மற்றொரு அடியார் சிமியன் பேதுரு,

மறுதலிப்பாரென இயேசுரைக்க,

ஊற்றவர் யாவரும் கை விட்டாலும்,

உயிர் தருவேனெனெ முழங்கினார்.

சற்று நம் வாழ்வை நாமும் பார்த்தால்,

சறுக்கி அவர் போல் வீழ்கிறோம்.

பற்றுறுதி வெறும் சொற்பேச்சல்ல;

பண்பிருப்பவரே வழங்குவார்!

(லூக்கா 22:31-34).