72!

முடிந்தது எழுபத்திரண்டு!

எழுபத்து இரண்டு ஆண்டுகள் முடித்தும்
என்னில் இல்லையே முழுமை.
விழுந்தும் எழுந்தும் ஓடிப் பிடித்தும்,
வென்றதோ கொஞ்சம் கொழுமை.
அழுதிடும் நிலைகள் ஆயிரம் வெடித்தும்,
அருளால் மீள்வதே புதுமை.
தொழுது மகிழ, தூய நூல் படித்தும்,
தொண்டும் புரியுமே முதுமை!

-கெர்சோம் செல்லையா.

நிறை மகிழ்வு!

நிறைவான மகிழ்ச்சி !

இறை மொழி: யோவான் 17: 13.  

இறை வழி:

எதிலும் குறைவாய் இருப்பவர் நாமே;

என்பதை உணர்வாய் மானிடமே. 

அதினதன் குறையை நிரப்ப முயன்றும்,  

அடையவும் இல்லை மண்ணிடமே. 

புதிராய் இருப்பினும் புரிதல் நலமே,

பொறுமையாய்க் கேளு என்னிடமே.

மதிநிறை மகிழ்வு இயேசுவேயாகும்;

மன்றாடுவாய் விண்ணிடமே!


ஆமென். 
-கெர்சோம் செல்லையா.   

கேட்டின் மகன்!

  1. கேட்டின் மகன்!
  2. இறை மொழி: யோவான் 17: 12.

கேட்டின் மகன்!

இறை மொழி: யோவான் 17: 12.

12. நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.

இறை வழி:

கேட்டைச் செய்வோர் யாரெனப் பார்த்தேன்.

கெடுமதி அலகையின் மக்களே.

கோட்டை கட்டி, கோனாய் வரினும்,

குழப்பும் அறிவிலா மாக்களே.

நாட்டின் தலைவர் வரிசையும் பார்த்தேன்,

நன்மைக்கென்றவர் பக்கமே.

ஏட்டில் எழுத இயலா வஞ்சம்,

இருக்கும் கடல் பாக்கமே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

ஒன்றாய் இருப்போம்!

ஒன்றாயிருப்போம்!

இறை மொழி: யோவான் 17:11. 

இறை வழி:

தந்தையும் மைந்தனும் ஒன்றாய் இருந்து  

தரணியை ஆள்வது போன்று,

மைந்தர்கள் என்கிற அடியவர் சேர்ந்து,

மாண்பாய்த் தொழுவது சான்று.

முந்தையர் செய்த வன்முறை வெறுத்து, 
முதலில் அன்பைப் பெற்று,

மந்தையைக் காக்க ஒன்றாய் நிறுத்து;

மாற்றும் இறை கூற்று!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

யாருக்கு புகழ்ச்சி?

யாருக்கு புகழ்ச்சி?

இறை மொழி: யோவான் 17: 9-10.

9. நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே.

10. என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்.

இறை வழி:

பேருக்கு கிறித்தவர் என்று வாழும்

பெருமைக்குரிய நண்பர்களே,

யாருக்கு புகழ்ச்சி, யாருக்கு மாட்சி?

இறை முன் நின்று எண்ணுங்களே.

ஊருக்கு பெரியவர் என்று ஆளும்,

உங்கள் தற்புகழ் வாடிடுமே.

பாருக்கு நன்மை செய்பவர் இறைவன்;

பரன் அவர் பெருமை பாடிடுமே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

இயேசுவை நம்புவீர்!

இயேசுவை நம்புவீர்!

இறை மொழி: யோவான் 17:6-8. 

இறை வழி: 


தந்தை அறிந்த தம் மக்கட்கு,

தனையன் வாக்கு வழங்கினார். 

மைந்தன் தூதை அடியவர் ஏற்று,

மாட்சி உற்று விளங்கினார். 

விந்தை வாழ்வு வேண்டும் நமக்கு,

விருந்தாய் இன்றும் முழங்குவார். 

இந்தப் பேற்றால் தூய்மை பெற்று,

யார் யார் ஒளிபோல் துலங்குவார்?

ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

இறை நோக்கு!

இறை நோக்கு!

இறை மொழி: யோவான் 17:4-5.

இறை வழி: 


நோக்கம் உண்டு தெய்வப் படைப்பில்;

நோக்கி நம்மைக் கொடுப்போமா?

ஆக்கம் கண்டு, அன்பை விதைப்பின், 

அறுவடை மேன்மை, எடுப்போமா? 

வீக்கம் கொண்ட வீண் விருப்பில்,

விளைவது தீமை, நினைப்போமா?

போக்கை மாற்றும்; புனிதனை நாடும்;

புகழ்ச்சி தருவார், அணைப்போமா?

ஆமென். 

-கெர்சோம் செல்லையா.  

இயேசுவின் இறைவேண்டல்!

இயேசுவின் இறைவேண்டல்!

இறைமொழி:

யோவான் 17: 1-3.

1. இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து:

2. பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.

3. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

இறைவழி:

வேண்டல் செய்யும் இறைமகன் பாரீர்.

விண்ணப்பங்கள் எவை எனப் பாரீர்.

ஆண்டவர் அளிக்கும் வாழ்வும் பாரீர்.

அதற்குக் கூறும் வழியும் பாரீர்.

நீண்ட நெடிய வேண்டலைப் பாரீர்.

நிலையற்றோர்க்கே, என்றும் பாரீர்.

மாண்டல் அல்ல, மாட்சிமை பாரீர்;

மன்னனோடு வாழ்வோம், வாரீர்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

No photo description available.

45 ஆண்டுகள் முன்!

45 ஆண்டுகள் முன்!

நாற்பத்தைந்து ஆண்டுகள் முன் 

நம்ப மறுத்த என்னிடத்தில், 

ஏற்க வைத்துத் திருத்திடவே, 

இறையீந்தார் திருமறை.

ஊர் உறவின் கண்கள் முன்,

ஒன்று மற்று இருந்தவனை 

தோற்க விடாது நிறுத்திடவே, 

தொடர்கிறார் அருள் மழை!

-கெர்சோம் செல்லையா.