தெய்வம் நம்முள் பாடாதோ?
Author: truth
மண்ணைத் தேடுகிறார்….
மண்ணைத் தேடுகிறார்….
தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!
தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்! நான் இந்துக்களின் பள்ளியில் பயின்றவன்; நான் சென்ற கல்லூரிகள் கிறித்தவர்களால் நிறுவப்பட்டவை. நான் பணியாற்றிய நாட்டின் பெரும்பான்மை மக்களோ இசுலாமியர். பல மொழி, நாடு, இன, சமய மக்களுடன் வாழ்ந்து பழகும் பேறும் எனக்குக் கிடைத்தது. இன்னாள் வரையிலும் எந்த மனிதருடன் வேறுபாடுகொண்டு பேசியதோ, வெறியுடன் செயல்பட்டதோ கிடையாது. எல்லோரும் இறைவனின் பிள்ளைகள் என்பதே என் எண்ணம். இப்படியிருக்க, இன்று ஒருவரைப் பார்க்க வேண்டிய நிலை வந்தது. அவர் இந்திய சமயங்களில் ஒன்றைச் சார்ந்த இளைஞர். என் வயதில் பாதியே அவருக்கு இருக்கும். “குரு” என்று அறிமுகம் செய்தார்கள். வணங்கினேன். வணங்கினார். வலக்கை நீட்டி வாழ்த்த விரும்பினேன். கை தரவில்லை. கை பிடித்து வாழ்த்தும் பழக்கமில்லை என்றார். ” உங்கள் வல்லமை எனக்கு வந்து விடும்,என்ற அச்சமா?” என்று வினவியும் பார்த்தேன்; பதிலில்லை. சாதி வெறி கொள்ள அவர் அய்யனுமில்லை; சமயத்தைச் சொல்லிப் பிழைக்க நான் பொய்யனுமில்லை. அப்படியென்றால் ஏன் கை நீட்டிப் பிடித்து பழக மறுக்கிறார்கள்? இசுலாமியர்/யூதர் இறுக இணைத்து, மும்முறை முத்தமிட்டு வரவேற்பார்கள். அப்படியெல்லாம் கட்டித் தழுவச் சொல்லவில்லை. குறைந்தது கைநீட்டி வரவேற்கலாமே! ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்! நன்றி, நல் வாழ்த்துகள்!
பேரின்ப நீர்ச்சுனை ஊறட்டுமே!

காதிருந்தும்……
நற்செய்தி மாலை: மாற்கு 4:9
நல்ல நிலமாய் நானும் திகழ……
நல்ல நிலமாய் நானும் திகழ…
முள்ளில் விழுந்த விதைகள்!
முள்ளில் விழுந்த விதைகள்!
நற்செய்தி மாலை: மாற்கு 5:7
“மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை.”
நற்செய்தி மலர்:
முள்ளில் விழுந்த விதையைப் போன்று,
முழுமையின்றி வளர்கின்றோம்.
கள்ளில், வெறியில் கவலை தோய்த்து,
காய் கனியின்றித் தளர்கின்றோம்.
எள்ளின் முடிவு எண்ணெய் ஆகும்;
இதை மறந்து உலர்கின்றோம்.
தள்ளாதவரின் அருளைக் கேட்போம்;
தவறு நீங்கும்; பலன் தருவோம்!
ஆமென்.
புல்லும் வளராப் பாறை!
வேறுபாடு பாரா இறைவன்!
வேறுபாடு பாரா இறைவன்!
நற்செய்தி மாலை: மாற்கு 4: 1-4.
“அவர் மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார். அவர் அவர்களுக்குக் கற்பித்தது: ‘ இதோ, கேளுங்கள், விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும் பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன.”
நற்செய்தி மலர்:
வேறுபாடு பாரா இறைவன்
வீதியிலேயும் விதைக்கின்றார்.
நூறு நூறாய் பலன் தரவே,
நொந்த நெஞ்சில் பதைக்கின்றார்.
மாறுபாடு கொண்டோரையும்
மகிழ்விப்பதற்கே உழைக்கின்றார்.
தேறுதல் நாம் வாழ்வில் பெறவே,
தெய்வம் அரசுள் அழைக்கின்றார்!
ஆமென்.