கழுவித் துடைக்கும் கடவுளின் மைந்தன்,
கருத்தை உணர்த்த மொழிகிறார்.
புழுதிக்கொத்த நம் புவி வாழ்வை,
புனிதம் ஆக்கிடப் பொழிகிறார்.
தொழுகைக்குரிய அவரது அன்பை,
தூயரும் தொடர அழைக்கிறார்.
எழுவாய் மனிதா, இயேசு வழி பார்;
ஏற்பார் வாழ்வில் தழைக்கிறார்!
(யோவான் 13:31-35)