இன்னும் பற்பல உவமைகள் கண்டேன்.

இறையரசு ஒரு முத்தெனக் கண்டேன்.

முன்னோர் காத்த புதையலைக் கண்டேன்.

முழுதும் கொணரும் வலையும் கண்டேன்.

என்னுள் வளர்ந்திடும் புளியும் கண்டேன்.

எழுகிற மா மரம் வெளியிலும் கண்டேன்.

சொன்னால் புரிகிற எளிமையும் கண்டேன்.

சொல்லும் இயேசுவில் தெளிவே கண்டேன்!

(மத்தேயு 13: 1-52)