கயமை வளர்த்தவே கல்வியா?

கயமை வளர்த்தவே கல்வியா?
நற்செய்தி மாலை: மாற்கு 11:18-19.
“தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் இதைக் கேட்டு, அவரை எப்படி ஒழித்துவிடலாம் என்று வழிதேடினார்கள். எனினும் கூட்டத்தினர் அனைவரும் அவரது போதனையில் ஆழ்ந்து வியந்திருந்ததால் அவர்கள் அவருக்கு அஞ்சினார்கள். மாலை வேளை ஆனதும் இயேசுவும் சீடர்களும் நகரத்திலிருந்து வெளியேறினார்கள்.”
நற்செய்தி மலர்:
கயமை வளர்ப்பவர் யார் என்றேன்?
கற்றவர் பெயரைத்தான் சொன்னார்!
கற்ற கல்வி எதுயென்றேன்?
கல்வியும் கொள்ளைதான் என்றார்!
இயங்கும் அமைப்பே தப்பென்றால்,
எப்படி நன்மை வரும் என்றேன்?
எல்லாம் நன்மையாக்குபவர்,
இறைவன் நம்முள்தான் என்றார்!
ஆமென்.

No automatic alt text available.

தூசும் எதிராய்ச் சான்றுரைக்கும்!

தூசும் எதிராய்ச் சான்றுரைக்கும்!
நற்செய்தி மாலை: மாற்கு 11:15-17.
“அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். கோவிலுக்குள் சென்றதும் இயேசு அங்கு விற்பவர்களையும் வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார்; நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார். கோவில் வழியாக எந்தப் பொருளையும் எடுத்துச் செல்ல அவர் விடவில்லை.” என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும் ‘ என்று மறைநூலில் எழுதியுள்ளது ″ என்று அவர்களுக்குக் கற்பித்தார்; ‘ ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
காசு பணம் வாங்கா மீட்பை,
கடவுள் பெயரால் அறிவித்தோம்.
பேசுகின்ற சொல்லின் எடைக்கு,
பெருந்தொகையைக் குறிவைத்தோம்.
மாசு மருவில்லா இயேசை,
மண், பொன் வாங்க மறுதலித்தோம்;
தூசும் எதிராய்ச் சான்றுரைக்கும்,
திருந்தாவிடில் அறுபடுவோம்!
ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions

Comment

உண்மையன்பால் அழகூட்டுமே!

உண்மையன்பால் அழகூட்டுமே!

சமயம் என்பது, சாயம் மட்டுமே.
சடங்கு செய்கிறார், அதைக் காட்டவே.
இமயம் போன்றது, இவரின் தீட்டுமே;
இதை மறைக்கவே, ஆர்ப்பாட்டமே!

அமைதி என்பது இறையில் மட்டுமே.
அன்பு உருவமே அதைக் காட்டுமே.
உமைப் படைத்ததும் அவர் திட்டமே.
உண்மையன்பால் அழகூட்டுமே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: beard and one or more people

பொங்கி உம்மை வாழ்த்துவரே!

பொங்கி உம்மை வாழ்த்துவரே!
நற்செய்தி மாலை: மாற்கு 11:12-14.
“மறுநாள் பெத்தானியாவை விட்டு அவர்கள் திரும்பிய பொழுது இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று. இலையடர்ந்த ஓர் அத்திமரத்தை அவர் தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார். சென்றபோது இலைகளைத்தவிர வேறு எதையும் அவர் காணவில்லை. ஏனெனில் அது அத்திப் பழக்காலம் அல்ல. அவர் அதைப் பார்த்து, ‘ இனி உன் கனியை யாரும் உண்ணவே கூடாது ‘ என்றார். அவருடைய சீடர்கள் இதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.”
நற்செய்தி மலர்:
பசியென்று வருபவரை,
பரிவுடன் பார்த்திடுவீர்.
புசியென்று உணவளித்து,
புன்னகையும் சேர்த்திடுவீர்.
கசியென்று இறையருளை,
கண் கலங்கிக் கேட்பவர்கள்,
பொசியும் அவரன்பால்,
பொங்கியுமை வாழ்த்துவரே!
ஆமென்.

Image may contain: 1 person

இன்றே மீட்பார், கிறித்தேசு!

இன்றே மீட்பார், கிறித்தேசு!
நற்செய்தி மாலை: மாற்கு 11:8-11.
“பலர் தங்கள் மேலுடைகளையும், வேறு சிலர் வயல் வெளிகளில் வெட்டிய இலைதழைகளையும் வழியில் பரப்பினர். முன்னேயும் பின்னேயும் சென்றவர்கள், ‘ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா! ‘ எஇன்றே மீட்பார், கிறித்தேசு!ன்று ஆர்ப்பரித்தனர். அவர் எருசலேமுக்குள் சென்று கோவிலில் நுழைந்தார். அவர் அனைத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு, ஏற்கெனவே மாலை வேளையாகி விட்டதால், பன்னிருவருடன் பெத்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.”
நற்செய்தி மலர்:
காற்று, நெருப்பு, மழையினிலே,
கடவுளின் நேர்மை காண்பவரே,
போற்றும் புவியோராட்சியிலே,
புனிதம் எதுவும் கண்டீரா?
நேற்று இன்று பார்த்ததுதான்,
நாளை திரும்பும் என்றறிந்து,
ஏற்றுக் கொள்வீர் இறையரசு;
இன்றே மீட்பார், கிறித்தேசு!
ஆமென்.

Image may contain: sky and outdoor

கட்டப்பட்ட கழுதை நானே!

கட்டப்பட்ட கழுதை நானே!
நற்செய்தி மாலை: மாற்கு 11: 4-7.
“அவர்கள் சென்று ஒரு வீட்டுவாயிலுக்கு வெளியே, தெருவில் ஒரு கழுதைக் குட்டியைக் கட்டி வைத்திருப்பதைக் கண்டு அதை அவிழ்த்துக் கொண்டிருக்கையில் அங்கே நின்றுகொண்டிருந்த சிலர் அவர்களிடம், ‘ என்ன செய்கிறீர்கள்? கழுதைக் குட்டியையா அவிழ்க்கிறீர்கள்? ‘ என்று கேட்டனர். அவர்கள் இயேசு தங்களுக்குக் கூறியபடியே சொல்ல, அங்கு நின்றவர்களும் போகவிட்டனர். பிறகு அக்கழுதைக்குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து, அதன் மேல் தங்கள் மேலுடைகளைப் போட, அவர் அதன் மீது அமர்ந்தார்.”

நற்செய்தி மலர்:
கட்டப்பட்ட கழுதை நானே.
கட்டவிழ்க்க, பயன்படுவேனே.
திட்டமிடும் இறைவன் முன்னே,
தெண்டனிட்டுப் பணிகின்றேனே.
முட்டுந் தன்மை விட்டிடுவேனே.
முரட்டு உதையும் கைவிடுவேனே.
கெட்டவரும் மீள்வார்தானே;
கிறித்து அமர, நான் நடந்தேனே!
ஆமென்.

Image may contain: grass, outdoor and nature

மிகுதியாய்ச் சேர்த்தேன்;

 

மிகுதியாய்ச் சேர்த்தேன்;
மீதியும் இல்லை.
கொஞ்சமாய்ப் பார்த்தேன்;
குறையும் இல்லை.
தகுதியாய் நானும்
இருந்தது மில்லை;
தந்திடும் இறையைப்
புகழ்வதே வேலை!
 
-கெர்சோம் செல்லையா.
No automatic alt text available.

பொறுமையின் சின்னம்!

பொறுமையின் சின்னம்!
நற்செய்தி மாலை: மாற்கு 11-1-3.
“இயேசு தம் சீடரோடு ஒலிவமலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்து, எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களை அனுப்பி, ″ உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம், ‘ ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? ‘ என்று கேட்டால், ‘ இது ஆண்டவருக்குத் தேவை, இதை அவர் உடனே திருப்பி இங்கு அனுப்பிவிடுவார் ‘ எனச் சொல்லுங்கள் ″ என்றார்.”

நற்செய்தி மலர்:
பொறுமையின் சின்னம் கழுதையாகும்.
போர் வெறி கொள்வதோ குதிரையாகும்.
வெறுமையில் உழலும் எளியோர்க்குதவும்.
வேண்டாம் நம்மில் வெறித்தனம் எதுவும்.
அருமையாய் இதை எடுத்துக் கூறும்,
ஆண்டவர் செயல்கள் மாதிரியாகும்.
பெருமைகள் விட்டு உழைப்பவர் எவரும்,
பேரரசருக்கோ, பாதிரியாகும்!
ஆமென்.

Image may contain: outdoor and nature

உருவில் அழகு குறையும்போது….

உருவில் அழகு குறையும்போது….
நற்செய்தி மாலை: மாற்கு 10:49-52.

“இயேசு நின்று, ‘ அவரைக் கூப்பிடுங்கள் ‘ என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, ‘ துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார் ‘ என்றார்கள். அவரும் தம் மேலுடையை எறிந்து விட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார். இயேசு அவரைப் பார்த்து, ‘ உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? ‘ என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், ‘ ரபூனி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும் ‘ என்றார். இயேசு அவரிடம், ‘ நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று ‘ என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.”

நற்செய்தி மலர்:
உருவில் அழகு குறையுமானால்,
ஒப்பனை செய்ய ஓடுகிறோம்!
தெருவில் அழுக்கு நிறையுமானால்,
தென்படுவோரைச் சாடுகிறோம்!
எருவில்லாத பயிரைப் பார்த்து,
ஏங்கலும் கொண்டு வாடுகிறோம்.
கருவிலிருந்தே பார்வை இல்லார்,
களிப்புடன் வாழ பாடுவோமா?
ஆமென

Image may contain: 1 person , close-up

பார்வையற்றோர் படுந்துயர்…

பார்வையற்றோர் படுந்துயர்…
நற்செய்தி மாலை: மாற்கு 10:46-48.
“இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, ‘ இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும் ‘ என்று கத்தத் தொடங்கினார். பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், ‘ தாவீதின் மகனே, எனக்கு இரங்கும் ‘ என்று இன்னும் உரக்கக் கத்தினார்.”
நற்செய்தி மலர்:
பார்வை அற்றோர் படுந்துயரைப்
பார்வை யுற்றோர் பாராமல்,
நேர்மை யுற்றோர் எனவுரைத்தால்,
நேரில் தெய்வம் காணாரோ?
கூர்மையுற்ற அறிவுத் திறனைக்
கொடுத்துதவும் நல்லிறைவன்,
ஆர்வத்தோடே அவர்க்குதவ,
அன்பில் வந்து பேணாரோ?
ஆமென்.

(இப்படத்தில் இருப்பவர் எனது அக்காளின் இசைப்பயிற்சி ஆசிரியர் திருவட்டாறு ஆறுமுகம் பிள்ளை அவர்களாவார். கர்நாடக இசையில் பல பாடல்கள் எழுதி, கற்றுக்கொடுத்த இவர், சில ஆண்டுகள் எங்கள் திருவட்டாறு கிறித்து இல்லத்திலும் தனித்து வந்து, கற்றுக் கொடுத்தது, எங்கள் பேறாகும்.)

Image may contain: 1 person , indoor
LikeShow More Reactions

Comment