ஆளும் ஆண்டவர் ஆண்டிட வருவார்;

ஆயத்தமாகிட நாம் அறிவோம்.

வாழும் புனிதரும் எடுக்கப்படுவார்;

வருவது என்றென நாம் அறியோம்.

நாளும் அறியோம், நாழிகை அறியோம்;

நம்பும் வாக்கையே நாம் அறிவோம்.

மாளும் மனிதரை மீட்க உழைப்போம்;

மறுப்பவராயின், நாம் அறியோம்!

(மாற்கு 13)