யாரோ செய்கிற தவற்றால் இன்று,
போரோ, கொலையோ அமைதி தராது,
புரிந்தவர் இவற்றை வெறுக்கிறார்.
ஏரோ தரசன் படை விடு முன்பு,
இறைமகன் எகிப்து செல்கிறார்.
நாராய்க் கிழியும் நிலையிலும் கூட,
நம்பி நடப்பவர் வெல்கிறார்!
(மத்தேயு 2)

The Truth Will Make You Free
அறிஞர் திரும்பி வராதது கண்டு,
அரசன் வெறியில் துடிக்கிறான்.
சிறுவர் பலரில் ஐயம் கொண்டு,
சினத்தில் கொன்று முடிக்கிறான்.
வறிஞர் என்பார் அறிவிலும் உண்டு;
வாழ நினைப்போன் படிக்கிறான்.
புரிவாய் நண்பா, புனிதத் தொண்டு;
புரியா ஏரொது வெடிக்கிறான்!
(மத்தேயு 2).
விட்டிடு கொடுமை!
ஊரைச் சுற்றிப் பார்க்கச் சென்றார்;
ஒளித்திருந்து வெறியர் கொன்றார்.
யாரைக் காக்க இவரைக் கொன்றார்?
இல்லை நற்பதில், தராது சென்றார்.
போரைத் தவிர்ப்பீர், பேசிட வாரீர்.
புரிதல் பெற்று, இணையப் பாரீர்.
நீரை வடிக்கும் குடும்பமும் பாரீர்.
நினைந்து, திருந்தி, வாழ, வாரீர்!
-கெர்சோம் செல்லையா.
நம்மை விடவும் நான்கு கற்றார்,
நன்றாய் ஆய்ந்து அறியினும்,
தம்மை மீட்பார் தன்மை அறியார்;
தவறி அரண்மனை போகிறார்.
செம்மை அறிவு பிறகு பெற்றார்
செல்ல வாக்கு உரைப்பரும்,
பொம்மை போல போகாதிருந்தார்;
புறக்கணிப்பால் நோகிறார்!
(மத்தேயு 2)
ஏன் இறைவன் மனுவாய்ப் பிறந்தார்?
என்கிற கேள்விக்குப் பதிலென்ன?
வான் நிறைவை யார்தான் விடுவார்?
வையம் இறங்கும் ஏதென்ன?
நான் என்கிறத் தீமை கொள்ளும்,
நாட்டவர் மீள வழியென்ன?
தான் இறங்கித் தாழ்மை சொன்னார்;
தவறா இறை மொழியென்ன?
(யோவான் 3:16}.