வேண்டாம் பழமை!


​பழையதும் புதியதும்!

நற்செய்தி மாலை: மாற்கு 2:21-22.

“எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்த புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் பெரிதாகும். அதுபோலப் பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றிவைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்; மதுவும் தோற்பைகளும் பாழாகும். புதிய மது புதுத் தோற்பைகளுக்கே ஏற்றது ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
கிழிந்த பழைய ஆடையைத் தைக்க  
கோடித் துணியை ஒட்டுகிறேன்.
பிழிந்த சாற்றை ஊற்றி வைக்க,
பழைய குவளையில் கொட்டுகிறேன்.
இழிந்த வாழ்க்கைத் தவற்றைக் கொண்டு 
இந்த நாளைக் கட்டுகிறேன்.
வழிந்த அருளால் புதுமையாக்கும்;
வேண்டாம் பழமை, வெட்டுகிறேன்!
ஆமென்.

விருந்தின் மகிழ்வே கிறித்தவ வாழ்வு!

நற்செய்தி மாலை: மாற்கு 2:18-20.

“யோவானுடைய சீடரும் பரிசேயரும் நோன்பு இருந்துவந்தனர். சிலர் இயேசுவிடம், ‘ யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் நோன்பிருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருப்பதில்லை? ‘ என்று கேட்டனர். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ‘ மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் நோன்பு இருக்கமுடியுமா? மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்கள் நோன்பிருக்க முடியாது.ஆனால் மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.”
நற்செய்தி மலர்:
விருந்தின் மகிழ்வாம் கிறித்தவ வாழ்க்கை;
வேறு விதமாய் விளக்காதீர்.
மருந்து விழுங்கிய மந்தியைப் போன்று,
மயங்கி வாழ்வையும் இழக்காதீர்.
திருந்த வைக்கும் கிறித்துவின் வாக்கைத் 
தெரியா தெதுவும் உரைக்காதீர்.
இருந்து அழிக்கும் அழுக்கை நீக்கும்,
இறைவனின் அருளையும் மறக்காதீர்.
ஆமென்.

நோயுற்றவருக்கே மருத்துவர்!

நோயுற்றவருக்கே மருத்துவர்!

நற்செய்தி மாலை: மாற்கு 2:15-17. “பின்பு அவருடைய வீட்டில் பந்தி அமர்ந்திருந்தபோது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். ஏனெனில் இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள். அவர் பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், ‘ இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்? ‘ என்று கேட்டனர். இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, ‘ நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் ‘ என்றார்.”

நற்செய்தி மாலை:

அணியணியாய் மருத்துவர்கள்

ஆயிரம்பேர் வந்தாலும்,

பிணியென்று தெரிந்தால்தான்

பேதையர்கள் திரும்பிடுவார்.

மணியொலியாய் இறைவாக்கு

மன்றங்களில் ஒலித்தாலும்,

பணிவுள்ள நெஞ்சினைத்தான்

படைத்தவர் விரும்பிடுவார்!

ஆமென்.

ஒருவாய் உண்ண ஊரினை விழுங்கும்….

ஒருவாய் உண்ண ஊரினை விழுங்கும்….
நற்செய்தி மாலை: மாற்கு 2:13-14.
“இயேசு மீண்டும் கடலோரம் சென்றார். மக்கள் கூட்டத்தினர் எல்லாரும் அவரிடம் வரவே, அவர் அவர்களுக்குக் கற்பித்தார். பின்பு அங்கிருந்து அவர் சென்றபோது அல்பேயுவின் மகன் லேவி சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், ‘ என்னைப் பின்பற்றி வா ‘ என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.”
நற்செய்தி மலர்:
ஒருவாய் உண்ண, ஊரினை விழுங்கும்,
உண்மை இல்லா ஊழியரே,
திருவாய் திறந்து தெய்வம் அழைக்க,
துணிவுடன் துறந்தவர் லேவியரே.
வருவாய் குறையும் என்று நினைக்கும்,
வழிக்குள் வராத கிறித்தவரே,
அருளால் பெறாத செல்வம் அழியும்.
அதனை மறப்பவர் பாவியரே!
ஆமென்.

ஒருவாய் உண்ண ஊரினை விழுங்கும்....
நற்செய்தி மாலை: மாற்கு 2:13-14.
"இயேசு மீண்டும் கடலோரம் சென்றார். மக்கள் கூட்டத்தினர் எல்லாரும் அவரிடம் வரவே, அவர் அவர்களுக்குக் கற்பித்தார். பின்பு அங்கிருந்து அவர் சென்றபோது அல்பேயுவின் மகன் லேவி சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், ' என்னைப் பின்பற்றி வா ' என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்."
நற்செய்தி மலர்:
ஒருவாய் உண்ண, ஊரினை விழுங்கும்,
உண்மை இல்லா ஊழியரே,
திருவாய் திறந்து தெய்வம் அழைக்க,
துணிவுடன் துறந்தவர் லேவியரே.
வருவாய் குறையும் என்று நினைக்கும்,
வழிக்குள் வராத கிறித்தவரே,
அருளால் பெறாத செல்வம் அழியும்.
அதனை மறப்பவர் பாவியரே!
ஆமென்.

விழுந்துபோக வேண்டாம் நண்பா!

விழுந்துபோக வேண்டாம் நண்பா!
நற்செய்தி மாலை: மாற்கு 2:10-12.
“மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் ‘என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, ‘ நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ ‘ என்றார். அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், ‘ இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே ‘ என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.”

நற்செய்தி மலர்:
எழும்பயியலா மனிதரைப் பார்த்து,
இயேசு எழும்பச் சொல்கின்றார்.
அழுது மடியும் கூட்டத்தாரோ
அப்படி இயலா தென்கின்றார்.
தொழுது மகிழும் பற்றைப் பெற்று,
தூயரின்யரின் சொற்படி எழுபவர் யார்?
விழுந்துபோக வேண்டாம் நண்பா,
விண்ணின் வாக்கை நம்பிப் பார்!
ஆமென்.

விழுந்துபோக வேண்டாம் நண்பா!
நற்செய்தி மாலை: மாற்கு 2:10-12.
"மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் 'என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, ' நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ ' என்றார். அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், ' இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே ' என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்."

நற்செய்தி மலர்:
எழும்பயியலா மனிதரைப் பார்த்து,
இயேசு எழும்பச் சொல்கின்றார்.
அழுது மடியும் கூட்டத்தாரோ  
அப்படி இயலா தென்கின்றார்.
தொழுது மகிழும் பற்றைப் பெற்று,
தூயரின்யரின் சொற்படி எழுபவர் யார்?
விழுந்துபோக வேண்டாம் நண்பா,
விண்ணின் வாக்கை நம்பிப் பார்!
ஆமென்.

எது பெரிது?

எது பெரிது?
நற்செய்தி மாலை: மாற்கு 2: 8-9.
“உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, ‘ உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்?முடக்குவாதமுற்ற இவனிடம் ‘ உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ‘ என்பதா? ‘ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட, என்பதா? எது எளிது?”

நற்செய்தி மலர்:
உள்ளில் உறையும் பிணியை விடவும்
உடலில் காணும் நோய் பெரிதா?
எள்ளிச் சிரித்து இல்லை என்னும்
இருக்கும் பாவந்தான் சிறிதா?
தள்ளிச் செல்லும் தன்மை கொல்லும்;
தன்னை அழித்தல் போதாதா?
வள்ளல் இயேசு வந்து வழங்கும்
வாழ்வே பெரிது, வா மனிதா!
ஆமென்.

எது பெரிது?
நற்செய்தி மாலை: மாற்கு 2: 8-9.
"உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, ' உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்?முடக்குவாதமுற்ற இவனிடம் ' உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ' என்பதா? ' எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட, என்பதா? எது எளிது?"

நற்செய்தி மலர்:
உள்ளில் உறையும் பிணியை விடவும் 
உடலில் காணும் நோய் பெரிதா?
எள்ளிச் சிரித்து இல்லை என்னும் 
இருக்கும் பாவந்தான் சிறிதா?
தள்ளிச் செல்லும் தன்மை கொல்லும்;
தன்னை அழித்தல் போதாதா?
வள்ளல் இயேசு வந்து வழங்கும்   
வாழ்வே பெரிது, வா மனிதா!  
ஆமென்.

வழக்கிலிருந்து விடுதலை தந்தார்!

வழக்கிலிருந்து  விடுதலை தந்தார்!

வழக்கு, வாது, வம்புகள் என்று,
வருத்தம் கொடுத்தார் அன்னாட்டார்.
முழக்கும் வாக்கை நாவில் தந்து,
மும்மை இறையோ எனை மீட்டார்.
உழைக்கும் எண்ணம் இல்லார் இன்று,
ஊரில் இருளாய்க் கெடுக்கின்றார்.
கிழக்கில் தோன்றும் கதிரோன் போன்று,
கிறித்துவோ வெளிச்சம் கொடுக்கின்றார்!
ஆமென்.
பி.கு:
மைசூர் மாநில நடுவர் மன்றமொன்றில்
என் மீது தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றை
வழக்குரைஞர் வைக்காமல் நடத்த
ஆண்டவர் அருள் புரிந்தார்.
கை சூட்டி குற்றம் சாட்ட இயலாமல்,
வழக்கு தொடுத்தோர் ஓடும் காட்சியைக்
காணச் செய்து, விடுதலையும் தந்தார்.
நடுவராய் விடுதலை தந்த தந்தைக்கும்,
வழக்குரைஞராய் பரிந்து பேசிய மைந்தனுக்கும்,
சான்று பகர்ந்த ஆவியருக்கும் நன்றி, நன்றி.
-கெர்சோம் செல்லையா.
வழக்கிலிருந்து  விடுதலை தந்தார்!

வழக்கு, வாது, வம்புகள் என்று,
வருத்தம் கொடுத்தார் அன்னாட்டார்.
முழக்கும் வாக்கை நாவில் தந்து,
மும்மை இறையோ எனை மீட்டார்.
உழைக்கும் எண்ணம் இல்லார் இன்று,
ஊரில் இருளாய்க் கெடுக்கின்றார்.
கிழக்கில் தோன்றும் கதிரோன் போன்று,
கிறித்துவோ வெளிச்சம் கொடுக்கின்றார்!
ஆமென்.

பி.கு:
மைசூர் மாநில நடுவர் மன்றமொன்றில் 
என் மீது தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றை 
வழக்குரைஞர் வைக்காமல் நடத்த 
ஆண்டவர் அருள் புரிந்தார்.
கை சூட்டி குற்றம் சாட்ட இயலாமல், 
வழக்கு தொடுத்தோர் ஓடும் காட்சியைக் 
காணச் செய்து, விடுதலையும் தந்தார்.
நடுவராய் விடுதலை தந்த தந்தைக்கும், 
வழக்குரைஞராய் பரிந்து பேசிய மைந்தனுக்கும்,
சான்று பகர்ந்த ஆவியருக்கும் நன்றி, நன்றி.
-கெர்சோம் செல்லையா.

 

நேர்மையை இன்னும் பெறுவோமே!

நேர்மையை இன்னும் பெறுவோமே!

நற்செய்தி மாலை:மாற்கு 2:6-7.
“அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், ‘ இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்? ‘ என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்.”
நற்செய்தி மலர்:
இறைமகன் வந்து இயம்பும்போது
இழிவாய் எண்ணிப் பழித்தாரே.
குறைகள் மிகுந்த ஊழியர் நம்மைக்
குற்றம் கூறிதான் பழிப்பாரே.
அறையும் ஆணியாய் அடித்துப் பேசல்
ஆவியர் வலிமை, அறிவோமே.
நிறையும் அருளை என்று வேண்டி,
நேர்மையை இன்னும் பெறுவோமே!
ஆமென்.
நேர்மையை இன்னும் பெறுவோமே!
நற்செய்தி மாலை:மாற்கு 2:6-7.
"அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், ' இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்? ' என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்."
நற்செய்தி மலர்:
இறைமகன் வந்து இயம்பும்போது
இழிவாய் எண்ணிப் பழித்தாரே.
குறைகள் மிகுந்த ஊழியர் நம்மைக்
குற்றம் கூறிதான் பழிப்பாரே.
அறையும் ஆணியாய் அடித்துப் பேசல்
ஆவியர் வலிமை, அறிவோமே.
நிறையும் அருளை என்று வேண்டி,
நேர்மையை இன்னும் பெறுவோமே!
ஆமென்.