நாலடி நற்செய்தி…2.
அறிவு!
அன்பின் செயலே அறிவின் சிறப்பு.
அதை அடைய உழைப்போமே.
நன்மை செய்யா வாழ்வும் இறப்பு.
நம்பி, வாழ்ந்து, தழைப்போமே!
-செல்லையா.
The Truth Will Make You Free
நாலடி நற்செய்தி…2.
அறிவு!
அன்பின் செயலே அறிவின் சிறப்பு.
அதை அடைய உழைப்போமே.
நன்மை செய்யா வாழ்வும் இறப்பு.
நம்பி, வாழ்ந்து, தழைப்போமே!
-செல்லையா.
இறையின் தீர்ப்பு!
நற்செய்தி: யோவான் 8:15-16.
நல்வழி:
ஆண்டிக்கும் தீர்ப்பு, அரசிற்கும் தீர்ப்பு,
ஆண்டவர் தீர்ப்பு ஒன்றேயாம்.
வேண்டிடும் நேர்மை, விரைவில் வருது.
விண்ணின் முடிவு நன்றேயாம்.
கூண்டில் அடைக்கும் முன்பே பார்த்து,
குற்றம் தவிர்ப்பது என்றேயாம்?
மாண்டபின் பேசிப் பயனேயில்லை.
மனிதா திருந்து, இன்றேயாம்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
அறிய விரும்புவோம்!
நற்செய்தி: யோவான் 8:13-14.
13. அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக்குறித்து நீயே சாட்சிகொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.
14. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது; ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறியீர்கள்.
நல்வழி:
அன்று அவர்கள் அறியவில்லை;
அறிந்து கொள்ள விரும்பவில்லை.
இன்று பலபேர் விரும்பவில்லை.
இதனால் அறிவும் புரியவில்லை.
ஒன்று மட்டும் தெரிந்திடுவோம்.
உண்மை அறிய விரும்பிடுவோம்.
சென்று இயேசுவை நோக்கிடுவோம்;
சிதைக்கும் மடமும் நீக்கிடுவோம்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
ஒளி!
நற்செய்தி: யோவான் 8:12.
12. மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
நல்வழி:
ஒருவரும் சேரக் கூடா ஒளியாய்,
ஒளிர்கிற தெய்வம் இயேசு.
திருவருள் தருகிற, தேடா வழியாய்,
தெரிகிற மனிதனும் இயேசு.
இருளாய் இருந்த எனது வாழ்வில்,
ஒளியாய் வருபவர் இயேசு.
பொருளால் அல்ல, தனது உயிரால்,
புனிதம் தருபவர் இயேசு!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
நாலடி நற்செய்தி!
சிறு ஆணி!
யாருக்கும் அடிமை ஆகாதே.
யாரையும் அடிமை ஆக்காதே.
தேருக்கும் தேவை சிறு ஆணி.
தெரிந்து வாழு, நீ ஞானி!
-செல்லையா.
பொறுத்தல்!
நற்செய்தி: யோவான் 8:11.
நல்வழி:
பொறுத்துக் கொள்ளல் இறையின் அன்பு;
பொல்லார் நமையும் பொறுக்கிறார்.
வெறுத்துத் தள்ளல் குறையின் பண்பு.
வெளிச்சம் இல்லார் வெறுக்கிறார்.
அறுத்துச் செல்லும் அழிவு தடுப்பார்,
அன்புப் பொறுத்தல் பெருக்கிறார்.
மறுத்துத் திரிவின், மாண்பு கெடுப்பார்;
மத வெறியாலே சிறுக்கிறார்.
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
யோவான் 8:10.
நல்வழி:
உளச்சான்று வேலை செய்தால்,
ஒருவரையும் கல்லெறியோம்.
கிளைச்சான்றும் நாம் தேடோம்;
கேடு கெட்ட சொல்லெறியோம்.
பழச்சாற்றின் இனிமையெனும்,
பண்புகளால் நாம் நிறைவோம்.
இழக்காமல் இவை வளர்ப்போம்;
இன்னொருவர் குறைகூறோம்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
தவறே செய்யாதொருவர்!
நற்செய்தி: யோவான் 8:9.
9. அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள்.
நல்வழி:
தவறே செய்யாதொருவர் வந்து,
தன் கையாலே கல்லெறிவீர்.
அவரே பிறரைத் தண்டிப்பதற்கு,
அருகதையுள்ளார்; சொல்லறிவீர்.
எவரே உரைப்பார் இவ்வருந்தீர்ப்பு?
இயேசுவின் திருமொழி என்றறிவீர்.
இவரே நடுவர், இனிமேல் நமக்கு;
இவர் வழி தூய்மை நன்கறிவீர்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
இயேசுவின் எழுத்து!
நற்செய்தி: யோவான் 8:7-8. 7. அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,8. அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.
நல்வழி:
தரையில் எழுதிய இயேசு தீர்ப்பு,
தவற்றைச் சுட்டிக் காட்டலையா?
உரைநூல் வடிவில் வராத சேர்ப்பு,
ஊரை உணர்த்தி ஓட்டலையா?
திரையில் தோன்றா ஊழியர் உண்டு;
தெய்வ வாக்கைப் பரப்பலையா?
விரைவில் வருகிற நடுவர் கண்டு,
விரும்பும் தூய்மை நிரப்பலையா?
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
மௌனந்தானே நற்பதில்!
நற்செய்தி: யோவான் 8:6.
நல்வழி:
நம்மைக் குற்றப்படுத்தும் நோக்கில்,
நயவஞ்சகத்தைச் சொல்பவர்கள்,
தம்மைத் திருத்திக் கொள்வதற்கு,
தருவது எது நற்பதில்?
பொம்மை போன்று பேசாதிருத்தல்,
போதும் போதும் என்பவர்கள்,
மும்மை தெய்வச் செயலைக் காண்பர்;
மௌனந்தானே நல் மதில்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.