ஐந்து நூற்களை முதற்கண் அருளி,

ஆண்டவர் நேர்மை காட்டுகிறார்.

அந்த நூற்களைத் தோரா என்று,

அழைத்து நன்மை நாட்டுகிறார்.

தந்த நூற்களின் உண்மை கண்டு,

தாழ்வோர் பேரருள் கூட்டுகிறார்.

இந்த வாழ்க்கைப் பயணம் காக்க,

இறையே தம் கை நீட்டுகிறார்!

May be an image of text that says 'THE TORAH THE FIRST FIVE BOOKS OF THE BIBLE In the Beginning, the Lord God Spoke: Genesis 1:1. 3: Exodus 3:4: Deuteronomy 6:4-9: 8:3 REV. HAROLD E. PETERSEN REV.HAROLDE.PETERSEN RSE'

நாற்பது ஆண்டுகள் நடத்திய தலைவர்,

நல்லறிவாற்றல் நிறைந்த கலைஞர்,

யோர்தான் வருமுன் கடமை முடித்தார்.

யோசுவாவிடம் பொறுப்பும் கொடுத்தார்.

போர்த்திறம் கொண்டவர் என்பதால் அல்ல,

புகழ்ந்து காலடி கிடந்ததால் அல்ல;

நேர்மைப் பற்றில் அவர் பணி புரிந்தார்.

நிரப்புமிறையே யோசுவா தெரிந்தார்!

(இணைச் சட்டம் 34)

May be an image of 2 people

இப்படி இவர்கள் நடக்கும் நாளில்,

இன்னொரு வறட்சி காண்கையில்,

தப்பாய்ப் பேசித் தன் பற்றிழந்து,

தண்ணீர்ப் பாறையை அடிக்கிறார்.

அப்படி மோசே ஆற்றிய தவற்றால்,

அடையும் கானான் இழக்கவே,

ஒப்பரு இறையும், உள்ளம் கண்டு,

ஊழியர் கை பிடிக்கிறார்!

(எண்ணிக்கை 20:1-13 & இணைச்சட்டம் 34)

May be an image of text that says 'THE DEATH OF MOSES Daily Devotional Deuteronomy34:1-1 Deuteronomy 34:1-12'

காட்டுள் மோசே நடந்தாலும்,

கடுந்துயர்கள் அடைந்தாலும்,

ஏட்டில் எழுத மறக்கவில்லை;

இறையாலன்றி பிறக்கவில்லை.

நாட்டில் சட்டங்கள் பின் வந்தும்,

நற் காப்புறுதிகள் அவை தந்தும்,

வாட்டம் இதுபோல் தீர்க்கவில்லை;

வறியரும் வேறு பார்க்கவில்லை!

(லேவியர் 19:9-18).

May be an image of text that says 'LOVE LOVEYOUR YOUR NEIGHBOR yoursell rsell as yours Leviticus19:9-18 Leviticus 19:9-18'

தூற்றும் மாந்தர் நிறைந்துள்ள,

தூய்மை குன்றிய தேர்தலிலும்,

மாற்றம் இறையால் வருமென்று,

மா நம்பிக்கை கொள்கிறேன்.

ஆற்றல் மிகுந்தும் அன்பில்லார்,

ஆளுமையிழந்து தோற்பதும்,

போற்றும் தெய்வத் தீர்ப்பென்று,

பொய்யாமொழி சொல்கிறேன்!

-கெர்சோம் செல்லையா.

May be a graphic of text that says 'PSALM SALM37 37 DailyEffectivePrayer.com'

ஏசாயா பதினான்கு எடுத்துரைக்கும் பேரறிவு,

இன்றும் பேசுவதால் எழுதுகிறேன்.

ஓசையாய் ஒரு கூட்டம் ஓயாது பொய்யுரைத்து,

உண்மை பூசுவதால் எழுதுகிறேன்.

பேசாமல் இருப்போரின் பிழைகள் திரும்பி வந்து,

பிண வாடை வீசுவதால் எழுதுகிறேன்.

மாசான கருத்தியலில் மாட்டியவர் மீட்படைந்து,

மறை மணம் வீசிடவே எழுதுகிறேன்.

-கெர்சோம் செல்லையா.

No photo description available.

பத்து நாட்களில் முடிக்கும் பயணம்

பற்பல ஆண்டுகள் ஆவதற்கு,

கத்திடும் கூட்டம் கலகம் செய்தது

காரணம் என்று தெரிகிறது.

சொத்து என்றவர் செல்கிற நாடும்

சொந்த இறையின் அருளென்று,

புத்தியில் ஏற்க மறுத்தவர் கண்டு,

புலம்பும் நெஞ்சு எரிகிறது!

(எண்ணிக்கை 13 &14)

May be a graphic of text that says 'The Rebellion Isrdelites of the Numbers 13-14'

அலையும் நாளில் ஆண்டவர் தொழவே,

அவர்கள் செய்த கூடாரம்.

நிலைவாழ்வெங்கெனும் கேள்வி எழவே,

நெஞ்சுள் அடித்த டமாரம்.

விலை கொடுத்தெவரும் வாங்கிட அரிதாம்,

விண் மீட்பீயும் திருப்பொருட்கள்,

சிலையாய் அல்ல, முன்னுரை நெறியாம்;

செய்தார் அவர்கள் அந்நாட்கள்!

(விடுதலைப் பயணம் 25-27).

May be an image of text

நல்லிறை நம்முடன் இருக்கும் எண்ணம்

நாளும் வளர்ந்து ஒட்டவே,

செல்லுமிடங்களில் வைக்கும் வண்ணம்

செய்தார் உடன்படிப் பெட்டியே .

இல்லம் கட்டி நிலைத்திடச் செய்யும்,

இனிய நாட்களும் கிட்டவே

அல்லாததால், அருளினைப் பெய்யும்,

அம்முறை கூட சரிப் பட்டதே!

(விடுதலைப் பயணம் 24 & 25).

No photo description available.

அத்திருச்சட்டம் கொடுத்த நாளில்,

ஆண்டவர் செய்த உடன்படிக்கை,

பத்திரமாக இசரயெல் காக்க,

பாலைப் பயணம் தொடர்கிறது.

இத்திருச்சட்டம் பெற்ற மக்கள்,

இதன்படி ஒழுகி நடப்பதற்கு,

ஒத்துழைக்கும் தலைவரும் தந்தார்;

ஒழுக்கமும் வளர்ந்து படர்கிறது!

(விடுதலைப் பயணம் 18-24)

May be an image of text that says 'What are the Mosaic Laws? 248 Positive ("You shall... 365 Negative ("You shall not...") 613'