கோயிலில் நுழைந்த கிறித்துவின் கண்கள்
கொடியரின் செயலால் வருந்தினவே.
வாயிலைக் காக்கும் காவலர் போன்று,
வழங்கிய கசையடி திருத்திடவே.
ஆயிரமாய் இன்று பிரிந்து கிடைக்கும்,
அவைகளின் நிலையும் தெரிந்ததுவே.
பாயிரம் பாடி இறையைக் கேட்போம்;
பழித்திட அன்று, விழி திறந்திடவே!
(மத்தேயு 21:12-17)