மானிடனாக வாழ்ந்திட்ட நாளில்,

மைந்தனும் அறியா அந்நாளை.

தானறிந்ததுபோல் ஒருவர் கூறின்,

தாங்கி அவரைச் சுமக்காதீர்.

ஏனிந்த பொய்கள்? ஏய்க்கும் மக்கள்?

என்கிற அறிவுதனைப் பெற்று,

வானின் மைந்தன் வருகிற வரையில்,

வழி தவறா விழி இமைக்காதீர்!

(மத்தேயு 24).