இயேசு என்னும் மனிதன்!

இயேசு என்னும் மனிதன்!
நற்செய்தி மாலை: மாற்கு:15:33-36.
“நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது. பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ‘ எலோயி, எலோயி, லெமா சபக்தானி? ‘ என்று உரக்கக் கத்தினார். ‘ என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? ‘ என்பது அதற்குப் பொருள். சூழ நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக்கேட்டு, ‘ இதோ! எலியாவைக் கூப்பிடுகிறான் ‘ என்றனர். அப்பொழுது அவர்களுள் ஒருவர் ஓடிச்சென்று கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்துக்கொண்டே, ‘ பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவாரா, பார்ப்போம் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
என் இறைவா, என் இறைவா,
ஏன் என்னைக் கைவிட்டீர்?
சொன்னவர் யார், இறைமகனா?
சொல்லுவரோ, இறைவனெனில்?
முன் நிலையில் இறைமகன்தான்;
முற்றிலுமாய்த் துறந்தவர்தான்.
இன்னிலையும் நமக்கெனத்தான்;
இயேசு அன்று மனிதன்தான்!
ஆமென்.

Image may contain: text

வற்றா ஆறு மன்னிப்பு!

வற்றா ஆறு மன்னிப்பு!
நற்செய்தி மாலை: மாற்கு 15:29-32.
“அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, ‘ ஆகா, திருக்கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, சிலுவையிலிருந்து இறங்கி உன்னையே விடுவித்துக்கொள் ‘ என்று அவரைப் பழித்துரைத்தார்கள். அவ்வாறே தலைமைக் குருக்கள் மறைநூல் அறிஞர்களுடன் சேர்ந்து அவரை ஏளனம் செய்து, ‘ பிறரை விடுவித்தான், தன்னையே விடுவிக்க முடியவில்லை ‘ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். அவர்கள், ‘ இஸ்ரயேலின் அரசனாகிய மெசியா இப்போது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும்; அப்போது நாங்கள் கண்டு நம்புவோம் ‘ என்றார்கள். அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்தவர்களும் அவரை இகழ்ந்தார்கள்.”
நற்செய்தி மலர்:
கற்றோர் மற்றோர் யாவருடன்,
கள்வரும் இயேசுவை நிந்தித்தார்;
அற்றோர் மீட்பு அடைவதற்கு,
ஆண்டவரோ அதைச் சந்தித்தார்.
பெற்றோர்கூட புறந்தள்வார்;
பெரியவர் இயேசு மன்னித்தார்.
வற்றா ஆறாய் இப்பண்பு,
வடியவே நமையும் முன்வைத்தார்!
ஆமென்.

வற்றா ஆறு மன்னிப்பு!

வற்றா ஆறு மன்னிப்பு!
நற்செய்தி மாலை: மாற்கு 15:29-32.
“அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, ‘ ஆகா, திருக்கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, சிலுவையிலிருந்து இறங்கி உன்னையே விடுவித்துக்கொள் ‘ என்று அவரைப் பழித்துரைத்தார்கள். அவ்வாறே தலைமைக் குருக்கள் மறைநூல் அறிஞர்களுடன் சேர்ந்து அவரை ஏளனம் செய்து, ‘ பிறரை விடுவித்தான், தன்னையே விடுவிக்க முடியவில்லை ‘ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். அவர்கள், ‘ இஸ்ரயேலின் அரசனாகிய மெசியா இப்போது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும்; அப்போது நாங்கள் கண்டு நம்புவோம் ‘ என்றார்கள். அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்தவர்களும் அவரை இகழ்ந்தார்கள்.”
நற்செய்தி மலர்:
கற்றோர் மற்றோர் யாவருடன்,
கள்வரும் இயேசுவை நிந்தித்தார்;
அற்றோர் மீட்பு அடைவதற்கே,
அன்பாய் அவற்றைச் சந்தித்தார்.
பெற்றோர் நம்மைப் பொறுப்பதுபோல்,
பேரன்பர் யாவும் மன்னித்தார்;
வற்றா ஊற்றாம் மன்னிப்பை,
வழங்கவே நமையும் முன்வைத்தார்!
ஆமென்.

Image may contain: text

தொங்கும் கள்வர் நடுவில் பார்த்தேன்!

தொங்கும் கள்வர் நடுவில் பார்த்தேன்!
நற்செய்தி மாலை: மாற்கு 15:25-28.
“அவரைச் சிலுவையில் அறைந்தபோது காலை ஒன்பது மணி. அவரது மரண தண்டனைக்கான காரணத்தை அறிவிக்க ‘ யூதரின் அரசன் ‘ என்று அவர்கள் எழுதிவைத்தார்கள்; அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக, இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள்.”
நற்செய்தி மலர்:
எங்கிருப்பார் நம் இறைவன் என்று,
எல்லா இடமும் தேடுகிறேன்.
இங்கே காணும் கோயில், குளத்தில்,
இருப்பாரோ என்றும் நாடுகிறேன்.
அங்கும் இல்லை, இங்கும் இல்லை,
ஆண்டவரின்றி வாடுகிறேன்.
தொங்கும் கள்வர் நடுவில் பார்த்தேன்;
தெய்வம் கண்டு, பாடுகிறேன்!
ஆமென்.

No automatic alt text available.

இப்படிக் கற்று மருத்துவராவோர்…..

இப்படிக் கற்று மருத்துவராவோர்,
எப்படி நம்மை நடத்திடுவார்?
அப்புறம் உடுக்க ஒன்றுந்தராமல்,
குப்புறம் படுக்கக் கிடத்திடுவார்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 1 person, meme and text

இப்படிக் கற்போர்!

இப்படிக் கற்று மருத்துவராவோர்,
எப்படி நம்மை நடத்திடுவார்?
அப்புறம் உடுக்க ஒன்றுந்தராமல்,
குப்புறம் படுக்கக் கிடத்திடுவார்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 1 person, meme and text

இழக்க இனி எதுவுமில்லை!

இழக்க இனி எதுவுமில்லை!
நற்செய்தி மாலை: மாற்கு 15:24.
” பிறகு அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; குலுக்கல் முறையில் யாருக்கு எது என்று பார்த்து அவருடைய ஆடைகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள்.”
நற்செய்தி மலர்:
துறந்து வாழும் தூயவர்கூட,
துணிகள் களைந்து இருப்பதில்லை.
மறந்து தூங்கும் வேளையில்கூட,
மானம் இழக்க விரும்பவில்லை.
இறங்கி வந்த இறைமகனுக்கோ,
இழக்க வேறினிப் பொருளுமில்லை.
சிறந்த உடையாம் மீட்பைப் பெறவே,
சிலுவையன்றி அருளுமில்லை!
ஆமென்.

Image may contain: one or more people

மயங்கும் நிலையில் …

மயங்கும் நிலையில் …
நற்செய்தி மாலை: மாற்கு 15:22-23.
“அவர்கள் ‘ மண்டைஓட்டு இடம் ‘ எனப்பொருள்படும் ‘ கொல்கொதா ‘ வுக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள்; அங்கே அவருக்கு வெள்ளைப் போளம் கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை.”
நற்செய்தி மலர்:
மயங்கிய நிலையில் உயிரைக் கொடுக்க,
மைந்தன் இயேசு விரும்பவில்லை.
இயங்கிய நாளிலும் குடித்து வெறிக்க,
எவர் பின்னாலும் திரும்பவில்லை.
புயங்கள் தொங்க இறக்கும் மனிதர்
போளம் குடிப்பதில் தவறுமில்லை.
உயர்ந்த வாழ்வு வாழ்பவருக்குள்,
ஊற்றிக் குடிப்போர் எவருமில்லை!
ஆமென்.

Image may contain: 1 person, standing

குருசு சுமப்பார் குடும்பம்!

குருசு சுமப்பார் குடும்பம்!
நற்செய்தி மாலை: மாற்கு 15: 21.
“அப்பொழுது அலக்சாந்தர், ரூபு ஆகியோரின் தந்தையான சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தார். படைவீரர்கள் இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்.”
நற்செய்தி மலர்:
ஏழை, கறுப்பர், இன்னொரு இனத்தார்
எதிர்ப்புறம் வந்தால் என்னாகும்?
தாழ்வாய்க் கருதி, தம்சுமை வைப்பார்,
தவறும் இடமது என்றாகும்.
கோழை போன்று குருசு சுமப்பார்
குடும்பம் பின்னர் என்னாகும்?
வாழை அடியில் வாழையாகி,
வளருந் தலைமுறை என்றாகும்!
ஆமென்.

No automatic alt text available.

பாவத்தைப் பார்த்து மௌனமாயிருத்தல்…

பாவத்தைப் பார்த்து மௌனமாயிருத்தல்…
நற்செய்தி மாலை: மாற்கு 15: 16-20.
“பிறகு படைவீரர் அவரை ஆளுநர் மாளிகையின் முற்றத்திற்கு இழுத்துக்கொண்டு போய்ப் படைப்பிரிவினர் அனைவரையும் கூட்டினர்; அவருக்குச் செந்நிற ஆடையை உடுத்தினர்; ஒரு முள் முடி பின்னி அவருக்குச் சூட்டி, ‘ யூதரின் அரசே வாழ்க! ‘ என்று அவரை வாழ்த்தத் தொடங்கினர்; மேலும் கோலால் அவர் தலையில் அடித்து, அவர்மீது துப்பி, முழந்தாள்படியிட்டு அவரை வணங்கினர். அவரை ஏளனம் செய்த பின் செந்நிற ஆடையைக் கழற்றி விட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக வெளியே கூட்டிச் சென்றனர்.”
நற்செய்தி மலர்:
காவலர் செய்யும் தீதுகள் கண்டு,
கலங்கிக் கண்ணீர் வடித்ததுண்டா?
ஏவலர் இவரது மீட்பிற்கென்று,
இளகிய நெஞ்சால் துடித்ததுண்டா?
கேவலம் என்று இவர்களும் உணர,
கிறித்துவின் அன்பில் அழைத்ததுண்டா?
பாவத்தைப் பார்த்து மௌனமாயிருத்தல்,
பாவமே ஆகும், உழைத்ததுண்டா?
ஆமென்.

Image may contain: 1 person