கேட்டின் மகனாம் யூதசு அன்று,

கெட்டிட காசு பெற்றது போல், 

ஏட்டுக் கல்வியைக் கற்றவர் இன்று,

இயேசுவை நாட்டில் விற்கிறார்.

தீட்டின் தன்மை நன்கு தெரிந்தும்,

திருந்தா திருப்பணி ஊழியரால்,

கூட்டே வேண்டாமென்று பலரும்,

கிறித்துவுள் வராது நிற்கிறார்!

(மத்தேயு 26: 14-25)