வேண்டிடும் காட்சி காணுவதோடு,
வேண்டற் பொருள் கண்டிடுவோம்.
ஆண்டவர் இயேசு கேட்டதுபோன்று,
அவர் விருப்புள் அண்டிடுவோம்.
தூண்டிடும் ஆயிரம் இச்சையடக்கி,
துன்பக் குவளையும் ஏந்திடுவோம்.
தாண்டிடும் காலம் வெகு விரைவில்;
தலைவன் அவருடன் நீந்திடுவோம்!
(லூக்கா 22:41-42).