ஏழை எளியோர் இறைவனுக்குரியோர்;
கோழை என்று புறந் துரத்தாமல்,
கொடுத்து உதவி செய்திடுவீர்.
நாளை எண்ணிக் கவலை உறாதீர்;
நடத்தும் இறையருள் பெற்றவராய்,
வேளை தோறும் வேண்டுதலினால்,
விண்ணின் அரசுள் உய்திடுவீர்!
(மத்தேயு: 5-7)
The Truth Will Make You Free
எந்த மலையென யானும் அறியேன்;
இயேசு அமர்ந்து பொழிகிறார்.
தந்தை இறையின் அரசிற்கழைத்து,
தாழ்மை நாடி மொழிகிறார்.
இந்த நாளிலும் இதுபோற் செய்தி,
இல்லை என்றே சொல்கிறார்.
நைந்த நெஞ்சும் செம்மையாகும்,
நேர்வழி வந்தோர் வெல்கிறார்!
(மத்தேயு: 5-7)