கல்லை, தெய்வம் என்பார் நெஞ்சம்,

கல்லாய்ப் போகையில் அழுகிறோம்.

தொல்லை விற்று, தொல்லை வாங்கும்,

துயரம் தீர்க்கவும் எழுகிறோம்.

சொல்லை, தெய்வம் என்பார் வஞ்சம்,

துடிக்க வைக்கையில் விழுகிறோம்.

எல்லை இல்லா இறைவனின் திட்டம்;

இச்சிலுவை முன் தொழுகிறோம்!

(யோவான் 11: 45-57)