LikeLike ·  · Share

புறாவைப்போல்

நற்செய்தி மாலை: மாற்கு 1:10.
“அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்.”

நற்செய்தி மலர்:
சுறாக்கள் சுழலும் நீர்நிலையில்,
சொரியும் கண்ணீர் பெருகுகையில்,
சோர்ந்து அடியேன் விழுகின்றேன்;
சொல்லத் தவித்து அழுகின்றேன்.
புறாக்கள் காட்டும் அமைதியினில்,
பொய்மை அழுக்கு அகற்றுகையில்,
பொறுமை கொண்டு தொழுகின்றேன்;
புனிதா, உம்மால் எழுகின்றேன்!
ஆமென்.

நற்செய்தி மாலை: மாற்கு 1:10. 
"அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்."

நற்செய்தி மலர்:
சுறாக்கள் சுழலும் நீர்நிலையில்,
சொரியும் கண்ணீர் பெருகுகையில்,
சோர்ந்து அடியேன் விழுகின்றேன்;
சொல்லத் தவித்து அழுகின்றேன்.
புறாக்கள் காட்டும் அமைதியினில்,
பொய்மை அழுக்கு அகற்றுகையில்,
பொறுமை கொண்டு தொழுகின்றேன்;
புனிதா, உம்மால் எழுகின்றேன்!
ஆமென்.
LikeLike ·  · Share

இவர்களின் மீட்பை நினைப்பது யார்?

இவர்களின் மீட்பை நினைப்பது யார்?
இவர்களுக்குதவி செய்பவர் யார்?
அவரவர் வழியைப் புகழ்கின்றீர்;
அத்துடன் இவரையும் எண்ணிடுவீர்!
-கெர்சோம் செல்லையா.

இவர்களின் மீட்பை நினைப்பது யார்?
இவர்களுக்குதவி செய்பவர் யார்?
அவரவர் வழியைப் புகழ்கின்றீர்;
அத்துடன் இவரையும் எண்ணிடுவீர்!
-கெர்சோம் செல்லையா.
LikeLike ·  · Share

யோவானைப் பார்!

யோவானைப் பார்!

நற்செய்தி மாலை: மாற்கு:1:7-8.
“அவர் தொடர்ந்து, ‘ என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் ‘ எனப் பறைசாற்றினார்.”

நற்செய்தி மலர்:
தனது நீராட்டின் தரமறிந்தார்;
தாழ்மையை யோவான் தரித்திட்டார்.
இனங்களை மீட்கும் பணிசெய்வார்,
எங்கும் தாழ்மை கொண்டிருப்பார்.

எனது செயலே எனப்புகழ்வார்,
இவரைப் பார்த்தால் தாழ்ந்திடுவார்.
கனவு போன்ற உலகினிலே,
கறையை நீக்கி வாழ்ந்திடப் பார்!
ஆமென்.

யோவானைப் பார்!
நற்செய்தி மாலை: மாற்கு:1:7-8.
 "அவர் தொடர்ந்து, ' என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் ' எனப் பறைசாற்றினார்."

நற்செய்தி மலர்:
தனது நீராட்டின் தரமறிந்தார்;
தாழ்மையை யோவான் தரித்திட்டார்.
இனங்களை மீட்கும் பணிசெய்வார்,
எங்கும் தாழ்மை கொண்டிருப்பார்.

எனது செயலே எனப்புகழ்வார்,
இவரைப் பார்த்தால் தாழ்ந்திடுவார்.
கனவு போன்ற உலகினிலே,
கறையை நீக்கி வாழ்ந்திடப் பார்!
ஆமென்.
LikeLike ·  · Share
  • நற்செய்தி மாலை

    Write a comment…

நல்லுணவு தருகிறார்!

நல்லுணவு தருகிறார்!

நற்செய்தி மாலை: மாற்கு 1:6.
“யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.”
நற்செய்தி மலர்:
பாறைக்குள் உணவைத் 
தேரைக்குத் தந்தார்;
பாலையில் நீரைப் 
பழங்களில் வைத்தார்.
யாருக்குத் தேவை 
எது என்றறிவார்;
இரங்கும் இறைதான், 
இன்றும் தருவார்.
ஆமென்.
நல்லுணவு தருகிறார்!
நற்செய்தி மாலை: மாற்கு 1:6.
"யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்."
நற்செய்தி மலர்:
பாறைக்குள் உணவைத் 
தேரைக்குத் தந்தார்;
பாலையில் நீரைப் 
பழங்களில் வைத்தார்.
யாருக்குத் தேவை 
எது என்றறிவார்;
இரங்கும் இறைதான், 
இன்றும் தருவார்.
ஆமென்.

எந்த நீரால் நீக்கிடலாம்?

நற்செய்தி மாலை: மாற்கு 1:5.
“யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.”

நற்செய்தி மலர்:
உடல்மேல் அழுக்கு படிந்துவிடின்,
ஓராற்றுள் மூழ்கிக் கழுவிடலாம்.
உள்ளில் கறைகள் உறைந்துவிடின்,
எந்த நீரால் நீக்கிடலாம்?
கடல்போல் நீரைக் கொணர்ந்தாலும்,
கறைகள் போக்க வழியில்லை.
கடவுளின் அருள்நீர் கேட்டிடுவோம்;
கருத்தாய் அதனுள் மூழ்கிடுவோம்!
ஆமென்.

நற்செய்தி மாலை: மாற்கு 1:5. 
"யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்."

நற்செய்தி மலர்:
உடல்மேல் அழுக்கு படிந்துவிடின்,
ஓராற்றுள் மூழ்கிக் கழுவிடலாம்.
உள்ளில் கறைகள் உறைந்துவிடின்,
எந்த நீரால் நீக்கிடலாம்?
கடல்போல் நீரைக் கொணர்ந்தாலும்,
கறைகள் போக்க வழியில்லை.
கடவுளின் அருள்நீர் கேட்டிடுவோம்;
கருத்தாய் அதனுள் மூழ்கிடுவோம்!
ஆமென்.

நற்செய்தி மாலை.

நற்செய்தி மாலை.
மாற்கு 1:1-4.
திருமுழுக்கு யோவானின் உரை:

“கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: ‘ இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார். பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் ‘ என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது. இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.”

நற்செய்தி மலர்:
காட்டில் இறையொலி கேட்கிறதே.
கடவுளின் பாதை தெரிகிறதே.
நாட்டில் வாழும் மனிதரிடம்
நல்வழி திரும்பச் சொல்கிறதே.

ஏட்டில் இதனை வாசித்தோம்;
எத்தனை பேர் நாம் செவிகொடுத்தோம்?
பாட்டில் இனிமேல் பாடிடுவோம்.
பாவம் நீங்கத் திருந்திடுவோம்!
ஆமென்.

நற்செய்தி மாலை.
மாற்கு 1:1-4.
திருமுழுக்கு யோவானின் உரை:

"கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: ' இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார். பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் ' என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது. இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்."

நற்செய்தி மலர்:
காட்டில் இறையொலி கேட்கிறதே.
கடவுளின் பாதை தெரிகிறதே.
நாட்டில் வாழும் மனிதரிடம் 
நல்வழி திரும்பச் சொல்கிறதே.

ஏட்டில் இதனை வாசித்தோம்;
எத்தனை பேர் நாம் செவிகொடுத்தோம்?
பாட்டில் இனிமேல் பாடிடுவோம்.
பாவம் நீங்கத் திருந்திடுவோம்!
ஆமென்.

மத்தேயுவின் நற்செய்தி கேட்பீரே!

மத்தேயுவின் நற்செய்தி கேட்பீரே!

நல்வாக்கு:மத்தேயு 28:19-20.
“எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் ‘ என்று கூறினார்.”
நல்வாழ்வு:
எல்லா மனிதரும் இறையுருவே;
எந்நிலை இருப்பினும் நம்முறவே.
பொல்லாத் தீமை விட்டிடவே,
புனிதனின் செய்தி உரைப்போமே.
கல்லார் கற்றுத் தெளிவுறவே,
கடவுளின் அரசு அமைந்திடுமே.
நல்லார் கூட்டம் பெருகிடவே,
நன்மை ஆறாய்ப் பாய்ந்திடுமே!
ஆமென்.