அம்மண அவலம் அழகு என்று,
அவிழ்த்து போடுகிறார் இன்று.
தம்முளம் குத்திக் காட்ட அன்று,
தவறை மூடியவர் உண்டு.
செம்மனமாக நம் மனம் திகழ,
நம்பினார் வாழ்ந்து நன்கு மகிழ,
நமக்கு அருளிய அவர் வழி!
(தொடக்க நூல் 3)

The Truth Will Make You Free
ஒவ்வொரு படைப்பும் கண்டு,
இறையே மகிழ்வு கொண்டு,
அவ்வகை அனைத்தும் நன்று,
என்று சொன்னார் அன்று.
இவ்வித படைப்பில் மிக நன்று
எவ்விதத்திலும் மனிதனென்று,
இறை வாக்குரைப்பதுண்டு.
இப்படிச் சொல்கிற போது
எப்படி என்பாருமுண்டு.
தப்புகள் நீங்கும் என்று,
தருகிறேன் ஏது இன்று.
ஒப்பிலாப் பிறவி மனிதர்;
உண்மையில் இறை சாயல்.
அப்படியாகத்தான் படைத்தார்;
அனைவரையுமே அன்று!
(தொடக்க நூல் 1:4-27)
இறைவன் எங்கே?
(எழுதி வழங்குபவர்:
கெர்சோம் செல்லையா)
அங்குமில்லை, இங்குமில்லை,
ஆண்டவர் எனும் இறைவன்;
எங்குமில்லை, எங்குமில்லை,
என்கிறான் அறியா மனிதன்.
உங்களுள்ளே உங்களுள்ளே
ஒளிந்து கடந்திருப்பேன்.
இங்கு எனை ஏற்பவர் யார்?
என்கிறான் நல்லிறைவன்!
இன்று இறை காண்பதற்கு
என்னவெல்லாம் உண்டு?
என்று இங்கு கேட்பவர்க்கு,
நல்ல விடை உண்டு.
நின்று அசைந்தாடுகின்ற
நிலையில்லா இயற்கை
அன்று முதல் சொல்கிறது,
அதுவே படைப்பென்று!
படைப்பு ஒன்று உண்டு எனில்,
படைத்தவர் அவர் எங்கே?
கிடைத்திடும் வரலாறுகளில்
கேட்கிறார் பலர் இங்கே.
துடைத்திடும் கண் காட்சிகளில்,
தெரியாது இருப்பதினால்,
விடைக்கெல்லாம் அடித்தளமாம்
விவிலியம் பார், அன்பே!
தொடரும்……