இன்று எழுதித் தந்திருந்தால் உமைத் தள்ளுவர்!
என்று சொல்லும் அளவில் இங்கு இன வெறி.
நன்று, நமது நாடும் தேடிடாதா நன்னெறி?
– கெர்சோம் செல்லையா.

The Truth Will Make You Free
அறிவைத் தருவது நற்செய்தி;
அதன்படி நடப்பின் உயிர்மீட்சி!
“இயேசு பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார். அங்கு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது விலையுயர்ந்த நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் அவரிடம் வந்து அதை அவர் தலையில் ஊற்றினார். இதைக் கண்ட சீடர்கள் கோபமடைந்து, ‘ இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்? இதை நல்ல விலைக்கு விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே ‘ என்றார்கள்.
மாத்தூர் தொட்டில் பாலம்:
வட்டாற்றில் பிறந்திருந்தும்
வாழ்வதுவோ இரட்டேரி.
கட்டான உன்னழகைக்
காணுவேன் வந்தேறி!
திட்டான குன்றிரண்டைத்
திறக்கும் ஆற்றின்மேல்,
மொட்டாக உனை வைத்த
மேலோனைப் போற்றி!
– கெர்சோம் செல்லையா!
எல்லாம் அறிந்த இறைமகனே,
இல்லார் இவரை நோக்கிடுமே.
பொல்லார் நினைவு பொய்த்திடவே,
நல்லாயனாய் மீட்டிடுமே!
-கெர்சோம் செல்லையா.
புதிய அரசிற்கு வாழ்த்துகள்!
புரிந்துகொள்வோம், வாருங்கள்!
வென்றவர் உரைப்பது இங்கு வேதம்!
வேண்டாம் இனி வீண் விவாதம்!
சென்றவர் நிலையை எண்ணிப் பாரும்;
சேர்ப்பது செயலின் விளைவாகும்!
வாழ்க மக்களாட்சி!
வரவேண்டும் இறையாட்சி!
– கெர்சோம் செல்லையா.
வாழவைக்கும் வாக்கு!
இனிய வாக்கு இறைவனின் வாக்கு!