இறைவாக்கினர் போன்றே
இறைவாக்கினர் போன்று….
The Truth Will Make You Free
இறைவாக்கினர் போன்றே
பார் முழுதும் புகழ்ந்தாலும்….
தற்புகழ் வெறுக்குந் தன்மை!
நற்செய்தி மாலை: மாற்கு 5:40-43.
“அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக் கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், ‘ தலித்தா கூம் ‘ என்றார். அதற்கு, ‘ சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு ‘ என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்மறந்து நின்றார்கள். ‘ இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது ‘ என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.”
நற்செய்தி மலர்:
நற்பணி செய்யும் ஆண்டவரின்,
நயந்த பண்பினைப் பார்ப்போமா?
தற்புகழ் எதுவும் கொள்ளாது,
தடுக்குந் தன்மையைச் சேர்ப்போமா?
பற்பல படங்கள் காட்டும் நாம்,
பணிந்து இறையிடம் கற்போமா?
அற்பராய் நம்மை மாற்றாது,
ஆண்டவர் போல நிற்போமா?
ஆமென்.
முகநூற் படங்களைப் பார்க்கும்போது…..
உங்கள் வாழ்வில், ஒளி பரவ வாழ்த்துகள்!
——————————————————-
இறையாய் இருப்போன் ஒளிர்கின்றான்;
இருளை எங்கும் ஒழிக்கின்றான்.
நிறைவாய் வெளிச்சம் பகிர்வதற்கு,
நமையும் விளக்காய் அழைக்கின்றான்.
பறையாய் வெடிக்கும் கரிமருந்தால்,
பறவையும் அஞ்சுதல் காண்கின்றான்.
சிறையாய்ப் பிடிக்கும் தீச்செயலைச்
சீக்கிரம் கைவிடக் கேட்கின்றான்!
-கெர்சோம் செல்லையா.
பற்றுறுதி சற்றுமற்ற …
உம் உடை தொடுவேன்…
உம்கையாலே தொட்டால் போதும்!
நற்செய்தி மாலை: மாற்கு 5:21-24
“இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார். இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக் கொண்டே பின்தொடர்ந்தனர்.”
நற்செய்தி மலர்:
எம் கையாலே எது செய்தாலும்,
எமக்கு வருதல் நோவு ஆகும்.
உம் கையாலே தொட்டால் போதும்,
ஒவ்வொருநோயும், ஓடிப் போகும்.
இம்மாப் பெரிய நோய் என்றாலும்
இலாது போகும், மருந்தைக் கூறும்.
நம்பாமலே நடப்போர்களுக்கும்,
நற்செய்தியாம் விருந்தைத் தாரும்!
ஆமென்.
கடைநிலையோரும் பயன்பெறவே….
நற்செய்தி மாலை: மாற்கு 5:18-20.
“அவர் படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடு கூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார். ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, “உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்” என்றார். அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார். அனைவரும் வியப்புற்றனர்.”
நற்செய்தி மலர்:
கற்ற அறிவும் பெற்ற மீட்பும்
கடைநிலையோர்க்கும் பயன்தரவே,
உற்று நோக்கும், ஊரும் உறவும்,
உயர்ந்து ஏற, இரங்கிடுமே.
குற்ற மில்லா வாழ்வு வாழும்
கிறித்து அன்பில் அவர் வரவே,
பற்று கொண்டு தொண்டு ஆற்றும்;
பரிசு மீட்பு இறங்கிடுமே!
ஆமென்.