காது இருப்பின், கேட்போம்!
சூது எண்ணம் நிறைந்தோரைத்தான்,
சிறந்த அறிஞர் எனக் கண்டோம்.
தீது இதனால் வருவதை மறந்து,
திருடரைத் தலைவர் எனக் கொண்டோம்!
ஏது வேறு எங்கும் இல்லை;
எண்ணும் நெஞ்சைக் கழுவிடுவோம்.
காது கேட்க மறுப்போமென்றால்,
கடவுளின் தீர்ப்பில் அழுதிடுவோம்!
-கெர்சோம் செல்லையா.
