-
நல்வாழ்த்து:
-
போற்றிடுவோம் நல்லிறையை,
புவிதனில் நாம் இருக்கையிலே.
நேற்றிருந்தோர் இன்றில்லை;
நினைப்போம் நாம் நம் நிலையை!நல்வாக்கு:
மத்தேயு 26: 40-41.
“அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், ‘ ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வமுடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள் ‘ என்றார்.”நல்வாழ்வு:
தூய ஆவியரே,
தெய்வத் திருவுருவே,
துவளும் உடல் பாரும்;
துணிவை நீர் தாரும்.மாய உலகினிலே,
மயங்கி விழுகையிலே,
மடையன் எனை மீட்க,
மன்னா, நீர் வாரும்!
ஆமென்.
Author: truth
துன்பக் குவளை ஏந்துகிறேன்.
படையும் நம்பேன், எடையும் நம்பேன்.
படைத்தவர் உமையே நம்பிடுவேன்.
கிடைக்கும் இந்த புதிய நாளில்
கிறித்து புகழைப் பாடிடுவேன்!
நல்வாக்கு:
மத்தேயு 26:38-39.
“அவர், ‘ எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள் ‘ என்று அவர்களிடம் கூறினார். பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, ‘ என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும் ‘ என்று கூறி இறைவனிடம் வேண்டினார்.
நல்வாழ்வு:
துன்பக் கடலில் நீந்துகிறேன்;
துயரக் குவளையும் ஏந்துகிறேன்.
இன்பம் மட்டும் போதுமென்று,
இதனை விடவும் விரும்புகிறேன்.
அன்றைய நாளின் உம் வேண்டல்,
அருள் பொழியத் தெளிவுற்றேன்.
ஒன்றுமில்லை என் வலியே;
உணர்ந்து நானும் குடித்திடுவேன்!
ஆமென்.

இறைவேண்டல்
நல்வாக்கு: மத்தேயு 26:36-37.

“பின்னர் இயேசு சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார். அவர், ‘ நான் அங்கே போய் இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள் ‘ என்று அவர்களிடம் கூறி, பேதுருவையும் செபதேயுவின் மக்கள் இருவரையும் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்.”
தேயிலைச் செய்தி!
இருப்பினும் இவ்வழி செல்கின்றேன்.
எப்படி இறைவன் தந்தாரோ,
அவற்றில் நிறைவு அடைகின்றேன்!
முப்படி உணவு எனக்கதிகம்;
மூன்று முறையும் தருகின்றார்.
அப்படி அளித்திடத் தகுதியில்லை;
ஆயினும் அன்பால் நிறைக்கின்றார்!-கெர்சோம் செல்லையா.

ஒளியே , நான் புகழ்வது, இறை மொழியே!
பாறையுள்ளும் பாயும் ஒளியே!
மலர்ப்படுக்கை
இலைப் படுக்கை கிடைத்ததுவே!
விலையுயர்ந்த வேலை எனினும்,
தலை சாய்த்தால் விழுவேனே!-கெர்சோம் செல்லையா.

ஆயரே, ஆண்டவரே!

வேண்டத் தெரியேன்






நல்வாக்கு: மத்தேயு 26:26-28.
கலப்பையின் மேல் கைவைத்தேன்

நல்வாழ்த்து: