உடன்படி முடித்த ஒருசில நொடியில்,

உயர்ந்தோன் யாரென வாதிட்டார்.

கடன் நெறி அறியா அடியர் அன்றும்.

கருத்தை இழந்து மோதிட்டார்.

அடிமையின் வடிவாய் ஆண்டவர் தாழ்ந்து,

அடியரின் கால்கள் கழுவிட்டார்.

பிடிபடா வாழ்வில் பெரியவர் யாரோ?

பிறரிடம் அன்பில் தழுவிட்டார்!

(லூக்கா  22:24-30 & யோவான் 13: 1-20)