கிறித்துவுள் முழுக வாரீர்!

கிறித்துவுள் முழுக வாரீர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:15-16.

15 யோவானைக்குறித்து: இவன்தான் கிறிஸ்துவோ என்று ஜனங்களெல்லாரும் எண்ணங்கொண்டு, தங்கள் இருதயங்களில் யோசனையாயிருக்கையில்,
16 யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்தஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார்.

கிறித்துவில் வாழ்வு:
நீரில் மூழ்கி எழும்பிவிட்டால்,
நேரே விண்ணென எண்ணாதீர்!
பாரில் இப்படி நினைத்துவிட்டு,
பலரை மூழ்கப் பண்ணாதீர்!
போரில் கிறித்தவன் வெல்வதற்கு,
புனித எரிப்பில் முழுகட்டும்.
நேரில் வந்து முழுக்குகின்ற,
நேர்மை வாக்கில் ஒழுகட்டும்!
ஆமென்.

Image may contain: one or more people, sky, tree, outdoor and nature
LikeShow More Reactions

Comment

பொய்யாய்க் குற்றம் சாட்டாதீர்!

பொய்யாய்க் குற்றம் சாட்டாதீர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:14.
14 போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:
பொய்யாய்க் குற்றம் சாட்டாதீர்;
போதாதெனக் கை நீட்டாதீர்.
மெய்யாய்த் தீங்கு செய்யாதீர்.
மேன்மையாவீர், அய்யா நீர்!
உய்யாதிருப்பவர் வாங்குகிறார்;
உண்மை விட்டு நீங்குகிறார்.
அய்யா, அவர்போல் ஆளாதீர்;
அறிவற்றவராய் மாளாதீர்!
ஆமென்.

Image may contain: 2 people, including Senthil Kumaran, people smiling, hat

Like

Like
Love
Haha
Wow
Sad
Angry

Comment

Comments

தமிழ் வெள்ளம்!

தமிழ் வெள்ளம்!

இன்னும் தூய்மையாய் இருந்திருப்பின்,
என்னைப் போன்றோர் மகிழ்ந்திருப்பார்.
ஒன்றும் குறையாய்க் கூறாமல்,
பொன்னாய் மணியாய்ப் புகழ்ந்திருப்பார்.
என்றாலும் உன் மொழிப்பற்றால்,
வென்றாய் எங்கள் உள்ளத்தை.
நன்றாய்ப் புகழ்வேன் நானுந்தான்,
குன்றா தமிழ் வெள்ளத்தை!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: text

நேர்மையே வேண்டும்!

 

விண்முட்டும்  நேர்மையே வேண்டும்!
உண்பதற்காகக் கொல்பவருண்டு;
கொல்வதற்காகவும் உண்பவருண்டு.
கண்முன் நிற்பவர் யார் எவரென்று,
கலங்கும் நானும் அறியேன் இன்று.
பண்பட்ட உள்ளம் எங்கு உண்டு?
பார்ப்பவர் அளக்கிறார் பணத்தைக் கொண்டு.
விண்முட்டும் நேர்மையே நன்மை என்று,
விரும்பும் இறையே, தருவாய் இன்று!
-கெர்சோம் செல்லையா.

ஓன்று என்று பாரு!

ஓன்று என்று பாரு!

செந்தமிழ் வேறு, எந்தமிழ் வேறு;
சென்னைத் தமிழர் தமிழும் வேறு.
சொந்த ஊரில் மொழிதல் வேறு;
சொன்னால் புரிபவர் இங்கு யாரு?
வந்தவர் உரைக்கும் தமிழ்ச்சொல் வேறு;
வாய்மொழி எழுதின் அதுவும் வேறு.
இந்த நாட்களின் தமிழர் வேறு;
எனினும் ஓன்று, என்று பாரு!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 1 person, outdoor
LikeShow More Reactions

Comment

Comments

நேர்மை உமது தூணாகும்!

நேர்மை உமது தூணாகும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:12-13.
12 ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
13 அதற்கு அவன்: உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:
அரசு வழங்கும் சம்பளம் யாவும்,
ஆண்டவர் அருளும் பேறாகும்.
அதற்கு அடியில் வாங்கும் எதுவும்,
அடித்துச் செல்லும் ஆறாகும்.
உரசி நோக்கி உண்மை தேடின்,
உமக்கு நேர்மை தூணாகும்.
ஊழல் செய்து ஊரை வாங்கின்,
உயரிய வாழ்வும் கூனாகும்!
ஆமென்.

Image may contain: one or more people and text
LikeShow More Reactions

Comment

ஏற்ற வேளை

ஏற்ற வேளை இல்லையென்றாலும்,
ஏற்றுக்கொள்ளார் தொல்லையென்றாலும்,
வேற்றுக் கருத்தை நாமும் கேட்போம்.
வெறுப்பை விட்டு, உண்மை ஏற்போம்.

– கெர்சோம் செல்லையா.

ஊண் உடை நல்கும்!

ஆனவரைக்கும் ஊண் உடை நல்கும்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:
10 அப்பொழுது ஜனங்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
11 அவர்களுக்கு அவன் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:
மானம் மறைக்க உடுப்பவராயினும்,
மதிப்பிற்கென்று எடுப்பவராயினும்,
ஈனப் பிறவியாய் விடுப்பவராயினும்,
ஈருடை சேர்த்து அணிவாருண்டோ?
வானம் வரைக்கும் நம் புகழ் செல்லும்;
வையகத்தாரின் வாய்களும் சொல்லும்;
ஆனவரைக்கும் ஊண் உடை நல்கும்;
அதுவே அறமெனப் பணிவாருண்டோ?
ஆமென்.

Image may contain: one or more people

பேயே!

பேயே!

கணினியைக் காணும் கண்ணே,
கழனியைக் காண மறந்தாயே.

உணவினைத் தரும் இக்கையே,
ஓங்குக; இல்லை, இறந்தாயே.

பிணவறை நாற்றம் போன்றே,
பேசுதே மனிதர் வாயே.

பணந்தான் வாழ்க்கை என்றே,
பழகுவோர் நாட்டில் பேயே!

-கெர்சோம் செல்லையா.

No automatic alt text available.
Image may contain: one or more people, grass, outdoor and nature
LikeShow More Reactions

Comment

கனியற்ற மரம்!

Image may contain: outdoor and nature

கனியற்ற மரம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:9.

9 இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:
அடர்ந்து மரங்கள் அழகு தந்த
அருமைத் தோட்டம் கண்டேன்.
தொடர்ந்து அவைகள் புசிக்கத் தந்த,
தூய கனிகளும் உண்டேன்.
படர்ந்து வளர்ந்தும் பயனில்லாத
பாழ் மரமும் பார்த்தேன்.
விடர்ந்து வீணாய்ப் போன அதனை,

வெட்டி எரிக்கச் சேர்த்தேன்!

ஆமென்.