விடுதலை நாளை விழாவாய் எடுத்து,

விருந்து உண்கிற யூதரைப்போல்,

அடியவரோடு ஆண்டவர் அமர்ந்து, 

அந்த இரவில் உணவுண்டார்.

கெடுதலை நினைத்த யூதாசிருந்தும்,

கிறித்து பகிர்ந்து கொடுத்ததுபோல்,

மடிகிற மாந்தர் உடன் இருந்தாலும்,

மைந்தனை எண்ணி உண்போமா?

(லூக்கா 22:1-23)