
நல்வாழ்த்து:
The Truth Will Make You Free

நல்வாழ்த்து:
எளியோர் கடக்கும் இச்சிறு பாலமும்,
இணைக்கும் பணியைச் செய்கிறதே.
ஒளிமயமான இறையுடன் சேர்க்கும்
ஊழியம் பாலம் போன்றதுவே.
தெளிவைக் கொடுக்கத் தேவை எதுவோ,
தெய்வத்தின் ஆவி தந்திடுமே.
வளியாய், நீராய், நெருப்பாய் வந்து,
வழி நடத்தி இணைத்திடுமே!
-கெர்சோம் செல்லையா.



நல்வாழ்வு:
சுவர்களின் நடுவில் முழங்கும் வாக்கு,
செயல்பட அவரும் செல்வாரா?
தவறுகள் உணர்ந்து, தம் நிலை அறிந்து,
தாழ்ந்தோர் எழும்பக் கொடுப்பாரா?
எவர் எவருக்கோ எடுத்துக் கொடுத்து,
ஏமாறுவதை விடுப்பாரா?
-கெர்சோம் செல்லையா.

நல்வாழ்த்து:
தூசைத் தட்டி எழும்பி விடு;
துயர் தருவாரை மறந்துவிடு.
ஏசையாமேல் பற்று வைத்து
ஏழையருக்கு இரங்கிவிடு!
-கெர்சோம் செல்லையா.

எவர்கள் உதவிட வருவாரோ,
அவர்கள் இறையின் ஊழியராம்;
சுவர்கள் எழுப்பிப் பிரிக்காமல்,
சேர்க்கும் பணியைச் செய்வாராம்!
-கெர்சோம் செல்லையா.

