நெஞ்சே கேள்!

நல்வாழ்த்து:
பித்தம் பிடித்து நான் எழுதவில்லை;
பிழைப்பிற்கென்றும் புகழவில்லை.
நித்தமும் உரைப்பது என் கடமை.
நெஞ்சே, புகழ்வாய் உன் இறையை!நல்வாக்கு:மத்தேயு 26:48-50.
“அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவன், ‘ நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு; அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள் ‘ என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். அவன் நேராக இயேசுவிடம் சென்று, ‘ ரபி வாழ்க ‘ எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான். இயேசு அவனிடம், ‘ தோழா, எதற்காக வந்தாய்? ‘ என்று கேட்டார். அப்பொழுது அவர்கள் இயேசுவை அணுகி, அவரைப் பற்றிப்பிடித்துக் கைதுசெய்தனர்.”

நல்வாழ்வு:
காட்டிக் கொடுக்கும் கயவனையும்
கனிந்து தோழன் என்றாரே.
கூட்டில் குதிக்கும் குருவியெனக்
கொதிக்கும் எனையும் காண்பாரே.
நாட்டின் நடப்பு பார்க்கையிலே
நல்லவர் வடிவில் யூதாசே.
கேட்டின் மக்கள் கெட்டொழிவார்;
கிறித்து போன்று இரு நெஞ்சே!
ஆமென்.

Photo: நெஞ்சே கேள்!<br />
நல்வாழ்த்து:<br />
பித்தம் பிடித்து நான் எழுதவில்லை;<br />
பிழைப்பிற்கென்றும் புகழவில்லை.<br />
நித்தமும் உரைப்பது என் கடமை.<br />
நெஞ்சே, புகழ்வாய் உன் இறையை!</p>
<p>நல்வாக்கு:மத்தேயு 26:48-50.<br />
"அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவன், ' நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு; அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள் ' என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். அவன் நேராக இயேசுவிடம் சென்று, ' ரபி வாழ்க ' எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான். இயேசு அவனிடம், ' தோழா, எதற்காக வந்தாய்? ' என்று கேட்டார். அப்பொழுது அவர்கள் இயேசுவை அணுகி, அவரைப் பற்றிப்பிடித்துக் கைதுசெய்தனர்."</p>
<p>நல்வாழ்வு:<br />
காட்டிக் கொடுக்கும் கயவனையும்<br />
கனிந்து தோழன் என்றாரே.<br />
கூட்டில் குதிக்கும் குருவியெனக்<br />
கொதிக்கும் எனையும் காண்பாரே.<br />
நாட்டின் நடப்பு பார்க்கையிலே<br />
நல்லவர் வடிவில் யூதாசே.<br />
கேட்டின் மக்கள் கெட்டோழிவார்;<br />
கிறித்து போன்று இரு நெஞ்சே!<br />
ஆமென்.

நிரப்பும் ஆண்டவரே!

நல்வாழ்த்து:
அதிசய வாக்கால் அருளைப் பொழியும்
அன்பு இறையே வாழ்த்துகிறேன்.
புதியனவற்றால் என்னை நிரப்பும்
புனிதா உம்மைப் போற்றுகிறேன்!

நல்வாக்கு:
மத்தேயு 26:47
இயேசுவைக் காட்டிக் கொடுத்தலும் கைது செய்தலும்:

“இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு அங்கு வந்தான். அவனோடு குருக்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் வந்தது.”

நல்வாழ்வு:
காசிற்காக எதையும் செய்யும்
கயவர் இன்றும் வருகின்றார்.
கத்தி, தடியைக் கையில் வைத்து,
கண்ணீர் ஊற்றித் தருகின்றார்.

பேசிச் செல்லும் உறவுகளாக
பேய் பிடித்தோர் இருக்கின்றார்.
பிழையுள் நானும் விழாதிருக்க,
பெரியவர் இயேசு பிரிக்கின்றார்!
ஆமென்.

Photo: நல்வாழ்த்து:

அதிசய வாக்கால் அருளைப் பொழியும் 
அன்பு இறையே வாழ்த்துகிறேன்.
புதியனவற்றால் என்னை நிரப்பும்
புனிதா உம்மைப் போற்றுகிறேன்!

நல்வாக்கு:
மத்தேயு 26:47
இயேசுவைக் காட்டிக் கொடுத்தலும் கைது செய்தலும்:

"இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு அங்கு வந்தான். அவனோடு குருக்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் வந்தது."

நல்வாழ்வு:
காசிற்காக எதையும் செய்யும் 
கயவர் இன்றும் வருகின்றார்.
கத்தி, தடியைக் கையில் வைத்து,
கண்ணீர் ஊற்றித் தருகின்றார்.

பேசிச் செல்லும் உறவுகளாக 
பேய் பிடித்தோர் இருக்கின்றார்.
பிழையுள் நானும் விழாதிருக்க,
பெரியவர் இயேசு பிரிக்கின்றார்!
ஆமென்.

மடைதிறந்த வெள்ளம்போல்

நல்வாழ்த்து:
கடன் கொடுக்கும் நெஞ்சம்போல்
கலங்கும் வேளைகளில்,
உடன் இருக்கும் இயேசுவினால்,
உள்ளம் மகிழ்வீரே!
திடன் கொடுக்கும் வாக்கருளித்
தெளிவைத் தருவதனால்,
மடை திறக்கும் வெள்ளம்போல்
மகிழப் புகழ்வீரே!

நல்வாக்கு:
மத்தேயு 26:45-46.
“பிறகு சீடர்களிடம் வந்து, ‘ இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? பாருங்கள், நேரம் நெருங்கி வந்து விட்டது. மானிட மகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படுகிறார். எழுந்திருங்கள், போவோம். இதோ! என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கி வந்து விட்டான் ‘ என்று கூறினார்.”

நல்வாழ்வு:
முக்காலம் அறிந்தவர் நீர்;
மும்மையு மாயிருந்தீர்.
எக்காலம் அறிந்திருந்தும்
யூதாசைச் சேர்த்திருந்தீர்
இக்காலம் எம் வாழ்வில்
ஏய்ப்பவரைக் காண்கின்றீர்.
அக்கோலம் அறியாத
அடிமையின் கண் திறப்பீர்!
ஆமென்.

Photo: நல்வாழ்த்து:
கடன் கொடுக்கும் நெஞ்சம்போல் 
கலங்கும் வேளைகளில்,
உடன் இருக்கும் இயேசுவினால்,
உள்ளம் மகிழ்வீரே!
திடன் கொடுக்கும் வாக்கருளித்  
தெளிவைத் தருவதனால்,
மடை திறக்கும் வெள்ளம்போல் 
மகிழப் புகழ்வீரே!

நல்வாக்கு:
மத்தேயு 26:45-46.
"பிறகு சீடர்களிடம் வந்து, ' இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? பாருங்கள், நேரம் நெருங்கி வந்து விட்டது. மானிட மகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படுகிறார். எழுந்திருங்கள், போவோம். இதோ! என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கி வந்து விட்டான் ' என்று கூறினார்."

நல்வாழ்வு:
முக்காலம் அறிந்தவர் நீர்;
மும்மையு மாயிருந்தீர்.
எக்காலம் அறிந்திருந்தும் 
யூதாசைச் சேர்த்திருந்தீர் 
இக்காலம் எம் வாழ்வில் 
ஏய்ப்பவரைக் காண்கின்றீர்.
அக்கோலம் அறியாத 
அடிமையின் கண் திறப்பீர்!
ஆமென்.

மன்றாட மறக்கவேண்டாம்!

நல்வாழ்த்து:
நம்புவோம் இயேசுவை நாம்;
நன்மைகள் பறந்து வரும்.
வம்புகளோ பாய்ந்தோடும்;
வாழ்த்துவோம் அவரை நாம்!

நல்வாக்கு:
மத்தேயு 26:43-44.
“அவர் திரும்பவும் வந்தபோது சீடர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவர் அவர்களை விட்டு மீண்டும் சென்று மறுபடியும் அதே வார்த்தைகளைச் சொல்லி மூன்றாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்.”

நல்வாழ்வு:
துன்பம் தமக்கென்றால்,
தூங்காது இருப்பவரே,
அன்பர் அடைந்தாலும்,
அயராது உழைப்பவரே,
இன்முக இயேசன்று
யாரை எதிர்பார்த்தார்?
மன்றாடிக் கேட்பவரை
மறுபடியும் தேடுகிறார்!
ஆமென்.

Photo: நல்வாழ்த்து:
நம்புவோம் இயேசுவை நாம்;
நன்மைகள் பறந்து வரும்.
வம்புகளோ பாய்ந்தோடும்;
வாழ்த்துவோம் அவரை நாம்!

நல்வாக்கு:
மத்தேயு 26:43-44.
"அவர் திரும்பவும் வந்தபோது சீடர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவர் அவர்களை விட்டு மீண்டும் சென்று மறுபடியும் அதே வார்த்தைகளைச் சொல்லி மூன்றாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்."

நல்வாழ்வு:
துன்பம் தமக்கென்றால்,
தூங்காது இருப்பவரே,
அன்பர் அடைந்தாலும், 
அயராது உழைப்பவரே,
இன்முக இயேசன்று 
யாரை எதிர்பார்த்தார்?
மன்றாடிக் கேட்பவரை 
மறுபடியும் தேடுகிறார்!
ஆமென்.
LikeLike ·  

மடியும் நெல்லைப் பார்!

நல்வாழ்த்து:
இன்பம் கூட்டும் இறையைப் புகழ்வேன்,
இன்றும் கூடத்தான்.
துன்பம் கழிக்கும் அவர் செயல் புகழ்வேன்;
துயர்கள் மறையத்தான்!

நல்வாக்கு:
மத்தேயு 26:42.
“மீண்டும் சென்று, ‘ என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக்கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும் ‘ என்று இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்.”

நல்வாழ்வு:
குடித்து முடித்தால்தான்
குவளை அகலுமெனில்,
கொஞ்சமும் வையேன் நான்;
குவளைத் துன்பந்தான்.

மடிந்து போனால்தான்
மணிக்கதிர் பிறக்குமெனில்,
மடிவேன் நெல்லாய் நான்;
மாநிலம் மகிழத்தான்!
ஆமென்.

Photo: நல்வாழ்த்து:
இன்பம் கூட்டும் இறையைப் புகழ்வேன்,
இன்றும் கூடத்தான்.
துன்பம் கழிக்கும் அவர் செயல் புகழ்வேன்;
துயர்கள் மறையத்தான்!

நல்வாக்கு:
மத்தேயு 26:42.
"மீண்டும் சென்று, ' என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக்கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும் ' என்று இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்."

நல்வாழ்வு:
குடித்து முடித்தால்தான் 
குவளை அகலுமெனில்,
கொஞ்சமும் வையேன் நான்;
குவளைத் துன்பந்தான்.

மடிந்து போனால்தான் 
மணிக்கதிர் பிறக்குமெனில்,
மடிவேன் நெல்லாய் நான்;
மாநிலம் மகிழத்தான்!
ஆமென்.

தூய ஆவியரே!

    1. நல்வாழ்த்து:
    2. போற்றிடுவோம் நல்லிறையை,
      புவிதனில் நாம் இருக்கையிலே.
      நேற்றிருந்தோர் இன்றில்லை;
      நினைப்போம் நாம் நம் நிலையை!

      நல்வாக்கு:
      மத்தேயு 26: 40-41.
      “அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், ‘ ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வமுடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள் ‘ என்றார்.”

      நல்வாழ்வு:
      தூய ஆவியரே,
      தெய்வத் திருவுருவே,
      துவளும் உடல் பாரும்;
      துணிவை நீர் தாரும்.

      மாய உலகினிலே,
      மயங்கி விழுகையிலே,
      மடையன் எனை மீட்க,
      மன்னா, நீர் வாரும்!
      ஆமென்.

      Photo: நல்வாழ்த்து:
போற்றிடுவோம் நல்லிறையை,
புவிதனில் நாம் இருக்கையிலே.
நேற்றிருந்தோர் இன்றில்லை;
நினைப்போம் நாம் நம் நிலையை!

நல்வாக்கு:
மத்தேயு 26: 40-41.
"அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், ' ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வமுடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள் ' என்றார்."

நல்வாழ்வு:
தூய ஆவியரே,
தெய்வத் திருவுருவே,
துவளும் உடல் பாரும்;
துணிவை நீர் தாரும்.

மாய உலகினிலே,
மயங்கி விழுகையிலே,
மடையன் எனை மீட்க,
மன்னா, நீர் வாரும்!
ஆமென்.
  1.  

துன்பக் குவளை ஏந்துகிறேன்.

நல்வாழ்த்து:
படையும் நம்பேன், எடையும் நம்பேன்.
படைத்தவர் உமையே நம்பிடுவேன்.
கிடைக்கும் இந்த புதிய நாளில்
கிறித்து புகழைப் பாடிடுவேன்!

நல்வாக்கு:
மத்தேயு 26:38-39.
“அவர், ‘ எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள் ‘ என்று அவர்களிடம் கூறினார். பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, ‘ என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும் ‘ என்று கூறி இறைவனிடம் வேண்டினார்.

நல்வாழ்வு:
துன்பக் கடலில் நீந்துகிறேன்;
துயரக் குவளையும் ஏந்துகிறேன்.
இன்பம் மட்டும் போதுமென்று,
இதனை விடவும் விரும்புகிறேன்.

அன்றைய நாளின் உம் வேண்டல்,
அருள் பொழியத் தெளிவுற்றேன்.
ஒன்றுமில்லை என் வலியே;
உணர்ந்து நானும் குடித்திடுவேன்!
ஆமென்.

Photo: நல்வாழ்த்து:
படையும் நம்பேன், எடையும் நம்பேன்.
படைத்தவர் உமையே நம்பிடுவேன்.
கிடைக்கும் இந்த புதிய நாளில் 
கிறித்து புகழைப் பாடிடுவேன்!

நல்வாக்கு:
மத்தேயு 26:38-39.
"அவர், ' எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள் ' என்று அவர்களிடம் கூறினார். பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, ' என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும் ' என்று கூறி இறைவனிடம் வேண்டினார்.

நல்வாழ்வு:
துன்பக் கடலில் நீந்துகிறேன்;
துயரக் குவளையும் ஏந்துகிறேன்.
இன்பம் மட்டும் போதுமென்று,
இதனை விடவும் விரும்புகிறேன்.

அன்றைய நாளின் உம் வேண்டல்,
அருள் பொழியத் தெளிவுற்றேன்.
ஒன்றுமில்லை என் வலியே;
உணர்ந்து நானும் குடித்திடுவேன்!
ஆமென்.

இறைவேண்டல்

நல்வாழ்த்து:
கேட்கும் ஏழையர் பெறுவதற்கு,
கிறித்துவின் அருளைக் கேட்கின்றோம்.
மீட்பைக் கண்கள் காண்பதற்கு,
மேலும் நெஞ்சைத் திறக்கின்றோம்.
வேட்கை வேறு எதுவுமில்லை.
விருப்பம் உமதே தொழுகின்றோம்.
நாட்கள் வேண்டும் உழைப்பதற்கு;
நம்பி உம்மைப் பணிகின்றோம்!

நல்வாக்கு: மத்தேயு 26:36-37.

கெத்சமனித் தோட்டத்தில் இயேசு:

“பின்னர் இயேசு சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார். அவர், ‘ நான் அங்கே போய் இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள் ‘ என்று அவர்களிடம் கூறி, பேதுருவையும் செபதேயுவின் மக்கள் இருவரையும் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்.”

நல்வாழ்வு:

அழுதிட ஆயிரம் குறையிருந்தும்,
அவற்றை ஆண்டவர் ஒதுக்கிவிட்டு,
தொழுது இறையிடம் கேட்டதெல்லாம்
தொலைந்தோர் மீட்பைக் குறித்தாமே.
விழுந்து வேண்டும் இறைமகனின்
விருப்பை இன்று அறிந்துவிட்டு,
எழுந்து நமக்காய் அழுவதெல்லாம்,
ஏற்றது இல்லை அறிவோமே!
ஆமென்.

தேயிலைச் செய்தி!

இப்படி எனக்குத் தோட்டமில்லை;
இருப்பினும் இவ்வழி செல்கின்றேன்.
எப்படி இறைவன் தந்தாரோ,
அவற்றில் நிறைவு அடைகின்றேன்!
முப்படி உணவு எனக்கதிகம்;
மூன்று முறையும் தருகின்றார்.
அப்படி அளித்திடத் தகுதியில்லை;
ஆயினும் அன்பால் நிறைக்கின்றார்!-கெர்சோம் செல்லையா.

Photo: தேயிலைச் செய்தி!</p>
<p>இப்படி எனக்குத் தோட்டமில்லை;<br />
இருப்பினும் யானும் செல்கின்றேன்.<br />
எப்படி இறைவன் தந்தாரோ,<br />
அவற்றில் நிறைவு அடைகின்றேன்!<br />
முப்படி உணவு எனக்கதிகம்;<br />
மூன்று முறையும் தருகின்றார்.<br />
அப்படி அளித்திடத் தகுதியில்லை;<br />
ஆயினும் அன்பால் நிறைக்கின்றார்!</p>
<p>-கெர்சோம் செல்லையா.

ஒளியே , நான் புகழ்வது, இறை மொழியே!

நல்வாழ்த்து:
இன்பம் ஊட்டும் இயற்கை ஒளியே,
எடுத்துச் சொல்ல மறப்பின் பழியே.
உன்னைப் படைத்த இறையின் மொழியே,
உண்மையில் அழகு; அதுதான் வழியே!
நல்வாக்கு;மத்தேயு 26:33-35.
“அதற்குப் பேதுரு அவரிடம், ‘ எல்லாரும் உம்மை விட்டு ஓடிப் போய்விட்டாலும் நான் ஒரு போதும் ஓடிப்போக மாட்டேன் ‘ என்றார். இயேசு அவரிடம், ‘ இன்றிரவில் சேவல் கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன் ‘ என்றார். பேதுரு அவரிடம், ‘ நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன் ‘ என்றார். அவ்வாறே சீடர்கள் அனைவரும் சொன்னார்கள்.”
நல்வாழ்வு:
ஊன் உணர்வில் உரைப்பதுவும்
உண்மையாய் இருக்காது.
நான் முடிப்பேன் என்பதுவும்
நடுவீட்டைத் தாண்டாது.
தேன் மதுரத் தமிழ்ப்பாவும்,
தெவிட்டாமல் இருக்காது.
வான் அரசர் திருவாக்கோ
வழுவாது நிற்கிறது!
ஆமென்.