இவன்தான் தமிழன்!
திரை கடல் ஓடி திரவியம் சேர்த்தான்;
கரை தெரியாது கடலினைப் பார்த்தான்.
துரைபோல் வந்தவர் காலில் விழுந்தான்;
இரையாய் இவனே தன்னை இழந்தான்!
-கெர்சோம் செல்லையா.

The Truth Will Make You Free
இவன்தான் தமிழன்!
திரை கடல் ஓடி திரவியம் சேர்த்தான்;
கரை தெரியாது கடலினைப் பார்த்தான்.
துரைபோல் வந்தவர் காலில் விழுந்தான்;
இரையாய் இவனே தன்னை இழந்தான்!
-கெர்சோம் செல்லையா.
படைத்தவர் வாக்கு முடிக்கிறது!
நற்செய்தி மாலை: 2:25-26.
இவரது வெறியை மாற்றீரோ?
பழையதும் புதியதும்!
நோயுற்றவருக்கே மருத்துவர்!
நற்செய்தி மாலை: மாற்கு 2:15-17. “பின்பு அவருடைய வீட்டில் பந்தி அமர்ந்திருந்தபோது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். ஏனெனில் இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள். அவர் பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், ‘ இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்? ‘ என்று கேட்டனர். இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, ‘ நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் ‘ என்றார்.”
நற்செய்தி மாலை:
அணியணியாய் மருத்துவர்கள்
ஆயிரம்பேர் வந்தாலும்,
பிணியென்று தெரிந்தால்தான்
பேதையர்கள் திரும்பிடுவார்.
மணியொலியாய் இறைவாக்கு
மன்றங்களில் ஒலித்தாலும்,
பணிவுள்ள நெஞ்சினைத்தான்
படைத்தவர் விரும்பிடுவார்!
ஆமென்.
மெய்த்தமிழர் அனைவரையும்
தை நாளில் வாழ்த்துகிறோம்.
பொய் நீக்கி மெய் காண
புத்தாண்டில் வாழ்த்துகிறோம்!