கோயிலில் நுழைந்த கிறித்துவின் கண்கள் 

கொடியரின் செயலால் வருந்தினவே.

வாயிலைக் காக்கும் காவலர் போன்று, 

வழங்கிய கசையடி திருத்திடவே.

ஆயிரமாய் இன்று பிரிந்து கிடைக்கும், 

அவைகளின் நிலையும் தெரிந்ததுவே.

பாயிரம் பாடி இறையைக் கேட்போம்; 

பழித்திட அன்று, விழி திறந்திடவே!

(மத்தேயு 21:12-17)