மொத்தப் பொருளும் தமக்கெனக் கண்டு,

மோதித் திரிகிற உலகிடம்,

பத்தில் ஒன்றை இறைமுன் கொண்டு,

படைக்கக் கேட்டது முதலுரை.

அத்துடன் நிறுத்தும் திருந்தார் கண்டு,

அவரை அழைக்க நல்லிடம்,

சத்துணவளிக்கும் காடெனக் கொண்டு,

சரிபாதி கேட்குது நடுவுரை!

(லூக்கா 3:1-18)

May be an image of text that says 'B The crowds asked, "What should we do?" John replied, "If you have two shirts, give one to the poor. If you have food, share it with those who are hungry." Luke 3:10-11 NLT B BIBLE PORTAL'

தேனூறு வாக்குகள் தெய்வம் தந்தும்,

திருந்தாதிருந்தார் அந்நாட்டார்.

வானூறு மேகம் பொழிந்து ஈந்தும்,

வறண்டிருந்தார் இறை வீட்டார்.

நானூறு ஆண்டுகள் மௌனம் காத்தும்,

நல்லிறையோ கை விட மாட்டார்.

பானூறு பாடி, அவர் புகழ் சாத்தும்,

பாலைக் காட்டில் உரைத்திட்டார்!

(லூக்கா 3:2)

May be an image of text that says 'AT THIS TIME A MESSAGE FROM GOD CAME TO JOHN SON OF ZECHARIAH, WHO WAS LIVING IN THE WILDERNESS. -LUKE 3:1-2 NLT- C) heartlight.org'

பதினெட்டாண்டு காலச் செய்தி,

படிக்கக் கிடைக்காததால்,

விதிகள் கற்க வேறு நாடுகள்

விரைந்தாரென்றும் எண்ணுவர்.

மதிநிறை இயேசு எங்கிருந்தாலும்,

மாபெரும் அறிவு வல்லுநர்.

இது கண்டறிய இறைநூல் கற்போம்;

ஏற்பாருள்ளிலும் பண்ணுவர்!

(லூக்கா 2).

May be an image of tree and text that says 'AND JESUS KEPT ON N GROWING INGH WISD M IN PHYSICAL STATURE IN FAVOR WITH GODHAND IN FAVOR WITH OTHERS Luke Luke2:5 2:52'

வந்து தேடிய பெற்றோர் உணரா,

வாய்மொழி சொன்னார், கேட்டீரோ?

தந்தையிறைக்குத் தகுவது செய்தல்,

தம் கடமை, விட மாட்டீரோ?

நொந்து பெற்ற தாய் உள் வைத்தாள்;

நினைவுபடுத்தினேன், ஏற்பீரோ?

இந்த வாழ்க்கை, இறைவனுக்காகும்;

எண்ணார் வாழார், பார்ப்பீரோ?

(லூக்கா 2)

No photo description available.

பன்னிரு ஆண்டுகள் முடிந்தது கண்டு,

படைத்தோன் கோவில் சென்றனர்.

நன்னிறை நல்கிய நன்மைக்கென்று,

நற்பலி செலுத்தி நின்றனர்.

பின்வருவாரென எண்ணிக் கொண்டு,

பெற்றோர் திரும்பி வந்தனர்.

என்னிறை மகனோ அறிஞரின் முன்பு,

எண்ணா அறிவைத் தந்தனர்!

(லூக்கா 2)

May be an image of 3 people

அரசனும் ஆட்சியும் மாறிய பின்னர்,

அவர்கள் திரும்பி வந்தார்கள்.

உரசலும் புரசலும் இல்லா அன்பர்,

என்ற நற்பெயர் தந்தார்கள்.

பருவமும் உருவமும் வளரும் முன்னர்,

பண்பை நிறைத்து ஈந்தார்கள்;

ஒருவரும் அடையா உயர்ந்த அறிவில்,

ஓரிறை கண்டு மீந்தார்கள்!

(லூக்கா 2)

No photo description available.

யாரோ செய்கிற தவற்றால் இன்று,

எத்தனைபேர் உயிர் துறக்கிறார்.

போரோ, கொலையோ அமைதி தராது,

புரிந்தவர் இவற்றை வெறுக்கிறார்.

ஏரோ தரசன் படை விடு முன்பு,

இறைமகன் எகிப்து செல்கிறார்.

நாராய்க் கிழியும் நிலையிலும் கூட,

நம்பி நடப்பவர் வெல்கிறார்!

(மத்தேயு 2)

May be an image of York Minster

அறிஞர் திரும்பி வராதது கண்டு,

அரசன் வெறியில் துடிக்கிறான். 

சிறுவர் பலரில்  ஐயம் கொண்டு, 

சினத்தில் கொன்று முடிக்கிறான். 

வறிஞர் என்பார் அறிவிலும் உண்டு; 

வாழ நினைப்போன் படிக்கிறான்.

புரிவாய் நண்பா, புனிதத் தொண்டு;

புரியா ஏரொது வெடிக்கிறான்!

(மத்தேயு 2).

விட்டிடு கொடுமை!

விட்டிடு கொடுமை!

ஊரைச் சுற்றிப் பார்க்கச் சென்றார்;

ஒளித்திருந்து வெறியர் கொன்றார்.

யாரைக் காக்க இவரைக் கொன்றார்?

இல்லை நற்பதில், தராது சென்றார்.

போரைத் தவிர்ப்பீர், பேசிட வாரீர். 

புரிதல்  பெற்று, இணையப் பாரீர்.

நீரை வடிக்கும்  குடும்பமும் பாரீர்.

நினைந்து, திருந்தி, வாழ, வாரீர்!

-கெர்சோம் செல்லையா. 

வந்தவர் எத்தனை பேரென அறியோம்;

வணங்கி, பொற்பொருள் தருகிறார்.

தந்தவர் அரண்மனை செல்லாவண்ணம்,

தடுக்கப்பட்டு, விடை பெறுகிறார்.

முந்தையர் கொடுத்த பரிசுகள் போன்று,

முழுமையாக நமைத் தருவோம்.

இந்தப் படைப்பின் விளைச்சல் பெருகும்;

இனிய புதுவழிப் பேறுறுவோம்!

(மத்தேயு 2)

May be an image of 2 people