வேண்டலின் மாதிரி கற்றுத் தந்து, 

விளிக்கும் கிறித்து உரைத்தபடி,

ஆண்டிட நம்மை இறையிடம் ஈந்து,

அவர் விருப்பு செய்வோமா?

மாண்டிடும் மக்கள் பெருந்திரள் கண்டு,

மடியு முன் உறவை மீட்பதற்கு,

நீண்ட நெடும்பணி நமக்கு உண்டு;

நிறைவுற அன்பு பெய்வோமா?

(மத்தேயு 26:36-44).