Category: நற்செய்தி
நற்செய்தி
நல்வாழ்வு:
The Truth
நற்செய்தி
”அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர்.”
நற்செய்தி
” தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான பணியாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறு பெற்றவர்.அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”
நல்வழி காட்டும் நல்லவர் இயேசு
நம்முள் உண்டு, பணிந்திடுவோம்.
சொல்வழி அறிந்து செல்வதே வாழ்வு;
சிறந்த பயனை அணிந்திடுவோம்!
நல்வாழ்த்து:
தீமைகளையும் நன்மையாக்கும்
தெய்வ அருளால் நிறைந்திடுவோம்.
ஊமையாக இருந்தது போதும்;
உண்மைத் தெய்வம் புகழ்ந்திடுவோம்!
நல்வாக்கு;
மத்தேயு 24:43-44.
“இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.”
நல்வாழ்வு:
திருடனாய் வாழ்ந்த என்னை உணர்த்த,
திருடனின் உவமை உரைத்தீரா?
அருமையான காலமும் தந்து,
அருட்பணி செய்ய வைத்தீரா?
வருகை எப்போதென்று அறியேன்;
வரும்போதென்னை அழைப்பீரா?
ஒருமுறைகூட உம்மைக் கேட்பேன்;
உமது அரசில் நினைப்பீரா?
ஆமென்.
The Truth
நற்செய்தி
நாள்தோறும் நற்செய்தி
நற்செய்தி
இன்று கேட்கும் இறைவனின் வாக்கு
நன்கு நம்மைச் சீராக்கிடட்டும்.
என்று வேண்டி எழுதும் நானும்
அன்பில்வாழ அருள் பெருகட்டும்!
நல்வாழ்த்து:
ஒழியா அன்பில் நடப்பதுதானே
உண்மையான இறைவழிபாடு.
வழியாய் வந்த கிறித்துவைத்தானே
வணங்கிப் புகழ்தல் நற்பண்பாடு!
நல்வாக்கு:
மத்தேயு 24:34-35.
”இவை அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா.”
நல்வாழ்வு:
மண்ணழியும்,
மரம் செடிகொடியும் அழியும்.
விண்ணழியும்,
விளக்குச் சுடரும் அழியும்.
கண்ணுள் வந்த
காட்சிகள் அழிய, எதுதான் நிற்கும்?
எண்ணுகின்றேன்;
இயேசுவின் வாக்கு நிலைக்கக் கண்டேன்!
ஆமென்.
www.thetruthintamil.com