எழுந்து வந்த இறைமகன் காணும்,

ஏங்கும் காட்சி என்னவெனில்,

விழுந்து தூங்கி வழிந்த அடியர்,

விவரம் இன்றி இருந்ததுதான்.

அழுந்து நிலையில் உடலும் கூனும்,

ஆவி நடத்தா நம் வாழ்வில்,

கொழுந்து எரிய எண்ணெய் தேவை;

கொட்டும், நம் திருந்தலில்தான்!

(மத்தேயு: 26:40-44)