தாழ்மை வடிவில் வந்த மைந்தன், 

தம் அடியாரின் முன் மாதிரி.

வாழ்வின் முடிவில் நுழையும் மனிதன்,

வளர்த்தெடுப்பின் நன் மாதிரி.

காழ்ப்புணர்வோடு கட்டி முழங்கும்,

கதைகள் யாவும் துற் செய்தி.

ஏழ்மை எனினும், இயேசு வழங்கும்,

இந்த அன்பே நற் செய்தி! 

(யோவான் 13:13-17).