விண்மீன்களின் எண்ணிக்கையை விடவும் பெருகுவாய்!

விண்மீன்களின் எண்ணிக்கையை விடவும் பெருகுவாய்!
விசுவாசம் அல்லது நற்றமிழில் ‘பற்றுறுதி’ என்றுரைக்கும் கிறித்தவச் சொல்லின் பொருள் அறிவோம். இச்சொற்படி பற்றுறுதி கொண்டோரில் அறிவு (கேள்விப்படுதல்) இருக்கவேண்டும்; கேட்டவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவேண்டும்; இத்துடன் முடிக்காது, ஏற்றுக்கொண்ட இறைவாக்கின்படி வாழ ஒப்புக் கொடுக்கவேண்டும். அறிவு+ ஏற்பு+ ஒப்படைப்பு = பற்றுறுதி. இதுவே, ஆபிரகாமினின் பற்றுறுதி; அவரது பிள்ளைகளின் பற்றுறுதி; புதிய ஏற்பாட்டு கிறித்தவர்களின் பற்றுறுதி. முதல்நிலையில் நிற்பவர் உண்டு; இரண்டாம் நிலையிலும் வருபவர் உண்டு. மூன்றாம் நிலையில் வந்தால் மட்டுமே பற்றாளர் எனும் விசுவாசியாகலாம். ஆபிராகாம் கேட்டார், ஏற்றுக் கொண்டார், கீழ்ப்படிந்தார். நாம் கேட்கிறோம், ஏற்கிறோம், கீழ்ப்படிகிறோமா? நன்றி; நல்வாழ்த்துகள். பற்றுறுதியில் வளர்வோம்.

விண்மீன்களின் எண்ணிக்கையை விடவும் பெருகுவாய்!
விசுவாசம் அல்லது நற்றமிழில் 'பற்றுறுதி' என்றுரைக்கும் கிறித்தவச் சொல்லின் பொருள் அறிவோம். இச்சொற்படி பற்றுறுதி கொண்டோரில் அறிவு (கேள்விப்படுதல்) இருக்கவேண்டும்; கேட்டவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவேண்டும்; இத்துடன் முடிக்காது, ஏற்றுக்கொண்ட இறைவாக்கின்படி வாழ ஒப்புக் கொடுக்கவேண்டும். அறிவு+ ஏற்பு+ ஒப்படைப்பு = பற்றுறுதி. இதுவே, ஆபிரகாமினின் பற்றுறுதி; அவரது பிள்ளைகளின் பற்றுறுதி; புதிய ஏற்பாட்டு கிறித்தவர்களின் பற்றுறுதி. முதல்நிலையில் நிற்பவர் உண்டு; இரண்டாம் நிலையிலும் வருபவர் உண்டு. மூன்றாம் நிலையில் வந்தால் மட்டுமே பற்றாளர் எனும் விசுவாசியாகலாம். ஆபிராகாம் கேட்டார், ஏற்றுக் கொண்டார், கீழ்ப்படிந்தார். நாம் கேட்கிறோம், ஏற்கிறோம், கீழ்ப்படிகிறோமா? நன்றி; நல்வாழ்த்துகள். பற்றுறுதியில் வளர்வோம்.
Like · ·

எதை விதைத்தால் இன்பம் உய்ப்போம்?

எதை விதைத்தால் இன்பம் உய்ப்போம்?
நற்செய்தி மாலை: மாற்கு 3:3-4.
“இயேசு கை சூம்பிவரை நோக்கி, ‘ எழுந்து, நடுவே நில்லும் ‘ என்றார். பின்பு அவர்களிடம், ‘ ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை? ‘ என்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள்.”
நற்செய்தி மலர்:
விதை விதைத்து விளைச்சல் அறுப்போம்.
வீணாய் வினைகள் விதைத்தல் வெறுப்போம்.
கதை வழியாய் உண்மைகள் கேட்போம்;
கருத்தை இழந்தவர் முடிவும் காண்போம்.
எதை விதைத்தால் இன்பம் உய்ப்போம்?
என்றே எண்ணி நன்மை செய்வோம்.
இதை உரைக்கும் எளியவன் இவனும்,
எழுதிச் செல்லாதிருக்க வைப்போம்!
ஆமென்.

பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பெற்றோரே.


​இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இதே பெப்ருவரி பதினான்காம் நாளில்தான், எனது தாயார் கிளாறி பெல் செல்லையா அவர்கள் இவ்வுலக வாழ்க்கையை முடித்து, அவர்களை ஆண்டு வழி நடத்திய ஆண்டவருடன் இணைந்தார்கள்.
ஈத்தவிளை பாக்கியநாதன்-லீதியாவிற்கு மகளாய்ப் பிறந்த பெருமையும், திருவட்டாறு (புத்தன்கடை) செல்லையாவுக்கு மனைவியாய் வாழ்ந்த பேறும், ஆறு பிள்ளைகளை அறவழியில் நடக்கவைத்து, ஆங்காங்கே உயர்ந்த இடங்களில் அமரவைத்துப் பார்த்த மகிழ்வும் பெற்றவர்.
தனது வயிற்றில் உருவாகும்போதே, தன் மகனை இறைப்பணிக்கு ஒப்படைத்தவர்; தந்தை இறையை மறுத்துத் தவறாய் பேசித்திரிந்த தனது மகன், கிறித்துவில் புதுவாழ்வுபெற நீண்ட காலம் இறைவேண்டல் ஏறெடுத்தவர். கிறித்துவில் பிறந்த மகன் வெளிநாட்டு வேலை செய்த நாளில், கிறித்துவில் வளர்வதற்கு, கிறித்துவின் அறவழியைக் கடிதங்கள் வழியாய்க் கற்றுக் கொடுத்தவர்.
இறக்கும் வேளையில், இனிய கணவருடன் எல்லாப் பிள்ளைகளும் அருகிலிருக்க, இயேசுவிற்குக் கொடுத்த மகன் இல்லாதிருந்தும், அவனை ஆண்டவர் ஊழியப் பாதையில் வழி நடத்துவார் என்று உறுதியாய் நம்பியவர்.
வாழ்ந்த பகுதியில் இருந்த எளிய திருக்கூட்டம் வளர, அருட்பணியில் ஈடுபட்டவர்; வீழ்ந்து கிடந்த தனது ஊர்ப்பகுதி மக்கள் உயர, தான் கற்ற கல்வியாலும், தன்னுள் வாழ்ந்த கிறித்துவின் அருளாலும், நற்பணியாற்றியவர்.
இவரது மகன் என்று சொல்லும் பெருமையை எனக்குத்தந்து, எப்படி இறைப்பணி செய்யவேண்டும் என்று எனக்குக் கற்றுத்தந்து, இன்றும் எனக்கு வழி காட்டும் என் தாயாரை நினைக்கிறேன்.
“பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பெற்றோர்களே.”
நீதிமொழி 17: 6.
-கெர்சோம் செல்லையா.

இவன்தான் தமிழன்!

இவன்தான் தமிழன்!
திரை கடல் ஓடி திரவியம் சேர்த்தான்;
கரை தெரியாது கடலினைப் பார்த்தான்.
துரைபோல் வந்தவர் காலில் விழுந்தான்;
இரையாய் இவனே தன்னை இழந்தான்!
-கெர்சோம் செல்லையா.

South Asia expert John Guy says that South India traders in the first millennium were driven by an appetite for gold.
SCROLL.IN

குற்றம் கண்டு பிடிப்பதே தொழில்!

​படைத்தவர் வாக்கு முடிக்கிறது!

நற்செய்தி மாலை: மாற்கு 3: 1-2
“அவர் மீண்டும் தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர்.”
நற்செய்தி மலர்:
குற்றம் குறையைக் கண்டுபிடிக்கக்
கூட்டம் ஓன்று துடிக்கிறது.
மற்றோர் செய்யும் நன்மையைக்கூட 
மடமை என்று கடிக்கிறது!
வெற்றுவேட்டு வெடிப்பதைக் காட்ட 
வேலையற்றோரைப் பிடிக்கிறது.
பற்றினால்தான் நன்மை பிறக்கும்;
படைத்தவர் வாக்கு முடிக்கிறது!
ஆமென்.

எல்லா நாளும் இறைவனின் நாளே!

 நற்செய்தி மாலை: மாற்கு 2:27-28.
“மேலும் அவர் அவர்களை நோக்கி, ‘ ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை. ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே ‘என்றார்.”
நற்செய்தி மலர்:
எல்லா நாளும் இறைவனின் நாளே;
என்றும் எங்கும் பணிவோமே.
இல்லா ஏழைக்கிரங்கல்தானே,
இனியவர் ஊழியம் அணிவோமே.
செல்லாக் காசாய் கிடந்ததுபோதும்;
செய்தியை நன்மையில் சொல்வோமே.
பொல்லார் கூட வந்து கேட்பார்;
பொறுமையில் உலகை வெல்வோமே!
ஆமென்.

மாற்றுவீர் சட்டங்களை!

​நற்செய்தி மாலை: 2:25-26.

அதற்கு அவர் அவர்களிடம், ‘ தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்ததே இல்லையா? அபியத்தார் தலைமைக் குருவாய் இருந்தபோது தாவீது இறைஇல்லத்திற்குள் சென்று, குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா? ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
ஒழுங்குபடுத்தும் சட்டம் இன்று,
உயிரைக் காக்க வெறுக்குமெனில், 
விழுங்கி அதனை ஏப்பம் விடுவோம்;
வேறொரு சட்டம் பிறப்பித்து!
அழுது கதறும்குழந்தையின் ஒலிக்கு,
அன்னையின் காது மறுக்குமெனில்,
எழுந்து அவளை அடக்கம் செய்வோம்;
இறந்துபோனாள் அவள் என்று!
ஆமென்.

வரலாற்றுப் பிழை!


​சேரனும் பாண்டியும் ஆண்ட அந்நாட்டை,
கேரளம் என்று மாற்றி விட்டார்கள்.
வேருடன் மரத்தை வெட்டிடும் கோடரி
விளைநிலம் அமைத்த கதை புனைந்தார்கள்.
பாரினை ஆண்ட பழம் பெருங்குடிகள்
படைவலி இழந்து  தாழ்ந்துவிட்டார்கள்.
வாருங்கள் அருமை நண்பராய் நீங்கள்,
வரலாற்றின் பிழை திருத்திவிடுங்கள்!

இவரது வெறியை மாற்றீரோ?


​இவரது வெறியை மாற்றீரோ?

நற்செய்தி மாலை: மாற்கு: 2:23-24.

“ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்துகொண்டே வழி நடந்தனர். அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், ‘ பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்? ‘ என்று கேட்டனர்.”
நற்செய்தி மலர்:
புல்லை மாடு மேய்ந்ததனாலே,
புனிதம் போனது எனலாமோ?
நெல்லை ஓய்வில் கொய்ததனாலே,
நேர்மையில் விழுந்தார் எனலாமோ?
கல்லாதவரும் சரி என்றுரையார்;
கடவுளின் மக்கள் அறியீரோ?
எல்லாச் செயலும் காணும் இறையே, 
இவரது வெறியை மாற்றீரோ?
ஆமென்.

வேண்டாம் பழமை!


​பழையதும் புதியதும்!

நற்செய்தி மாலை: மாற்கு 2:21-22.

“எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்த புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் பெரிதாகும். அதுபோலப் பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றிவைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்; மதுவும் தோற்பைகளும் பாழாகும். புதிய மது புதுத் தோற்பைகளுக்கே ஏற்றது ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
கிழிந்த பழைய ஆடையைத் தைக்க  
கோடித் துணியை ஒட்டுகிறேன்.
பிழிந்த சாற்றை ஊற்றி வைக்க,
பழைய குவளையில் கொட்டுகிறேன்.
இழிந்த வாழ்க்கைத் தவற்றைக் கொண்டு 
இந்த நாளைக் கட்டுகிறேன்.
வழிந்த அருளால் புதுமையாக்கும்;
வேண்டாம் பழமை, வெட்டுகிறேன்!
ஆமென்.