விடுதலை நாளை விழாவாய் எடுத்து,
விருந்து உண்கிற யூதரைப்போல்,
அடியவரோடு ஆண்டவர் அமர்ந்து,
அந்த இரவில் உணவுண்டார்.
கெடுதலை நினைத்த யூதாசிருந்தும்,
கிறித்து பகிர்ந்து கொடுத்ததுபோல்,
மடிகிற மாந்தர் உடன் இருந்தாலும்,
மைந்தனை எண்ணி உண்போமா?
(லூக்கா 22:1-23)