இறுதி விருந்தால் இணைக்கும் வழியை,

இயேசு உரைப்பது கேட்டீரா?

உறுதி செய்யும் உடன்படி மொழியை, 

உள்ளில் புதிதாய் ஏற்றீரா?

திறுதி செய்யவே பலியாய் மடியும், 

தெய்வ உடலை உண்டீரா?

குருதி ஆறும் சாறென வடியும், 

கிறித்து அன்பைக் கண்டீரா?

(மத்தேயு 26:17-29)