நற்செய்தி
நல்வாழ்வு:
வானின் செய்தி
நல்வாக்கு:
”விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.”
எனது சாதி!
எந்த சாதி என்பவரே,
எனது சாதி சொல்லவா?
அந்த சாதி யாவருக்கும்
சொந்த சாதி அல்லவா?
நான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வேளையும், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நிலைகளில் சாதி மாறுகிறவன். எப்படித் தெரியுமா?
காலையில் எழுந்தவுடன் இறைவேண்டல் ஏறெடுத்து, திருமறை வாசிக்கிறேன். அப்போது மட்டும் அந்தணன்.
அதன் பின்னர், என் வீட்டாரோடும், மற்றவர்களோடும் சண்டைபோடுகிறேன்; அப்போது நான் சத்திரியன்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னுடையவர்களை விற்கப் பார்க்கிறேன்; அவர்களை வைத்துப் பொருள் சேர்க்கப் பார்க்கிறேன். அப்போதெல்லாம் நான் வைசியன்.
உடல் உழைக்கும் போதெல்லாம், நான் சூத்திரன்.
உடல் அழுக்கைக் களையும்போதோ, நான் பஞ்சமன்.
இப்படி நான் மட்டுமல்ல, சாதி வேறுபாடு பார்க்கிற எல்லா மனிதர்களும் எல்லா இடங்களிலும் சாதி மாறுகிறார்கள்!
எனவேதான் சொல்கிறோம்:
ஒன்றே குலம், ஒருவனே தெய்வம்!
நன்றே கேட்போம்; யாவரையும் இணைப்போம்!
நற்செய்தியும் நல்வாழ்வும்
நற்செய்தி
நல்வாழ்வு:
The Truth
நற்செய்தி
”அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர்.”
நற்செய்தி
” தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான பணியாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறு பெற்றவர்.அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”
நல்வழி காட்டும் நல்லவர் இயேசு
நம்முள் உண்டு, பணிந்திடுவோம்.
சொல்வழி அறிந்து செல்வதே வாழ்வு;
சிறந்த பயனை அணிந்திடுவோம்!
நல்வாழ்த்து:
தீமைகளையும் நன்மையாக்கும்
தெய்வ அருளால் நிறைந்திடுவோம்.
ஊமையாக இருந்தது போதும்;
உண்மைத் தெய்வம் புகழ்ந்திடுவோம்!
நல்வாக்கு;
மத்தேயு 24:43-44.
“இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.”
நல்வாழ்வு:
திருடனாய் வாழ்ந்த என்னை உணர்த்த,
திருடனின் உவமை உரைத்தீரா?
அருமையான காலமும் தந்து,
அருட்பணி செய்ய வைத்தீரா?
வருகை எப்போதென்று அறியேன்;
வரும்போதென்னை அழைப்பீரா?
ஒருமுறைகூட உம்மைக் கேட்பேன்;
உமது அரசில் நினைப்பீரா?
ஆமென்.