தம்மடியார்கள் தம் நிலை உணர,
தவறா இயேசு எச்சரித்தார்.
மும்முறை தந்த முதிர்ந்த வாக்கை,
முடிவில் நமக்கும் அச்சடித்தார்.
இம்மறை நூலைக் கல்லாதவர்தான்,
ஏற்படும் ஐயத்தில் நச்சரிப்பார்.
நம்மிடமுள்ள திருமறை ஆய்வோம்;
நன்மையின் இயேசு மெச்சிடுவார்!
(மத்தேயு 16:21; 17:22-23 & 20;17-19;
மாற்கு 8:31; 9:30-32 & 10:33-34;
லூக்கா 9:21-22; 9:44 & 18:31-34)