கழுவித் துடைக்கும் கடவுளின் மைந்தன்,

கருத்தை உணர்த்த மொழிகிறார்.

புழுதிக்கொத்த நம் புவி வாழ்வை,

புனிதம் ஆக்கிடப் பொழிகிறார்.

தொழுகைக்குரிய அவரது அன்பை, 

தூயரும் தொடர அழைக்கிறார்.

எழுவாய் மனிதா, இயேசு வழி பார்;

ஏற்பார் வாழ்வில் தழைக்கிறார்!

(யோவான் 13:31-35)