வேண்டுமென்று கேட்கிறார்!

வேண்டுமென்று கேட்கிறார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:32-35.

32  அனுப்பப்பட்டவர்கள் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டார்கள்.

33  கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதற்கு உடையவர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

34  அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி,

35  அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் வஸ்திரங்களை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.

கிறித்துவில் வாழ்வு:

வேண்டுமென்று கேட்கிறார் இயேசு;

விரும்பி உன்னை அளிப்பாயா?

ஆண்டுகொள்ளும் அரசே என்று,

அடிமை போன்று விளிப்பாயா?

கூண்டுகளிலே அடைப்பதுமுண்டு;

குழம்பி நீயும் ஒளிப்பாயா?

மாண்டுபோவார் மடிவது தடுத்து,

மனம் திருந்தக் களிப்பாயா? 

ஆமென்.

விடுதலை நாள் வாழ்த்து!

இந்திய விடுதலை நாள் வாழ்த்து!

அரசியல் விடுதலை வந்ததென்று,

அனைவரும் கூடிப் பாடுகிறோம்.

பொருளியல் விடுதலை வருமென்று,

புரண்டுழைத்துத் தேடுகிறோம்.

ஒருவொருக்கொருவர் இணையென்று,

ஊர் எண்ணாததால் வாடுகிறோம்.

திருவருள் தருவதே நலமென்று,

தெய்வீக விடுதலை நாடுகிறோம்.

-கெர்சோம் செல்லையா.

www.thetruthintamil.com

சிறிய கழுதை போதும்!

சிறிய கழுதை போதும்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:29-31.

29  அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சமீபித்தபோது, தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி:

30  உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள், அதிலே பிரவேசிக்கும்போது மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.

31  அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடத்தில் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

எதை விரும்பி எடுப்பீர் என்று 

இங்கொரு தேர்தல் நாம் வைத்தால்,

குதிரை போதும், கழுதை வேண்டாம்,

குதித்துச் சொல்வார் மக்களின்று.

பதை பதைக்கும் சண்டைகள் கண்டு,

போரா, அமைதியா எனக்கேட்டால்,

சிதை விரும்பார் சீக்கிரம் சொல்வார்,

சிறிய கழுதை போதுமென்று.

ஆமென்.

எனக்கு அரசன் யார்?

எனக்கு அரசன் யார்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:27-28.

27  அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்.

28  இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்தி நடந்துபோனார்.

கிறித்துவில் வாழ்வு:

நானே எனக்கு அரசன் என்று,

நம்பி நடப்பது குறையாகும்.

தானே செல்பவன்போல இன்று,

தன்னை அடைக்கும் சிறையாகும்.

வானே நமது வாழ்விற்கென்று,

வகுத்த வழிதான் முறையாகும்.

தேனே தோற்கும் இனிமை இன்று,

தெரியும் நல்லிடம் இறையாகும்!

ஆமென்.

வளர்க!

வளர்க!!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:25-26.

25  அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துராத்தல் இருக்கிறதே என்றார்கள்.

26  அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்குங் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:

பற்று வளர, பண்பும் வளரும்;

பற்றியவரின் வாழ்வும் மலரும்.

அற்று போகும் இடமும் நோக்கும்;

அழிவு என்றே பெயருண்டாக்கும்.

பெற்று வாழும் கிறித்தவர் காணும்;

பிசாசும் கூட அவர்முன் நாணும்.

கற்று நீவிர் பற்றில் தேறும்.

கடவுளுக்கு நன்றி கூறும்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

www.thetruthintamil.com

ஒன்றும் போதும்!

ஒன்றும் போதும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:20-24.

20  பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய ராத்தல், இதை ஒரு சீலையிலே வைத்திருந்தேன்.

21  நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான்.

22  அதற்கு அவன்: பொல்லாத ஊழியக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்தாயே,

23  பின்னை ஏன் நீ என் திரவியத்தைக் காசுக்கடையிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடே வரப்பற்றிக் கொள்வேனே என்று சொல்லி;

24  சமீபமாய் நிற்கிறவர்களை நோக்கி: அந்த ராத்தலை அவன் கையிலிருந்தெடுத்து, பத்துராத்தல் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:

ஓன்று மட்டும் உள்ளது என்று,

உறங்கும் இன்றைய கிறித்தவமே,

நன்று என்று நன்மைகள் செய்ய,

ஓன்றும் போதும் உன்னகமே.

கன்று ஈன்ற பசுக்கள்கூட,

கனிவாய்ப் பாலைக் கொடுக்கையிலே,

இன்று உந்தன் அன்பினாலே,

யாவும் வெல்வாய், தடுக்கலையே!

ஆமென்.

ஐந்து பத்தானது!

ஐந்து பத்தானது!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:18-19.

18  அப்படியே இரண்டாம் ஊழியக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் ஐந்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.

19  அவனையும் அவன் நோக்கி: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.

கிறித்துவில் வாழ்வு:

நைந்து நலிந்து நரங்கிய எனக்கு,

நம்பிக்கை ஈந்தது இறைமகனே.

ஐந்து இன்று ஆனது பத்து;

அவற்றைத் தந்தது இறைமகனே.

முந்து ஆண்டு முறைத்தோர் முன்பு,

மும்மழை பொழிவது இறைமகனே.

வந்து ஏற்று வணங்குவோருக்கு,

வாழ்வளிப்பதும் இறைமகனே!

ஆமென்.

பத்து!

பத்தை வைத்து பத்து!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:16-17.

16  அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் பத்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.

17  எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.

கிறித்துவில் வாழ்வு:

பத்தினைத் தந்ததும் உம் அருளே;

பயன்கள் வந்ததும் உம் அருளே.

அத்தனைச் சொத்தும் உம் அருளே;

அடியனால் அல்ல, உம் அருளே.

பித்தனாய்ப் பதுக்கேன் உம் பொருளே;

பிறர்க்கும் தேவை உம் பொருளே.

மொத்தமும் படைத்தேன் உம் பொருளே;

மும்மைத் தெய்வமாம் பரம்பொருளே!

ஆமென்.

கணக்கு!

தருவரிடத்து கணக்கைக் காட்டு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:15.

15  அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.  

கிறித்துவில் வாழ்வு:
வருமானத்தின் கணக்கைப் பார்த்து,
வறுமை என்று எழுதும் நாம்,
தருவாரிடத்து உண்மைக் கணக்கு,
தரும் நாள் வருவதை அறிவோமா?
பெருநாளன்று மகிழ்வது போன்று,
பிறர்க்கு உதவும் நம் கணக்கு,
ஒரு நாள் நம்மை நிமிரச் செய்யும்;
உண்மையில் உதவி புரிவோமா?
ஆமென்.
கெர்சோம் செல்லையா.
www.thetruthintamil.com

சொர்க்கம் நாடும் பண்டிதர்கள்!

‘சொர்க்கம்’ நாடும் ‘பண்டிதர்கள்’!


பக்கத்து வீட்டில் சாவு என்றால்,

பார்க்க மறுக்கும், ‘பண்டிதரே’,

இக்கட்டு நாளில் உதவிய இவரை,

எப்படி மறக்கும் மண்புதரே?

கக்கத்தில் இடுக்கிய காய் நட்டிருப்பின்,

கனிகள் பெருகிப் பயன் தருமே.

‘சொர்க்கத்தின்’ கதவைப் பூட்டுகிறீரே

சொற்படி வாரும், நலம் வருமே!


கெர்சோம் செல்லையா.

www.thetruthintamil.com