பசுமை இலைகள் மேல் வரு முன்பு,

பழங்கள் கொடுப்பது அத்தி மரம்.

புசிக்க ஒன்று கிடைக்குமோ என்று,

போனார் ஆண்டவர் பசி நேரம்.

அசையும் இலைகள் அடியில் சென்று,

ஆண்டவர் கேட்டார் கனி எங்கே?

இசைபட வாழக் கொடுத்தல் நன்று.

ஏய்த்தவர் பட்டார், பார்  அங்கே!

(மாற்கு 11:11-26)

கோயிலில் நுழைந்த கிறித்துவின் கண்கள் 

கொடியரின் செயலால் வருந்தினவே.

வாயிலைக் காக்கும் காவலர் போன்று, 

வழங்கிய கசையடி திருத்திடவே.

ஆயிரமாய் இன்று பிரிந்து கிடைக்கும், 

அவைகளின் நிலையும் தெரிந்ததுவே.

பாயிரம் பாடி இறையைக் கேட்போம்; 

பழித்திட அன்று, விழி திறந்திடவே!

(மத்தேயு 21:12-17)