கல்லை, தெய்வம் என்பார் நெஞ்சம்,
கல்லாய்ப் போகையில் அழுகிறோம்.
தொல்லை விற்று, தொல்லை வாங்கும்,
துயரம் தீர்க்கவும் எழுகிறோம்.
சொல்லை, தெய்வம் என்பார் வஞ்சம்,
துடிக்க வைக்கையில் விழுகிறோம்.
எல்லை இல்லா இறைவனின் திட்டம்;
இச்சிலுவை முன் தொழுகிறோம்!
(யோவான் 11: 45-57)