மற்றவர் உறங்கச் செல்லும் நேரம்,

மன்றாடுகிற இயேசுவைப் பார்.

உற்றவர் மூவர் உடன் சென்றாலும்,

உறங்கி விழுகிற காட்சியும் பார்.

கற்றவர் என்கிற கண்ணுடை நாமும்,

கனவில் நாளைக் கழிப்பது பார். 

கொற்றவர் இயேசு சொற்படி வேண்டு;

குறை இல்லாத மாட்சியும் பார்!

(மாற்கு 14:32-40).