ஐந்து நூற்களை முதற்கண் அருளி,
ஆண்டவர் நேர்மை காட்டுகிறார்.
அந்த நூற்களைத் தோரா என்று,
தந்த நூற்களின் உண்மை கண்டு,
தாழ்வோர் பேரருள் கூட்டுகிறார்.
இந்த வாழ்க்கைப் பயணம் காக்க,
இறையே தம் கை நீட்டுகிறார்!

The Truth Will Make You Free
ஏசாயா பதினான்கு எடுத்துரைக்கும் பேரறிவு,
இன்றும் பேசுவதால் எழுதுகிறேன்.
ஓசையாய் ஒரு கூட்டம் ஓயாது பொய்யுரைத்து,
உண்மை பூசுவதால் எழுதுகிறேன்.
பேசாமல் இருப்போரின் பிழைகள் திரும்பி வந்து,
பிண வாடை வீசுவதால் எழுதுகிறேன்.
மாசான கருத்தியலில் மாட்டியவர் மீட்படைந்து,
மறை மணம் வீசிடவே எழுதுகிறேன்.
-கெர்சோம் செல்லையா.