இன்னொரு பண்பு பொறுமையாகும்;
இயேசுவின் வாழ்வே சான்று ஆகும்.
முன்னொரு நாளில் யோபுவில் கண்டோம்;
முழுமை காண, இயேசுவேயென்போம்.
என்னிலும் நம்மிலும் வருமா பொறுமை?
இல்லா இடத்தில் யாவுமே வறுமை.
நன்னெறி என்பது உரைப்பதில் இல்லை;
நாம் நடப்போம், அவரே எல்லை!
(லூக்கா 4:14-44)