இன்னொரு பண்பு பொறுமையாகும்;

இயேசுவின் வாழ்வே சான்று ஆகும். 

முன்னொரு நாளில் யோபுவில் கண்டோம்;

முழுமை காண, இயேசுவேயென்போம்.

என்னிலும் நம்மிலும் வருமா பொறுமை?

இல்லா இடத்தில் யாவுமே வறுமை. 

நன்னெறி என்பது உரைப்பதில் இல்லை;

நாம் நடப்போம், அவரே எல்லை!

(லூக்கா 4:14-44)