அம்மண அவலம் அழகு என்று,

அவிழ்த்து போடுகிறார் இன்று.

தம்முளம் குத்திக் காட்ட அன்று,

தவறை மூடியவர் உண்டு.

செம்மனமாக நம் மனம் திகழ,

செய்தார் இறைவன் ஒரு பலி.

நம்பினார் வாழ்ந்து நன்கு மகிழ,

நமக்கு அருளிய அவர் வழி!

(தொடக்க நூல் 3)

May be an image of fig and text that says 'the fig leaf conspiracy JIMMY EVANS'

தீதின் தன்மை எப்படி கெடுக்கும்?

தெய்வம் விட்டுப் பிரிக்கும்.

தூதின் வலிமை போர் தொடுக்கும்;

தீய நெஞ்சையும் பிரிக்கும்.

கோதின் கூட்டு என்று விளிக்கும்,

கொடுமை பிறரையும் பிரிக்கும்.

சூதின் வாழ்வு தொடர்ந்து அழிக்கும்;

சுற்று முற்றும் பிரிக்கும்!

(தொடக்க நூல் 3)

May be an image of text that says 'GENESIS3 THE FALL OF MAN'

இறை கீழடியில் இருக்கும் மனிதன்

இறையாய் உயரப் பாய்ந்திடில்,

கறை மாறாத களங்கம் அடைந்து,

கடவுளை விட்டு விழுவானே.

முறை தவறாக முயலும் ஒருவன்,

முதலில் தன்னை ஆய்ந்திடில்,

குறை காணாது, திருத்தியமைக்கும்,

கோனினருளால் எழுவானே!

(தொடக்க நூல் 3:1-24).

May be an image of text

கொடுத்தவர் வாக்கை நம்பாமல்,

கொடியோன் பொய்யை ஏற்கிறார்.

அடுக்கடுக்காய் பல தவறிழைத்து,

அடிமையாய்த்தமை விற்கிறார்.

கெடுப்பவர் யார் என அறியாமல்,

கீழ்ப்படியாதராய் நிற்கிறார்.

தடுப்பவர் ஒருவர் இருக்கிறார்;

தலைவனை நம்பார் தோற்கிறார்!

(தொடக்க நூல் 3:1-24).

May be an illustration

3. பரிவு கொள்ளும் இறைவன்!

3. பரிவு கொள்ளும் இறைவன்!

ஆணும் பெண்ணும் படைக்கப்பட்ட

அந்த நாளின் நிகழ்வுகள்,

காணும் பேறு அடையாததால்,

கதையே என்று சொல்லுவர்.

பூணும் நல்ல அறிவுப் பூக்கள்

பொதிந்த நற்கருத்துகள்,

நாணும் நம்மைச் சீர்ப்படுத்தும்.

நம்புவோரே வெல்லுவர்!

(தொடக்க நூல் 3:1-6)

May be an image of text that says 'Forbidden Fruit Genesis 3:1-6'

தனிமை கொண்ட மனிதன் கண்டு,

தகும் துணை இறை தேடினார்.

இனிமை தரும் இணையாள் ஈந்து,

இவரில் இல்லறம் நாடினார்.

புனிதம் ஆளும் உறவின் வாழ்வு

புரியவே இருவரும் கூடினார்.

மனிதர் அறிய ஒருவனுக்கொருத்தி,

மறை மொழியையே பாடினார்!

(தொடக்க நூல் 2:18-25)

May be a graphic of text that says 'God's Design for Marriage Genesis 2:18-25'

தன்னைப் போன்றே படைத்தார்;

தன் பண்பாகவே படைத்தார்.

இந்நிலச் செல்வம் கொடுத்தார்;

யாவையும் ஆளவே கொடுத்தார்.

எந்நிலை என்று பார்த்தால்,

இறை கீழ் உயர்நிலை என்பார்;

அந்நிலை போதும் அரசே;

அழகு உமது படைப்பே!

(தொடக்க நூல் 1:28-31)

May be a graphic of Haystack Rock and text that says 'GOD BLESSED THEM. GOD SAID TO THEM, "BE FRUITFUL, MULTIPLY, FILL THE EARTH, AND SUBDUE IT. HAVE DOMINION OVER THE FISH OF THE SEA, OVER THE BIRDS OF THE SKY, AND OVER EVERY LIVING THING THAT MOVES ON THE EARTH." GENESIS 1:28 WEB'

ஒவ்வொரு படைப்பும் கண்டு,

இறையே மகிழ்வு கொண்டு,

அவ்வகை அனைத்தும் நன்று,

என்று சொன்னார் அன்று.

இவ்வித படைப்பில் மிக நன்று

,எதுவெனக் கேட்பார் இன்று.

எவ்விதத்திலும் மனிதனென்று,

இறை வாக்குரைப்பதுண்டு.

இப்படிச் சொல்கிற போது

எப்படி என்பாருமுண்டு.

தப்புகள் நீங்கும் என்று,

தருகிறேன் ஏது இன்று.

ஒப்பிலாப் பிறவி மனிதர்;

உண்மையில் இறை சாயல்.

அப்படியாகத்தான் படைத்தார்;

அனைவரையுமே அன்று!

(தொடக்க நூல் 1:4-27)

May be an image of 4 people and text that says 'GOD created man in his own IMAGE. GENESIS 1:27 ChristianQuotes.info'

இல்லாமையிலிருந்து எல்லாம்!

2. இல்லாமையிலிருந்து எல்லாம்!

ஒன்றுமற்ற நிலையே அன்று;

ஓழுங்கில்லை. ஒளி இல்லை.

என்று கண்டு இறையுரைத்தார்,

ஒளி தோன்றுக என்று.

நன்கு இதை எண்ணிப் பார்ப்பீர்,

நம்மிலும் தேவை ஒளியே.

இன்று இந்த வேட்கையோடு,

இறையிடம் கேட்பதே நன்று!

(தொடக்க நூல் 1:1-3)

May be an image of text that says 'AND GOD SAID "Let there be light," and there was light. GENESIS1:'

இறைவன் எங்கே?

இறைவன் எங்கே? 

(எழுதி வழங்குபவர்:

கெர்சோம் செல்லையா)

அங்குமில்லை, இங்குமில்லை, 

ஆண்டவர் எனும் இறைவன்;

எங்குமில்லை, எங்குமில்லை, 

என்கிறான் அறியா மனிதன்.

உங்களுள்ளே உங்களுள்ளே 

ஒளிந்து கடந்திருப்பேன்.

இங்கு எனை ஏற்பவர் யார்?

என்கிறான் நல்லிறைவன்!

இன்று இறை காண்பதற்கு 

என்னவெல்லாம் உண்டு? 

என்று இங்கு கேட்பவர்க்கு,

நல்ல விடை உண்டு.

நின்று அசைந்தாடுகின்ற 

நிலையில்லா இயற்கை 

அன்று முதல் சொல்கிறது,

அதுவே  படைப்பென்று!

படைப்பு ஒன்று உண்டு எனில்,

படைத்தவர் அவர் எங்கே? 

கிடைத்திடும் வரலாறுகளில் 

கேட்கிறார் பலர் இங்கே. 

துடைத்திடும் கண் காட்சிகளில்,

தெரியாது இருப்பதினால்,

விடைக்கெல்லாம் அடித்தளமாம் 

விவிலியம் பார், அன்பே!

தொடரும்……