வாக்கின் வல்லமை!நற்செய்தி: யோவான் 11: 43-44.43. இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்.44. அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார். நல்வாழ்வு: வாக்கின் வலிமை காண விரும்பின்,வருவோம் இயேசு கிறித்திடம்.நோக்கும் யாவும் அருஞ்செயலாகும்;நோக்க மறுப்பதே நம் விடம்.ஆக்கம் செய்தல் இறை விருப்பாகும்;அதுவே நமக்கு வரை படம்.போக்கும் ஐயம், புது வாழ்வுறும்;புறப்படுவோமா இவ் வழித்தடம்?ஆமென். -கெர்சோம் செல்லையா.
Category: நற்செய்தி
நாலடிப் பாடல்!
பெண்மையே வாழ்க!
யாரும் எனக்கு உயர்வன்று;
யாரும் எனக்கு கீழன்று.
பாரிலெவரும் இணையென்று,
பண்படைவோம், நன்று!
– கெர்சோம் செல்லையா.
நன்றி!
- யோவான் 11:41-42
நல்வாழ்வு:
நன்றி என்ற நல்ல பண்பு,
நல்கிடுமே உயர்வு.
இன்று இது இல்லை உள்ளில்;
இதனால்தான் அயர்வு.
சென்று போன நாட்களிலே,
செயல்படா இச் சிறப்பு,
குன்று போல உயருகையில்,
கோடி நன்மை திறப்பு!
ஆமென்.
கெர்சோம் செல்லையா.
நம்புவோம்!
நம்புவோம்! நல் வாழ்வடைவோம்!
நற்செய்தி: யோவான் 11: 38-40.
38. அப்பொழுது இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாயிருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.39. இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள்.40. இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.
நல்வாழ்வு:
இன்பம் மட்டும் நாடிச் சென்றோர்,
இறை மறந்து வீழ்கையில்,
அன்பர் இயேசு தேடி வந்து,
அருட் பற்று ஊற்றுவார்.
துன்பம் மட்டும் ஆடக் கண்டோர்,
தெய்வப் பற்று கொள்கையில்,
நண்பர் என்று உடனிருந்து,
நன்மையாக மாற்றுவார்.
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
வீண் பேச்சு தவிர்!
நற்செய்தி: யோவான் 11:36-37.
அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார் என்றார்கள்!37. அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர், இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா என்றார்கள்.
நல்வாழ்வு:
வாயும் நெஞ்சும் நாறும் போது,
வாய்மை எங்ஙனம் மலரும்?
பாயும் வஞ்சம் ஊறும் சூது;
பண்பழிய, உளறும்.
தீயும் பஞ்சும் சேரும் போது,
தெரியும் யாவும் எரியும்.
ஆயும் பிஞ்சும் கூறும் தூது;
அழுக்கழிய, பிரியும்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
இனி காணோம்!
நற்செய்தி: யோவான் 11:33-35.
இனி காணோம் என்கிற எண்ணம்,
ஈரக்குலையை இறுக்குகையில்,
மனிதர் விலங்கு பறவைகளும்,
மடிவார்முன் கலங்கிடுமே.
பிணி, மூப்பு, சாவின் முன்னம்,
புது வாழ்வு தெரியுமெனில்,
கனி உண்பார் களிப்பதுபோல்,
கண்ணீரும் துலங்கிடுமே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
கால் பிடித்தல்!
கால் பிடித்தல்!
செய்யுட் செய்தி!
செய்தி:யோவான் 11: 31-32.
31. அப்பொழுது, வீட்டிலே அவளுடனேகூட இருந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள், மரியாள் சீக்கிரமாய் எழுந்துபோகிறதைக் கண்டு: அவள் கல்லறையினிடத்தில் அழுகிறதற்குப் போகிறாள் என்று சொல்லி, அவளுக்குப் பின்னே போனார்கள்.32. இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள்.
செய்யுள்:
மார்த்தாள் சொன்ன சொல் எடுத்து,
மரியாள் கூறி நில்லாது,
பார்ப்பார் என்ற கவலை விடுத்து,
பற்றில் கால் பிடிக்கிறார்.
ஆர்ப்பார் தந்த வாக்கினடுத்து,
அறிந்து மட்டும் செல்லாது,
தீர்ப்பார் குறைகள் எனப் படுத்து,
தெய்வக் கால் பிடிக்க, பார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
அழைக்கும் இயேசு!
அழைக்கும் இயேசு!
செய்தி; யோவான் 11:28-30.
செய்யுள்:
இறைமகன் வருகிறார் பாருங்கள்.
இயேசு அழைக்கிறார் வாருங்கள்.
குறையினை நீக்குவார் பாருங்கள்.
கொடுக்கும் ஆசிகள் வாருங்கள்.
அறையினில் அழுபவர் வாருங்கள்.
ஆண்டவர் அதிசயம் பாருங்கள்.
நிறைவாழ்வடைவீர் வாருங்கள்;
நிரம்பும் மகிழ்வும் பாருங்கள்!
-ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
அம்மா!
அம்மா, எங்கள் அம்மா!
பேறுபெற்ற பெற்றோர் கண்டார்.
பெயருற்ற கணவனும் கொண்டார்.
ஊறு செய்யா வாழ்க்கை கண்டார்;
ஊர்ப்பணியில் மகிழவும் கொண்டார்.
ஆறு பிள்ளைகள் பெற்றுத் தந்தார்;
அறிவூட்டியே வளர்த்தும் வந்தார்.
கூறு போடாப் பற்றைத் தந்தார்;
கிறித்தவராகவும் நடத்தி வந்தார்.
மாறுமுலகில் நேர்வழி என்றார்;
மறையா அன்பும் தந்து சென்றார்.
நூறு பேறுகள் பெறுவீர் என்றார்;
நோக்கும்போதே, இறையுள் சென்றார்!
(இன்று எங்கள் அம்மா,
கிளாறிபெல் செல்லையாவின்,
நினைவு நாள்)
இறைமகன்!
செய்யுட் செய்தி!
இறை மைந்தன்!செய்தி:யோவான் 11:27.
செய்யுள்:
பல்லுயிர் படைத்துப் பரிவுடன் காக்கும்,
பரத்தின் அரசே இறைவன்.
நல்லருள் வாக்கின் வலுவால் மீட்கும்,
நன்மையின் உருவே இறைவன்.
இல்லையென்பாரும் இரக்கம் சேர்க்கும்,
இனிய தந்தையே இறைவன்.
எல்லா இனத்தையும் ஒன்றாய்ப் பார்க்கும்,
இயேசு மைந்தனே இறைவன்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.